UNLEASH THE UNTOLD

Tag: Medhiniyin Devadhaigal

முக்காடுகளை ஆண்களுக்கு அணிவித்த துவாரெக் பெண்கள்!

துவாரெக் பெண்களின் வளமான இலக்கியப் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கதைகளைக் கொண்டு செல்வதற்கு வாய்வழி பாரம்பரியத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பாரம்பரியம் கவிதைகள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புதிர்கள் உள்ளிட்ட வளமான ஆதாரங்களில் இருந்து வருகிறது. திருமணங்கள், பிறப்புகள், பருவங்களின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய சமூக நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கவிதைகள் இயற்றுகிறார்கள்.

டோங்கிரியா வன தேவதைகள்!

டோங்ரியா பழங்குடி பெண்கள் வேதாந்தாவுக்கு எதிராக உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சாலைத் தடைகளை நடத்தினர். எக்காரணத்திற்கும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தங்கள் வனங்களைக் காக்க ஊக்கப்படுத்தியுள்ளது.

வேட்டையாடும் ‘ஆகா’ பெண்கள்!

ஒன்பது மாத கர்ப்பிணியான ஆகா பெண்கள் மரம் ஏறி வேட்டையாடுகிறார்கள். குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். சில தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு விலங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேட்டையாடுகிறார்கள். பெண்கள் வேட்டையாடலி நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பரிணாம, கலாச்சாரக் கோட்பாட்டு நோக்குநிலைகளால் கணிக்கப்படும் பெண் வேட்டைக்கான சூழல்களில் பெரும்பாலானவை ஆகாவின் இந்தக் குழுவில் நிகழ்ந்தன.

பெண்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம்!

மோசுவோ கலாச்சாரத்தில் உறவுகள் அனைத்தும் பரஸ்பர பாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அது மங்கும்போது, அவரவர் பாதையில் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் மொழியில் கணவன் அல்லது தந்தை என்கிற வார்த்தையே இல்லை. மோசோ பெண்களால் குழந்தைகளைப் பெற முடியாவிட்டால், அல்லது ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. முறைப்படி அவர்களின் தாய்வழி உறவினர் ஒருவரிடமிருந்தோ தொடர்பில்லாத மோசோ குடும்பத்திலிருந்தோ ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பார்கள். சீனர்கள் மோசோ பழங்குடியை ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

சுயம்வரப் பெண்ணரசிகள்!

சஹாராவின் வறண்ட பகுதிக்கு மழை கொண்டு வரும் வளத்தைக் கொண்டாடும் நோக்கத்துடன் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜெர்வோல் திருவிழாவில், வோடாபே ஆண் நாடோடிகள் ஒரு துணையை ஈர்க்கும் முயற்சியில் திணறும் வெயிலில் மணிக்கணக்கில் ஆடுகிறார்கள். இதற்காகத் தங்களை அழகு படுத்திக்கொள்ள பல மணி நேரம் செலவிடுகிறார்கள்.

துருவக் கலைமான் மேய்ப்பர்கள்

சாமி பழங்குடியினர் ‘அரை நாடோடிகள்’, அதாவது அவர்கள் ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. சாமி மேய்ப்பர்கள் பருவக் காலங்களில் தங்கள் துருவக் கலைமான்களுடன் இடம்பெயர்ந்து, குளிர்காலத்திற்காக மலைகளுக்குச் சென்று, கோடையில் சமூகத்துடன் திரும்பி வருகிறார்கள். பயணத்தில், சாமி மேய்ப்பர்கள் லாவ்வோ எனப்படும் பாரம்பரியக் கூடாரத்தில் முகாமிடுவார்கள்.

முர்சி பெண்களுக்கு வாய் ரொம்பவே நீளம்!

முர்சி பழங்குடியினப் பெண்கள், கீழ் உதட்டில் வைக்கப்படும் களிமண் தட்டுகளுக்குப் பிரபலமானவர்கள். ஒரு பெண் 14 வயதாக இருக்கும்போது, அவளுடைய நான்கு கீழ் பற்கள் அகற்றப்படுகின்றன. மேலும் அவள் 15 வயதை அடையும் போது, அவள் கீழ் உதடு கீறப்படுகிறது. உதட்டில் வைக்கப்படும் தட்டு என்பது ஒரு பெண் பருவத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது.

பிஷ்னாய் சுற்றுச்சூழல் போராளிகள்!

அமிர்தா தேவி மரத்தைக் காப்பாற்ற, அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கட்டுக்கடங்காத மனிதர்கள் மரத்தை வெட்டுவதற்காக அவரது உடலைத் துண்டித்தனர். அவரது மூன்று மகள்கள், தங்கள் தாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, மரங்களைக் கட்டிப்பிடித்து அதே முடிவைச் சந்தித்தனர்.

மரணத்துக்கும் அஞ்சாத டஹோமி பெண்கள்

டஹோமி ராஜ்ஜியம் அடிமை வர்த்தகத்தின் மூலம் அதன் செல்வத்தின் பெரும் பகுதியைக் குவித்தது. அதன் அண்டை மாகாணங்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. டஹோமி அமேசான்களால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

தாய்வழி வந்த தங்கங்கள்

“பூமியில் இருந்துதான் நீராவிகள் பிறந்து மேகங்களாக எழுந்து மழையாக விழுகின்றன, அவை மீண்டும் பூமிக்கு வருகின்றன. எல்லா விலங்குகளின் குட்டிகளும் பசி அல்லது ஆபத்தில் இருக்கும்போது அழுது, தங்கள் தாய்களிடமே ஓடுகின்றன. எனவே, விதை எங்கிருந்து வந்தாலும், குழந்தைகள் அவளுக்கு உரிமையானவர்கள். குழந்தைகள் அவளுடைய பெயர், மரபு, குலத்தை மரபுரிமையாகப் பெறுவது அவளது உரிமை. அவளுக்கு நாம் அளிக்கும் பெருமை” என்பது காசி பழங்குடி மக்களின் உயரிய கோட்பாடு.