UNLEASH THE UNTOLD

Tag: women issues

இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா?

ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல். இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம்…

ராமன் எத்தனை ராமனடி

Leaky Pipeline என்று ஒரு கருத்தாக்கம் உண்டு. பத்து அடி கொண்ட ஒரு குழாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இரண்டு அடிக்கு ஒருமுறை ஓர் ஓட்டை இருக்கிறது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அதற்குள் தண்ணீரை ஊற்றினால், இரண்டு அடிக்கு ஒருமுறை தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வரும், இல்லையா? அதிலும் குழாயின் இறுதிக்கு வந்துசேரும் நீர் மிகவும் குறைவாகத்தானே இருக்கும்? அறிவியல் துறையிலும் அதுதான் நடக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அறிவியலில் பள்ளிப் படிப்பு – இளங்கலை – முதுகலை – முனைவர் பட்டம் – வேலை என்று ஒவ்வொரு நிலையிலும் பெண்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பெண்ணுக்குப் பெண் எதிரியா?

ஊடகங்கள் அறத்தை இழக்காமல் அதன் கடமை உணர்ந்து நடக்க வேண்டும். சமஅளவு எண்ணிக்கையிலுள்ள சக உயிரான பெண்கள் மீது வன்மத்தை கட்டவிழ்த்துவிடுவது ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோலாது. வியாபாரம் மட்டும் ஊடகத்தின் அறமாகாது. பொதுச் சமூகத்தின் கொண்டாட்டத்தை, சிந்தனையை மாற்றுவதில் ஊடகத்தின் பங்கு  அலப்பறியது. பண்பாட்டு ரீதியான மாற்றங்களை முன்னெடுப்பதில் பண்பாட்டின் முக்கியக் கூறாக இருக்கக்கூடிய ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அரசியல் சீர்திருத்தத்தைக் காட்டிலும் முக்கியமானது சமூக சீர்திருத்தம் என்பதை வலியுறுத்தவே  அம்பேத்கர் அரசியல் சீர்திருத்தவாதியைக் காட்டிலும் வலிமையானவர் சமூக சீர்திருத்தவாதி என்கிறார்.

வெண்பாவும் பிரசன்னாவும்

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே பெஞ்சில் அமர்ந்து சாப்பிடலாம். நான் – மீட்டேரியன்ஸ் தரையில் தான் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது பள்ளியின் விதி.

பாதுகாப்பு?

யானை, குரங்கு, மாடு போன்ற மிருகங்களை அடக்கித் தன்வசப்படுத்தி வைத்திருப்பதைப் போல பெண்ணையும் வைத்திருக்கிறது இந்தச் சமூகம். காலையில் அடித்து உதைத்து வசைபாடிவிட்டுச் சென்ற கணவனுக்கு மாலையில் திரும்பி வந்ததும் அடிஉதை எல்லாவற்றையும் மறந்து இல்லறம் நடத்துவதற்குத்தானே பெண்களுக்குக் கற்பிக்கிறார்கள்.

பெண்களைப் பயமுறுத்தும் பூச்சாண்டிகள்

‘நம்மை நாம் பாதுகாத்துக் கொண்டதுபோல், அவர்களும் தங்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வார்கள்’ என்று கூறினாள். அது உண்மைதான், ‘ஆனால் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்பு கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளிடம் எப்படி மரியாதையுடனும், அவர்களும் நம்மைப்போல் சக மனிதர்கள், அவர்களை நம் வீட்டுப் பெண்களை எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்போமோ அதைப் போன்ற பாதுகாப்பான உணர்வுடன் வெளியுலகைக் காணும்படியும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்’ என்கிற அவள் வார்த்தைகள் தனிப்பட்ட கருத்து என்பதைவிட, சமூகக் கடமையாக மாறினால் இந்த நிஜ வாழ்க்கை பூச்சாண்டிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

சுதந்திரம் என்பது இதுதானா?

பெண்ணுக்கு என்று தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் இருக்கவே கூடாதா? அவளுக்கென்று நட்பு வட்டம் இருக்கக் கூடாதா? அவளின் அலைபேசியைக்கூட ஆராய்ச்சி செய்யும் ஆண்கள் இருக்கத்தானே செய்கின்றனர். “ஏன், பொண்டாட்டி மொபைல் புருஷன் பார்க்கக் கூடாதா?” என்று ஆதங்கம் வேறு வந்து தொற்றிக் கொள்கிறது ஆண்களுக்கு. மனைவியின் அலைபேசியில் அவளைச் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, அவள் தோழியரின் அல்லது பணியிடத்தின் ரகசியங்களும் ஒளிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்வதில்லை.

உச்சுக் கொட்டும் நேரத்துல உச்ச கட்டம் தொட்டவளே... அப்படியா?

திரைப்படக் காட்சிகள் கொடுக்கும் பொய்யான கற்பனைகளால் தூண்டப்பட்டு எதையோ எதிர்பார்த்துத் திருமண வாழ்வைத் தொடங்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதலிரவில் தொடங்கி எல்லா இரவுகளிலும் கிடைப்பதென்னவோ பெரிய ‘பல்பு’தான்!

வருண், உனக்கு ஆட்டிட்யூட் ப்ராப்ளம்!

வருணுக்குத் தொண்டை அடைத்தது. எப்போதும் இப்படித்தான். கஷ்டப்பட்டு ஒரு வேலைக்கான அத்தனை தயாரிப்புகளையும் செய்து முடிப்பான். பெயர் தட்டிக் கொண்டு போவது ஷீலாவோ ஜான்சியோதான். இவனுக்கென்று சரியாக அப்போது வீட்டுக் கடமைகள் லீவோ பெர்மிஷனோ வேறு போட வைக்கும்.

குடும்பத்திற்கு அப்பால் விரியும் பெண்ணின் உலகம்

பெண்ணின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். முதலில் அம்மாவின் சொல்படி கேக்க வேண்டும், அவர்கள் விருப்பப்படியே படிக்க வேண்டும், கைநீட்டிய ஆடவனை விருப்பமின்றியே திருமணம் செய்துகொள்ள வேண்டும், அப்புறம் தனக்கான கணவனைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சாமர்த்தியத்தை அவள் மாண்டு மடியும்வரை கடைப்பிடிக்க வேண்டும். பின் எல்லாவற்றின் சாட்சியமாக ஒரு குழந்தை, அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இப்போதைய தலைமுறைக்கு இது கடந்தகாலத்தின் நிழலாகத் தெரிந்தாலும் எனது தலைமுறையின் நிஜம் இதுதானே?