UNLEASH THE UNTOLD

Tag: Chitra Rangarajan

பிஷ்னாய் சுற்றுச்சூழல் போராளிகள்!

அமிர்தா தேவி மரத்தைக் காப்பாற்ற, அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கட்டுக்கடங்காத மனிதர்கள் மரத்தை வெட்டுவதற்காக அவரது உடலைத் துண்டித்தனர். அவரது மூன்று மகள்கள், தங்கள் தாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, மரங்களைக் கட்டிப்பிடித்து அதே முடிவைச் சந்தித்தனர்.

மரணத்துக்கும் அஞ்சாத டஹோமி பெண்கள்

டஹோமி ராஜ்ஜியம் அடிமை வர்த்தகத்தின் மூலம் அதன் செல்வத்தின் பெரும் பகுதியைக் குவித்தது. அதன் அண்டை மாகாணங்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. டஹோமி அமேசான்களால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

தாய்வழி வந்த தங்கங்கள்

“பூமியில் இருந்துதான் நீராவிகள் பிறந்து மேகங்களாக எழுந்து மழையாக விழுகின்றன, அவை மீண்டும் பூமிக்கு வருகின்றன. எல்லா விலங்குகளின் குட்டிகளும் பசி அல்லது ஆபத்தில் இருக்கும்போது அழுது, தங்கள் தாய்களிடமே ஓடுகின்றன. எனவே, விதை எங்கிருந்து வந்தாலும், குழந்தைகள் அவளுக்கு உரிமையானவர்கள். குழந்தைகள் அவளுடைய பெயர், மரபு, குலத்தை மரபுரிமையாகப் பெறுவது அவளது உரிமை. அவளுக்கு நாம் அளிக்கும் பெருமை” என்பது காசி பழங்குடி மக்களின் உயரிய கோட்பாடு.

செயென் வீர மங்கைகள் !

எவ்வளவு துணிச்சலான வீரர்களிருந்தாலும் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இருந்தாலும் ஒரு தேசம் போரில் எப்போது வீழும் தெரியுமா? அந்தத் தேசத்துப் பெண்களின் இதயங்கள் நிலத்தின் மேல் விழும்போதுதான்!

வீரம் மிகுந்த ஹேமர் பெண்கள்

இத்தகைய வலியை அனுபவித்ததால், எதிர்காலத்தில் அவர்களை அந்த ஆண்கள் பாதுகாக்க இந்த நிகழ்வு ஒரு காரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஹேமர் பழங்குடியினர் பெரும்பாலும் போர்வீரர்களின் கலாச்சாரம் என்பதால், பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்ட பிறகு வலியைக் காட்ட மறுக்கின்றனர். மாறாக, பெண்கள் தங்கள் வடுக்கள் குறித்துப் பெருமிதம் கொள்கிறார்கள்.

<strong>இஸ்ரேலின் நெகேவ் பெடோயின் பெண்கள்</strong>

மீள்குடியேற்ற காலம் 1960களின் பிற்பகுதியிலிருந்து இன்று வரை பெடோயின் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததிலிருந்து பெடோயின் சமூகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பாலினங்களுக்கிடையேயான இடைவெளி, பாரம்பரியத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையிலான மோதல்களின் தோற்றம் இதில் அடங்கும். நாடோடி காலத்தில் வளர்ந்த மூத்த பெண்கள் தங்கள் பாரம்பரியப் பாத்திரங்களை இழந்தனர்.

மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் அசத்தும் ஹன்ஸா பெண்கள்!

நீண்ட ஆயுளும் அழகும் மட்டுமே ஹன்சாக்களின் பண்புகள் அல்ல. அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மதிப்பது போல் தங்கள் மன ஆரோக்கியத்தையும் மதிக்கின்றனர். குறைந்தபட்சம் 95 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். லட்சக்கணக்கில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படும் ஒரு நாட்டில், எல்லோருக்கும் கல்வியை வழங்கும் ஹன்சா பள்ளத்தாக்கை, ‘கல்வியின் சோலை’ என்று அழைப்பதில் எந்த ஐயமும் இல்லை.

பறை தேவதைகள்!

உலகில் வேறெங்குமில்லாத வனுவாட்டுவின் தண்ணீர் பறை இசை, மனதை மயக்கும் ஒலி மற்றும் காட்சி அனுபவம். பாடல்கள் நீரின் மேற்பரப்புக்கு ஏற்ப கைகளால் நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு இயக்கங்களின் தொகுப்பு. நீரைத் தெறித்தல், அறைதல், சுழற்றுதல், கடைதல் என்று பல உத்திகளைக் கையாண்டு இசையை எழுப்புகிறார்கள்.

<strong>வேயு புத்ரிகள்</strong>

பெண் நெசவாளர்கள் தங்களது கதைசொல்லலில் கவனமாகவும் துல்லியமாகவும் இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் பைகளை நெசவு செய்யும்போது முழு நாட்களும் வேலை செய்கிறார்கள். மேலும் ஒரு பையை முடிக்க ஒரு மாதம் வரை ஆகலாம். நெசவு தொழில் வேயு மக்களுக்கு நிதி உதவிக்கான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது.

'ஒட்டகச்சிவிங்கி' பெண்கள்

படவுங் (கயான் லாவி) கயான் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு வயதிலிருந்தே கழுத்து வளையச் சுருள்களை அணியத் தொடங்குகிறார்கள். சுருளின் நீளம் படிப்படியாக இருபது திருப்பங்களாக அதிகரிக்கப்படுகிறது. வளையங்களின் மொத்த எடை ஐந்து கிலோ இருக்கும். சுருள்களின் எடை இறுதியில் கழுத்துப்பட்டை எலும்பின் மீது போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் அவை நீண்ட கழுத்து போன்ற தோற்றத்தை உருவாக்கும்.