UNLEASH THE UNTOLD

Tag: love

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

திருமணம் தாண்டிய உறவு

ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.

தேமாக்காதல்

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.

காதலும் சுயமும்

சில நேரத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுப்பது ஒருவருக்கு இன்னொருவர் செய்ய வேண்டியதுதான். ஆனால், எப்பொழுதும் ஒருவரே விட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பது உறவின் சரிநிலையைப் பாதிக்கும். நாளடைவில் சுயமரியாதையையும் இழக்கச் செய்யும். ஒரு நாள் என்ன சமைப்பது என்பது தொடங்கி, யார் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் பெண்களே சமரசங்கள் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

<strong>அறிந்தும் அறியாமலும்</strong>

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.

எதுவும் முழுமையானதில்லை; எதுவும் முடிவதுமில்லை!

அள்ள அள்ளக் குறையாத தெவிட்டாத காதலும் நம்பிக்கையும் ஒரே கணத்தில் உருவாகி முடிவடைகின்ற ஒன்றில்லை. இது நீட்சியானது. முடிவற்ற பயணம். ஒரு பயணத்திற்கு எடுத்துப் போகும் வாகனத்தை முன்னாயத்தம் செய்வதைப் போல அது இடையறாது ஓடிக்கொண்டேயிருக்க எரிபொருள் நிரப்பியும் இயந்திரங்களைச் சரிபார்த்தும் கவனித்துக்கொள்வதைப் போல, அதன் சாரதி நாம் அங்கங்கு நிறுத்தித் தேநீர் அருந்தி, உணவுண்டு, ஓய்வு கண்டு நம்மைக் ஆற்றிக்கொள்வதைப் போல உறவுகளில் காதலும் நம்பிக்கையும் அள்ளக் அள்ளக் குறையாதிருக்கவும் தெவிட்டாதிருக்கவும் உழைத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

உறவுகளில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம், வாங்க!

இவர்கள் எல்லாரிடமும் ஒரே தன்மைதான். அது தாங்கள் காயப்படுவோம் என்று தெரிந்தேதான், அவர்கள் தங்கள் உறவுகளுக்காகச் செய்கின்ற செயல்களைச் செய்து வருகிறார்கள். தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தேர்ந்தெடுப்பது இதையே.

உணர்வுகள் வெங்காயம் போன்றவை...

உணர்வுகள் வெங்காயம் போன்றவை. நீங்கள் உணர உணர, ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, வெங்காயம் போன்று ஒவ்வோர் அடுக்காக உரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர் பிரச்னைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளும் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் அழகாகத் தெரியவரும்.

வாய்ப்புகளின் தொகுப்பே வாழ்க்கை!

நம்மை அன்பு செய்கிற, கொண்டாடுகிற பல நபர்களைக் கணக்கில்கொள்ளாமல், நம்மை நிராகரித்த ஓர் உறவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேலைக்கான தேர்வில் தகுதி இழந்தால், அதைவிட அதிக ஊதியமும் மனநிறைவும் தரக்கூடிய வேலைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன என்பதை மறந்து வருத்தப்படுகிறோம்.