UNLEASH THE UNTOLD

Tag: J Deepa lakshmi

எது என் உலகம்?

விழாவுக்கு அழைப்பு வந்த போது மாமனாரும் மாமியாரும் உடன் வருவதாகச் சொன்னபோது, உண்மையாகவே மனம் குளிர்ந்தான் வருண். தனக்கும் தனது திறமைக்கும் குடும்பத்திலும் அங்கீகாரம் கிடைப்பது ஓர் ஆணுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. ஆகவே அவர்கள் இங்கே வந்ததில் அவனுக்குப் பெருமைதான். ஆனால், ஏதோ கப்பல் கவிழ்ந்ததுபோல் ஏன் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் அவனுக்குப் புரியவே இல்லை. காரில் திரும்பும்போது மயான அமைதி. விழாவைப் பற்றி அத்தை, மாமா ஒன்றுமே சொல்லவில்லையே? எதுவும் பிடிக்கவில்லையா அவர்களுக்கு?

பாய்ஸ் டே அவுட்!

அத்தை மதியம் சாப்பிட்டுவிட்டு ஹாலில் நடுநாயகமாக டிவி முன்பு ஈசி சேரில் வீற்றிருந்தார். அவரை எப்போதும் அங்குதான் பார்க்கலாம். சரி, இவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். மாமாவுடன் மனம் திறந்து கொஞ்சம் ஆண்கள் உரிமை பற்றிப் பேசலாம் என்று ஆர்வத்துடன் கிளம்பினான். டைட்டான மெல்லிய டிஷர்ட் அணிந்தால் மாமா புருவம் உயர்த்துவார் என்பதால், திருமணத்தின்போது அவர்கள் எடுத்துக் கொடுத்த கட்டம் போட்ட, காலர் வைத்த சட்டையையே அணிந்துகொண்டான்.

இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா?

ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல். இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம்…

கிச்சன் செட்டும் ரோபாட் செட்டும்

வெண்பாவை அருகில் அழைத்த அத்தை, அவளுக்கான பரிசுப் பொருளைக் கொடுத்தார். ரோபாட் உருவாக்கும் செட். அதற்கான செய்முறை விளக்கங்களுடன் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நிலாவே பரவசமானாள்.

“தாங்க்யூ அத்தை! போன தடவை மாதிரி கார்தான் இருக்கும்னு நினைச்சேன். இது ரொம்ப சூப்பரா இருக்கு!”

ஹாய், சாப்பிட்டாச்சா?

“நீங்க இருங்க மாமா, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வருணே எல்லாம் செய்தான். ஆனாலும் சமையலறையில் ஓர் ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்தபடி மாமனார் உத்தரவுகளைப் பிறப்பிக்க, வருண்தான் ஓடியாடி எல்லாம் செய்தான். சின்ன மருமகளுக்கு மீனை இப்படிச் செய்தால் பிடிக்காது. பெரிய மருமகள் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டார் என்கிற நிபந்தனைகளுக்கேற்ப ஆளுக்கு ஒன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான் வருண்.

ஒரு தீபாவளி அரட்டை..

“தாங்க்ஸ். முடிஞ்சா வரேன். ஆனா, நீ ரெண்டு நாள் ஜாலியா பேச்சலரெட் லைஃப் எஞ்சாய் பண்ணு. இங்கே பாரு, உங்க அங்கிளை… எங்கேயும் போகாம என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்கு. மூட்டு வலி, முதுகு வலின்னு ஆயிரம் இருக்கு. யாரு சாப்பிடப் போறா, பேசாம விடுன்னா கேட்காம உட்கார்ந்து பலகாரம் பண்ணிக்கிட்டு இருக்கு. அப்புறம் கை வலிக்குது, உடம்பு வலிக்குது, டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போன்னு என் உயிரை எடுக்கும்.”

வெண்பாவுக்கு ஒரு நியாயம், வேந்தனுக்கு ஒரு நியாயமா?

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

ஓர் ஆணுக்கு இவ்வளவு ரோஷம் இருக்கலாமா?

என் புருசனைத் தானே நான் உரிமையுடன் அடிக்க முடியும். ’லேசாகத்தான் தட்டினேன். கோபித்துக் கொண்டு வந்து விட்டான்’ என்று வருத்தப்பட்டார்.

நீயே சொல் அருண். ஓர் ஆணுக்கு இவ்ளோ ரோஷம் இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்? நீயும்தான் ஒரு குடும்பத்தில் வாழப் போயிருக்கிறாய். எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழவில்லையா? உனக்கு நேரமிருக்கும் போது தம்பியை அழைத்துப் புத்திமதி சொல்.

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

பிறந்த வீட்டுக்குப் போன தாராவின் புருசன்

“ஆமாம். அநியாயம்ல? ஆனா புருசன் விட்டுட்டுப் போயிட்டாலும் தாரா கேரக்டர் படு சுத்தம். ரோட்ல போற ஒரு ஆம்பளையத் தப்பா பார்க்க மாட்டாங்க. அன்னிக்குப் பலகாரம் கொடுக்கப் போனேன், வாசல்ல தம்மடிச்சிட்டு இருந்தவங்க என்னைப் பார்த்ததும் உள்ள போயி அப்பாவை வரச் சொல்லிட்டாங்க. ஆண்களைச் சமமா மரியாதையா நடத்துறவங்க. அவங்க வாழ்க்கை போய் இப்படி ஆயிடுச்சே. ரொம்பத்தான் திமிரு அவங்க புருசனுக்கு.” – வருண்