UNLEASH THE UNTOLD

Tag: Unnai arindhal

தன்னை வென்றவர் உலகை வென்றதுதான் சரித்திரம்!

உங்களைக் குணபடுத்திய பிறகு நீங்கள் உங்களைக் காயப் படுத்தியவர்களையும் குணபடுத்தலாம். அவர்களையும் ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்களாக மாற்றும் மனநிலை உங்களுக்கு வருமென்றால், எத்தனை உன்னதமான நிலை அது!

எதிர்மறை உணர்வுகளுக்கான தீர்வுகளைக் காண்போம்

யாரோ ஒரு குழந்தையின் மலர்ந்த புன்னகை, ஏதோ ஒரு வயதோகருக்குச் செய்யும் உதவி, முகமறியா மனிதரின் துயரத்தைத் துடைக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நம் மூளையில் டோபமைன் என்கிற வேதிப் பொருளைச் சுரக்க வைக்கும். இயற்கையாகவே நாம் மகிழ்வாக உணர்வோம்.

எதிர்மறை உணர்வுகள்

உங்கள் மனநலனில் பிரச்னை இருக்கலாம் என்று ஓரளவு தெரிந்தவுடன், அதற்காகப் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். உடனடியாகச் செய்ய வேண்டியது உங்களால் முடிந்த உடற்பயிற்சியும், தியானப் பயிற்சியும்தான். இரண்டும் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் தொடர் பயிற்சி கைகொடுக்கும்.

சவாலே சமாளி

சவாலைப் பிரச்னையாகப் பார்க்கும் ஒருவர், அதை வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்கிற சந்தேகத்துடனும் பயத்துடனும் எதிர்கொள்கிறார். இந்த மனநிலையில் நாம் மிகச் சிறியவராகவும், பிரச்னை பெரிதாகவும் தோன்றும். நம்மைவிடப் பலமான எதிரியிடம் கண்டிப்பாகத் தோற்போம் என்கிற மனநிலையில் தோல்விக்கே வாய்ப்பு அதிகம். அதையும் மீறி ஜெயித்தால் அவர் அதிர்ஷடத்தையோ கடவுளையோதான் காரணம் சொல்லுவாரேயன்றி தன் திறமையை அல்ல. அப்போது ஒவ்வொரு சவாலும் மிகப்பெரிய மன அழுத்தத்தைத் தரும். மன அழுத்தம் நம் சிந்திக்கும், செயல்படும் திறனை மொத்தமாக அழித்துவிடும். வாழ்வு முழுவதும் போராட்டம்தான். சவால்கள் சாபம்தான்.

முடிவெடுக்கும் கலை

இங்கு முதல் கேள்வி நம் முடிவுகளை நாம் எடுக்கிறோமா என்பது. நாம் எடுக்கும் முடிவிற்கே நாம் பொறுப்பேற்க முடியும். அது தவறாகும்பட்சத்தில் மாற்று வழியைச் சிந்திக்க முடியும். பெற்றவர்கள், அறிஞர்கள், கற்றவர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆலோசனைகள் சொல்லலாம். ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் நாம்தான். இதைச் சின்னச் சின்ன முடிவுகளில் பழகும்போதுதான் வாழ்வை மாற்றக் கூடிய விஷயங்களில் நாம் தடுமாற்றமின்றி செயல்பட முடியும்.

புதிதாக யோசிக்கலாம்!

நாம் எப்போதும் புதிதாக யோசிப்பதாலும், புதிதாகத் தேடிக்கொண்டே இருப்பதாலும் மூளை சுறுசுறுப்பாகவும் மூளை சுருங்குதல், மறதி நோய் போன்ற தாக்கங்கள் இன்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். சவால்களை ரசியுங்கள், எதையும் குழந்தையின் ஆர்வத்தோடு அணுகுங்கள், தெரியாததை, புரியாததை நேர்மையாக ஒத்துக்கொண்டு கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ஆழமாகக் கற்க முனையுங்கள், கொஞ்சம் உங்களின் கற்பனைச் சிறகை விரிக்க விரிக்க புதிய புதிய சிந்தனைகள் உருவாவதை நீங்களே உணர முடியும்.

மாற்றி யோசி

மனித இனம் உருவாகிய நாளில் இருந்து இன்று வரை நாம் அடைந்த அத்தனை முன்னேற்றமும் வசதிகளும் யாரோ ஒருவர் ஆழமாகச் சிந்தித்து மாற்றி யோசித்ததால்தான் கிடைத்தது. அப்படி இருக்கும் போது நீங்கள் புதிது புதிதாக யோசிக்கா விடில் வாழ்வில் முன்னேற்றம் ஏது? ஆனால், நாம்தான் அதற்குப் பழகவே இல்லையே. நமது மூளையும் மனமும் ஒரு வட்டத்தைத் தாண்டி சிந்திக்க முடியாமல் சமூகம் நம்மைப் பதப்படுத்தி (Conditioning) இருக்கிறது. இது போல out of box thinking சிலருக்குப் பிறவியிலேயே அமையும் என்றாலும் முயன்றால் தேர்ச்சி நிச்சயம்.

உறவை ஆரோக்கியமாக அணுகுவது எப்படி?

நானும் நீயும் சமமானவர்கள், இருவரும் இந்த உறவில், வேலையில், வியாபாரத்தில் முக்கியம் என்கிற எண்ணத்தோடு உங்களின் நிலைபாட்டில் உறுதியாகவும், அடுத்தவரின் கருத்தையும் அதே மரியாதையோடு கணக்கில் கொள்ளும் உறுதியான நிலைபாடு (Assertive). இந்த அணுகுமுறையில் இருவரும் சமமாக மதிக்கபடும்போது, அங்கே ஆரோக்கியமான கருத்து மோதல் வரலாம், ஆனால் வெறுப்போ சலிப்போ பகைமையோ வருவதில்லை.

எது ஆரோக்கியமான உறவு?

ஒவ்வோர் உறவும் வாழ்வின் பாதையில் குறிப்பிட்ட தூரம் வரை தொடர்ந்து வருகிறது. சில உறவுகள் கடைசி வரை, சில பாதி தூரம் வரை, எப்படியாயினும் நமக்கு அது சுமுகமான உறவாக இருக்கும் போது, அது தொடராத போதிலும், மனதில் அந்த இனிமை மட்டுமே இருக்கும்.

பரிவோடு இருப்பது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் உதவி!

நியாயமற்ற மனிதர்களையும் நீங்கள் சந்திக்க வேண்டிவரும். எந்த நிர்பந்தத்திற்கும் நீங்கள் அடிபணியப் போவதில்லை எனும்போது அதைப் பற்றிக் கவலைப் பட என்ன இருக்கப் போகிறது? அவர்களையும் பரிவோடு அணுகும்போது நம்மிடம் கசப்புக்கு இடமே இல்லை.