இழப்பதற்கு என்ன இருக்கிறது?
பொருளாதாரமும் உறவுகளும் அல்லது சொத்து சுகங்களும் உங்களுக்கு இழப்பதற்கான ஒரு விஷயமாக இருந்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள், எந்த நேரமும் அந்த விஷயங்களைப் பன்மடங்காக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
பொருளாதாரமும் உறவுகளும் அல்லது சொத்து சுகங்களும் உங்களுக்கு இழப்பதற்கான ஒரு விஷயமாக இருந்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள், எந்த நேரமும் அந்த விஷயங்களைப் பன்மடங்காக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
உலகில் எங்கு போர் நடந்தாலும் சிரியாவோ உக்ரைனோ ஈழமோ அந்த யுத்தத்திற்குச் சமபந்தமேயில்லாமல் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பதுதானே வரலாறு. இலங்கையில் நடந்த இனப் போரின் விளைவால், 24 சதவீதக் குடும்பங்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக இருக்கின்றன. வடக்கு கிழக்கில் மட்டும், 89,000 பெண்கள் தங்கள் கணவரை இழந்து ஒற்றைப் பெண்களாகக் குடும்பத்தைச் சுமக்கின்றனர்.
இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற குரல்கள் வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஆசிரியர்களின் குரல்களில் இந்தக் கழிப்பறைப் பிரச்னை மிக முக்கியமான பதிலாக இருக்கிறது.
மனநல மருத்துவர்கள் ‘பெண்ணொடுக்கம்’ என்ற பாரம்பரிய மரபிலிருந்து வெளியேறி, ‘பாலின சமத்துவம்’ என்ற அறிவியல் பாதையில் பகுத்தறிந்து பயணித்து மக்களின் உளவியல் நலத்தைப் பேண வழிவகை செய்ய வேண்டும்.
உலகில் நான்கில் ஒருவருக்கு சுத்தமான நீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு 20 விநாடிக்கும் சுத்தமில்லாத தண்ணீரால் ஒரு குழந்தை இறக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் டன் குப்பையைத் தண்ணீரில் கொட்டுகிறோம். உலக அளவில் ஆண்டுக்கு 35 லட்சம் பேர் தண்ணீர் தொடர்பான நோய்களால் இறக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாருக்கு நடனம் பிடிக்கிறதோ, அவர்கள்தானே நடனம் கற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக அவருடைய குழந்தையைக் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்? அவருக்குக் கால்கள் நன்றாகவே இருக்கின்றன. வயது ஒரு தடையே அல்ல. பொதுவாக நம் கடந்துபோன கனவுகளை, இப்படித்தான் குழந்தைகளிடம் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.
காலம் சுழன்றது. காலம் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு. தங்க முட்டைக்கு ஆசைப்படும் பேராசைக்காரனாக இயற்கைக்கு எதிராக விலங்கினம் வளர்வதற்கும் பெருகுவதற்கும் இடம் கொடுக்காமல் மனிதன் தொடர்ச்சியாக முத்துகளை அறுவடை செய்து குவிக்க, இறுதி விளைவாக இயற்கை தன் வளத்தை நிறுத்திக்கொண்டது. அள்ளிக்கொடுத்த முத்துக்குளித்தல் தொழில் முடிவுக்குவர, அதன் காரணமாகவே உருவாக்கப்பட்ட மாளிகை கேட்பாரற்று போயிற்று.
தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.
நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.
முதன்முதலில் இலங்கைத் தமிழ் நமக்கு வானொலி வழியாகவே பரிச்சயமானது. இலங்கை அறிவிப்பாளர்களின் குரலுக்கும் தமிழுக்கும் மனதைப் பறிகொடுத்து பித்தாய் அலைந்தார்கள். தொலைக்காட்சிகளும் தமிழ்த் திரைப்படங்களும் நாமறிந்த இலங்கைத் தமிழின் வட்டத்தைச் சற்றே பெரிதாக்கின. யூ டியூப் காணொளிகளால் மேலும் சற்று அதிகப்படியாக அறிந்துகொண்டோம்.