UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

பாவையர் திலகமதான பைங்கிளி ஃபாத்திமத்தைப் புகழ்ந்தே துதிப்போம்நற்றிரு மேனியர் நல்கதீஜா
புத்திரி ஃபாத்திமத்தைப் புகழ்வோம்.

தேசியவாதம் – இடதா, வலதா?

எதிர்பாராதவிதமாக, புலம்பெயர்ந்தவர்களுக்கு வரும் பாதுகாப்பின்மை உணர்வுக்குத் தீர்வே கிடையாது. உதாரணத்திற்கு, புலம் பெயந்த ஒருவரின் அடையாளங்களைப் பார்ப்போம். ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கிறார்; அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் தமிழ்; குடியுரிமை அடையாளம் இந்தியன். அதே நபர் கனடாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற பின் அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் இன்னமும் தமிழ்தான். ஆனால், அவரது குடியுரிமை கனடியன். எனவே, அடையாளம் எதுவாகவும் மாறலாம்; அதன் மூலம் ஒடுக்குமுறைகள் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் ஒடுக்குமுறை நிகழும்பட்சத்தில், சமூகநீதியின் வழியில் தீர்வு காண வேண்டும்.

என்றிவ்வாறும் வாழ்ந்தோம்

தொடக்கத்தில் இவ்வேறுபாடு பிரிவினையாக உருவெடுக்காமல், கொள்கை வேறுபாடு என்ற அளவிலேயே இருந்தது. எனினும் ஒரு கட்டத்தில் தமிழக முஸ்லிம்களிடையே சுன்னத் ஜமாஅத் , தவ்ஹீத் இயக்கம் என இரு பிரிவுகள் உருவாகிவிட்டன.

ஆடித் திரிதல் கண்டால் ஆவி தழுவுதடி

“ஆத்து மணலிலே சோறாக்கி அவரைக்காய்ப் பிஞ்சிலே கறிசமைச்சு
மின்வெட்டாம் பூச்சியில் விளக்கேத்தி
வேடிக்கை பாக்கலாம் சோடிப்பெண்ணே” என்ற எங்க வாப்புமாவின் சிரிப்பாணி வழியும் குரல்.



அடையாள அரசியல் – சாதகமா, பாதகமா?

அவரவர் பிரச்னைகளை அவரவரே போராடித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தால் சமூக மற்றம் நிகழவே நிகழாது. சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைக்க அனைவரும் அவரவர் அடையாளங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்து மக்களும் சமம்தான் என்கிற எண்ணத்தோடும் தோழமை உணர்வோடும் ஒன்று சேர்ந்து போராடுவதே தீர்வாகும். மனிதனாக ஒன்றிணைவோம் வாரீர்.

ஊரான ஊரில் பேரான பேர்கள்

ஆஷா பரி என்றொரு சாச்சி இருக்கிறார் ஊரில். ஆங்கில காட்பரி, பிளாக்பரி, ப்ளூபரி போல ஏரலில் எப்படி ஆஷாபரி என்று நினைக்க வேண்டாம். ஆயிஷா ஃபரீதாவைத்தான் ஆங்கிலேயராக்கி விட்டார்கள் ஏரலூரார்கள்.

ஓச்ச மாட்டுப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு

“இன்னா பாரு பொறவூரா பேத்தியே போறாளே”, என்று கீழத்தெருவிலிருந்து ஃபைரோஸ் லாத்தாவையும் சைபுன்னிஸாவையும் அவரவர் வீட்டினர் அனுப்பி வைக்க, அது அப்படியேத் தொடர்ந்து ஏரல் முஸ்லிம் பெண்களின் படிப்பு பெரிய பத்து எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி வரை என்று ஆனது.



பிள்ளை பெத்த வீடு

அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.

அடையாளத்தில் பெருமை இருக்கிறதா, இல்லையா?

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

உணர்வுகளின் எரிமலை - உச்சக்கட்டம் அடையாததால் ஏற்படும் பாதிப்புகள்

நிறைவான, முழுமையான உடலுறவு இல்லாத பட்சத்திலும், அல்லது பாலுறவே இல்லாமல் போகும்போதும் என்னென்ன உளவியல், உடலியல் பாதிப்புகள், உளவியல் சார்ந்த உடல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பேசலாம்.