UNLEASH THE UNTOLD

Tag: self love

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!

எதையும் தள்ளிப் போடுபவரா நீங்கள் ?

எதையுமே செய்யப் பிடிக்காதவர்கள்தாம் சோம்பேறிகள். ஆனால், இன்னொரு வகை மக்கள் பிடித்த வேலையை விரைவாகச் செய்வார்கள், பிடிக்காததை, ஏதோ ஒரு வகையில் மனதுக்கு ஒவ்வாததை அல்லது தனக்குத் தெரியாததைத் தள்ளிப் போடுவார்கள். அந்த நேரத்தின் மன நிலையும் வேலையைத் தள்ளிப்போட காரணமாகும். இதைத் தவிர தன் திறமையின் மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமாக எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவார்கள். இது நமது மனநிலை சம்பந்தபட்ட ஒரு சவால்.

வாங்க, சுய மதிப்பீடு செய்வோம்!

தன் மீது மதிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவர் உலகத்தை அநாயாசமாக கவர்கிறார். அவரிடம் அறிவு, அழகு, கல்வி, செல்வம், ஆற்றல் எல்லாம் நிறைந்திருக்க வேண்டுமென எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனாலும் நமக்கு அவரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். ஏன்?

நான் என்பது...

நமது கட்டுபாட்டில் உள்ள ஒன்றை மேம்படுத்த முயலுவதும், கட்டுபாட்டில் இல்லாத காரணிகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும் சுய நேசிப்பின் அடிப்படை.

அழகிய நான்...

எனதருமை தோழிகளே நன்றாகச் சாப்பிடுங்கள், நல்லதைச் சாப்பிடுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். எண்ணங்கள் அழகாகட்டும், உங்களின் முடிவுகளைச் சுயமாக எடுங்கள், அதற்கேற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிவுகளால் வரும் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளிருந்து மிளிர்வதை ஆனந்தமாக உணர்வீர்கள்.

‘வாழ்; வாழ விடு’

பொதுவாகக் கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்போது கீழே விட்டுவிடுவோமோ என்று பதற்றம் கொள்வோம். ஆனால், தினமும் மற்ற பொருள்களை எத்தனை முறை எடுக்கிறோம்; அப்படி எடுக்கும்போது எத்தனை முறை கீழே விட்டோம்? இப்படி யோசித்துப் பார்த்தால், கண்ணாடிப் பொருள்கள் மேல் நமக்கிருக்கும் பயம், போய்விடும்.

சுய கட்டுப்பாடே சுதந்திரம்!

என்றோ ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் நேர்மறையாகச் சிந்தித்துவிட்டு, எல்லா நாள்களும் நலமோடு இருப்பது என்பது இயலாது. சாப்பிடுவது, தூங்குவதுபோல அன்றாட செயல்களாக, உடற்பயிற்சிகளும் மனப் பயிற்சிகளும் இருக்க வேண்டும். அன்றன்றைக்கு உட்கொள்பவற்றை உட்கொண்டு, கழிப்பவற்றைக் கழிக்க வேண்டும். அதுவே ஆரோக்கிய வாழ்வு!

எல்லாம் பய மயம்!

மார்கஸ் அரேலியஸ் சொல்வார், ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லையா, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்கிற முதல் நிலை எண்ணத்தில் மட்டும் மனதை நிற்கச் செய்ய வேண்டும்; இப்படியே நலக்குறைவு அதிகமாகி, குழந்தை இறந்துவிடுமோ என எண்ணங்களின் அடுத்த நிலைக்குப் போகக் கூடாது. இது தேவையற்ற பயங்களிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்யும். நிகழ்வதின் உள்ளபடியேயான தன்மையை உணரச் செய்யும். வேண்டாத, விபரீத கற்பனைகளைக் கட்டுப்படுத்தும்.’

உங்களின் முதன்மையான உறவு எந்த உறவு?

உங்கள் வாழ்வில் அந்த நபர் நீங்கள்தான். அந்த முக்கியமான உறவு உங்களுக்கும் உங்களுக்குமான உறவுதான். ஏனென்றால் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர், உங்கள் வாழ்வில் நடந்தவை குறித்து அனைத்தும் அறிந்தவர் நீங்கள்தாம். இதுவரை ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அதிக நேரம் செலவிட்டதும் உங்களிடம்தான்.

கோபத்தை வெல்வது எப்படி?

இயல்பில் மனிதர்கள் எல்லாருமே அன்பிற்கு ஏங்குபவர்கள்; அன்பானவர்கள். ஆனால், அவர்களுக்குத் தமது வாழ்வில் கிடைத்த மற்றும் கிடைக்காததன் ஏக்கம் கோபம் தன்னிரக்கம் ஏமாற்றம் வெறுப்பு எல்லாமே எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தனது வாழ்வை மற்றவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்.