UNLEASH THE UNTOLD

Tag: love

தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் குணம் மாறாது!

இந்தப் படத்தில் வரும் பெண்ணும் படித்திருப்பாள், நல்ல இடத்தில் வேலை செய்வாள். ஆனால், அந்தக் காதலில் இருந்து வெளியே வருவதைப் பற்றி அவள் யோசித்திருக்கவே மாட்டாள். அது நல்ல உறவில்லை என அவளுக்கும் தோன்றி இருக்காது. ஒரு தோழி மட்டும் அறிவுரை கூறுவாள். “நீங்கள் தங்கப் பாத்திரத்தில் ஊற்றினாலும் நஞ்சின் தன்மை மாறிவிடப் போவதில்லை.”

நகர்தல் என்றும் நன்று

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீரே என்னவர் என வாழ்ந்தவர்கள்தாம் இவர்கள் எல்லாரும். இவ்வளவு ஏன் காதலித்துத் திருமணம் செய்து, நல்லபடி வாழ்ந்து மணமுறிவு ஏற்பட்டு வாழ்பவர்கள் இல்லையா? வேறு திருமணமும் அவர்கள் செய்துகொள்வது இல்லையா? வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இணையர் இறந்து வேறு திருமணம் செய்து நிறைவாக வாழ்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? இவர்களால் எல்லாம், கடந்த காலத்தை மறந்து வாழ முடியும்போது, உங்களால் ஏன் முடியாது?

பங்குனி முயக்கம்…

காதல் என்பது தன்னலம் கருதாது. தன் இணைக்காகவே உருகும். என்றாலும் காதல் என்கிற ஒன்றுதான் இன்றும் உலகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. பண்டைய தமிழருக்கு வீரமும், காதலும் இரு கண்களாக இருந்தன. மாசி மாத சித்திரை நட்சத்திரம் தொடக்கத்தில் இருந்து பங்குனி மாத சித்திரை நட்சத்திரம் வரையிலான இருபத்தெட்டு நாட்கள் அந்தக் காதல் பெருவிழாவை அரசர் முதல் சாமானியர் வரை எல்லாருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இலக்கியங்களில் இந்திர விழா காவிரி பூம்பட்டினத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். சிம்மனூர் செப்பேட்டில் மதுரையிலும் இந்திர விழா கொண்டாடியதாக ஒரு குறிப்பு இருந்திருக்கிறது. அன்று இந்த விழா பின் பனிக் காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இன்றும் நாம் பின்பனிக் காலமான பிப்ரவரியில்தான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம். 

வெள்ளைச் சுவற்றில் கரும்புள்ளி தேடலாமா?

காதல் புனிதமானதா? இல்லை சுயநலமானதா? சுகமானதா? வலியானதா? வந்ததா? வரவழைக்கப் பட்டதா? இப்படி ஓராயிரம் கேள்விகள் கேட்கலாம். காதல் இயல்பானது. அவ்வளவு தான். நம் ஊரில் தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து இன்று வரை…

நவீன் வீட்டில் ஷாலினி - இலக்கணம் மாறுதே...16

”நாம ஃபியூச்சர் பத்திப் பேசலாமே” என்றவாறே அவளின் கையை எடுத்துத் தன் இடக்கையில் வைத்துக் கொண்டு, தன் வலக் கையால் மெதுவாக அவளின் கை பெருவிரலின் அடியிலிருந்து மேலாக அழுத்தி நீவிவிட்டான். ஒவ்வொரு விரலுக்கும் அதே அழுத்தம் தந்தான். உள்ளங்கையில் சரியான அழுத்தத்தில் சிறு வட்டமாக அழுத்தி, அப்படியே பெரிய வட்டமாக வரைந்தான். அந்த மசாஜ் அவளுக்கு அவ்வளவு ரிலாக்ஸ் ஆக இதமாக இருந்தது.

வெறுப்பு விஷ விதைகளை ‘அன்பு’ எனும் ஆயுதத்தால் களைவோம்!

மனிதகுலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. உலகில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் அறிவார்ந்த சமூகமாக மனித இனம் அறியப்படுகிறது. ஆனால், நம் அறிவு அனைத்தையும் நமக்கெதிராகத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற அடிப்படை உணர்வுகூட இல்லாமல்தான் இந்த இனம் இருக்கிறது. நாம் என்றால் அது நம் மனித இனம் முழுவதையும்தான் குறிக்கும். நம்மைச் சூழ்ந்து இருக்கும் அத்தனை உயிர்களையும் நமக்கு அளிக்கப்பட்ட ஒன்றாக, நம் பயன்பாட்டுக்காக மட்டுமே படைக்கப்பட்டதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சுயநலம், இயற்கையைச் சீண்டுவதில் தொடங்கி சக மனிதனைச் சீண்டுவதில் முடிகிறது. அனைத்து மதங்களும் ஓயாமல் போதிப்பது அன்பைத்தான்.

காதல் கொலைகள்...

பெண் சாதியைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால், அவள் வேறு சாதி ஆணைக் காதலிப்பதோ அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதோ பெரும் கெளரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சாதி ஆணவக்கொலையில் அதிகளவில் கொலையாவது பெண்கள்தாம்.

இலக்கணம் மாறுதே...

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.

இருண்ட கடல்

அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டம் அனைத்தையும் கொரோனா தகர்த்தெறிந்தது. நிலா அவளது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தாள். அவனுக்கு வீட்டிலிருந்தபடியே மடிக்கணியின் மூலம் ட்ரெயினிங் தொடங்கியிருந்தது. இருவரும் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்கள். வீட்டில் இருந்ததால் நிறைய நேரம் பேசிக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர்களின் அன்பின் சாரல் அப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது.

எங்கிருந்து வந்தாலும் அன்பு அன்புதானே!

இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.