UNLEASH THE UNTOLD

Tag: Movie

7. எழுத்தை ஆயுதமாக்கிய பெண்கள்

சினிமா எப்போதும் பெண்களைக் கோழைத்தனத்துடன் அழுதுவடிந்த முகமாகவே சித்தரிக்கிறது. எப்போதும் பெண்கள் ஆணின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறது. நாயகி பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம் நாயகன் காப்பாற்ற வேண்டும் என்பதெல்லாம் சினிமாவில் எழுதப்படாத விதிகள்.

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

மர்மயோகி (1951)

எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

பெண்களின் உலகைத் திரையில் காட்சிப்படுத்த விரும்பினேன் - கண்ணகி திரைப்பட இயக்குநர் நேர்காணல்

எல்லா ஆண்களும் தன் தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கடந்து செல்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிக்கதைகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று உணர்வுகளும் வலிகளும் கனவுகளும் உள்ளன. ஆனால், சினிமாக்களில் அவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பிரதிபலிப்பதாகப் பெரும்பாலான காட்சிகள் இல்லை. கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பதில்லை.

இதய கீதம்

நாட்டின் அமைச்சராக இருப்பவர் M G சக்கரபாணி. அவர், சகோதரர்கள் இருவரையும் முதலில் பிரிக்க வேண்டும்; பின் நாட்டைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைக்கிறார். இதனால், போர்க்களத்தில் இருந்து வரும் பிரதாபன் மற்றும் தாரா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஆலோசனை சொல்கிறார். குடும்பத்தில்  அனைவரும் ஏற்கின்றனர். தாரா ஒன்றும் சொல்ல முடியாமல் அழுகிறார். இவர்தான் உன் அண்ணி என சொல்லும்போது, ஜீவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

மந்திரி குமாரி

திருடும் பார்த்திபன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்கிற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன் பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். காமம் அங்கே கலையாகிறது. அதுபோல கொள்ளை அடிப்பதும் ஒரு கலைதான்!” என்கிறான்.

அபூர்வ சகோதரர்கள்

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

வேலைக்காரி

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

நல்லதம்பி 1949

ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.

ஞானசவுந்தரி (1948)

ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.