UNLEASH THE UNTOLD

Tag: women issues

குர்தியும் பட்டியாலா பேண்ட்டும்

“சம்சாரி வீட்டில் வாக்கப்பட்டு மாடு, கண்ணு, காடு, கரைன்னு போறவளுக்குச் சீலதாண்டி அழகு. ஏழு வயசுல பேரன் இருக்காங்கறத மறந்துட்டு நைட்டி போடுறேன்னு கேக்குறயே? உனக்கு எம்புட்டு தைரியம்? அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க எல்லாம் பார்த்துச் சிரிக்கமாட்டாங்க? கோமாளி மாதிரி நைட்டிய மாட்டிகிட்டுத் திரியணும்னு கிறுக்குத்தனமா ஆசைப்படாதே’’ என நைட்டி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

‘ஓப்பன் டே’க்கு வருவாளா நிலா?

அம்மாக்கள் அனைவரும் வேலையில் இருக்க, அப்பாக்களின் தகவல்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் பொறியியல், முதுகலைப் பட்டங்கள் முடித்திருந்தார்கள். அறிவியல், கணிதம், தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தார்கள். ஆனால், வேலை என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் பெரும்பாலும் ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ என்று இருந்தது.

இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சிருக்கு...

இந்திய ஆண்களின் விருப்பத்திற்குத் தானே இன்றும் வீடுகளில் சமையல் செய்யப்படுகிறது. எத்தனை வீடுகளில் பெண்கள் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் பெண்கள் முதலில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? அப்படிப் பெண்கள் முதலில் சாப்பிடுவது பெருங்குற்றம் என்றுதானே அவளது மரபணுக்களில் போதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மனைவி அல்லது தாய் பரிமாறினால் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் குலத் திலகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தனக்குப் பின்னால் சாப்பிடுபவளுக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டு, ஏப்பம் விடும் ஆண்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உரிமை இருக்கும் போது சமைக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.

பெண்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.

வெண்பாவும் வேந்தனும்

”ஏய், மரியாதையா பேசுடா. பல்லைத் தட்டிடுவேன். உன் தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம் போ.” பாதி சாப்பிட்ட முறுகல் தோசைத் தட்டை வீசி எறிந்தாள்.

ஆணாதிக்க உலகில் பகடைக்காய்களாகும் நாதிராக்கள்

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ அல்லது மறுமணம் செய்து கொள்ள விரும்புவது அரிதாக இருக்கலாம், ஆனால், இது நடப்பதற்கு சாத்தியமான ஒன்றே. எத்தனையோ மனப்போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு தனக்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத விவாகரத்திலிருந்து நீங்கி, தன் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் நாதிராவின் நம்பிக்கைகளை மதத்தின் விசித்திரமான திருமணச் சட்டம் அப்படியே சுட்டுப் பொசுக்குகிறது.

லஞ்ச் டைம்

“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.

வியூகம்

“உங்க விருப்பம் அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். நான் தீர்மானிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நாங்க அங்கே குடிபோறோம். நீங்க இங்கதான்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இருந்துக்கோங்க, தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை’’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து போக, உறைந்து நின்றான்.

விவாகரத்தும் வியாக்கியானங்களும்

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

உங்கள் மாமாவுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள்தான் பக்குவமாக இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். திருமணமாகி விட்ட காரணத்தினாலேயே மனைவி மீது முழு ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்காதீர்கள். அவர் முதலில் தந்தைக்கு மகள். பின்புதான் உங்கள் மனைவி.

பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் தனியே சிரித்துப் பேசுவதைத் தவிருங்கள். அவர்கள் முன்பு மனைவியைத் தொட்டுப் பேசுவதோ கொஞ்சுவதோ குடும்ப ஆண்களுக்கு அழகில்லை.