UNLEASH THE UNTOLD

Tag: Education

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

வெண்ணான்சியா எனும் தேவதை

ஓங்கும் கைகளைத் தாக்கும் முன்பு தடுக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். பெண் என்பவள் நெருப்பு போல் வாழ வேண்டும் என்று புரிய வைத்தார். தலை குனிந்து நடந்த எங்களைத் தலை நிமிர்ந்து நடக்க வைத்தார்.

கற்றுக் கொடுக்கும் செயலிகள்

மனித மூளை அபார ஆற்றல் உடையது. மூளையின் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றொரு கருத்தும் உண்டு. நினைவுத்திறன், கணிதம், மொழி என தினமும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் இன்னும் கூர்மையாக வேலை செய்யும் என்கிறார்கள் சிலர். உடற்பயிற்சி போல மூளைக்கும் பயிற்சி கொடுக்கலாம்.

‘லட்சியம்’ கெட்ட வார்த்தையா?

திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?

டிராபி வொய்ஃப்

ஒரு பதக்கம் என்பது பார்க்க அழகாக, பெருமையாக மற்றவர்கள் கண்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நம் வீட்டு ஷோ கேஷில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கத்திற்கு உயிர் இல்லை. உணர்வில்லை. ஆனால், பெண்களுக்கு உயிரும் உணர்வும் இருக்கிறதே.

கல்வியா… செல்வமா… உயிரா...?

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும் சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும் ஆங்கிலம் வணிகத் துறையிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள் தற்போதுவரை பின்பற்றப்படுவதால், பிரிட்டிஷ் ஆங்கிலம் இலங்கைத் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் ஆங்கில உச்சரிப்பு மலையாளிகள் போலவே இருக்கிறது.

ஒப்பிடலாமா?

நாமெல்லாம் பொருளாதாரத்துல யாரையும் சார்ந்திருக்காம இருக்கோம்ங்கிறதும் நமக்கான விசயங்களை நாம் செஞ்சுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கறதும் நம்மிடம் இருக்கும் நேர்மறை விசயங்கள். இது போல பெண்கள் தன் விருப்பங்கள் சார்ந்த வெளியை உருவாக்கிக்கணும். பல பெண்களுக்கு நம்மைப் போல இருக்கணும்னு ஆசை இருக்கு. இதெல்லாம் இந்தச் சமூகத்தில் இயல்பாக்கப்படணும்.

குழந்தைகள் ஆளுமைகளாக வழிகாட்டுவோம்!

சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்.

பெண் குழந்தைகளின் உண்மை நிலை என்ன ?

வகுப்பறைகளிலும் இந்தச் சமூகத்திலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் பாங்கு குறித்து நாம் வெளிப்படையாகப் பேசுவது ஏன் தவிர்க்கப்படுகிறது? இது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளின் நீட்சிதான் பெண் குழந்தைகளது அடுத்தடுத்த நகர்வுகள், திருமண உறவில் வன்முறை, குடும்ப வன்முறை என அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.

பெண்கல்விக்குப் பேராபத்து கழிப்பறை பிரச்னைகளே...

இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற குரல்கள் வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஆசிரியர்களின் குரல்களில் இந்தக் கழிப்பறைப் பிரச்னை மிக முக்கியமான பதிலாக இருக்கிறது.