UNLEASH THE UNTOLD

Tag: Soozhalum Pengalum

எதிர்காலம்?

பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

சாதி - பெண் - சூழல்

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

பால்புதுமையினரும் சூழலும்

“பாலினம், பால்சார் ஒடுக்குமுறை, இனவெறி, பால்புது நபர்கள் மீதான வெறுப்பு ஆகியவை அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள், இவை சக மனிதர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே மாற்றியமைக்கின்றன” என்கிறார் அசமே ஔர்கியா. இந்த ஒடுக்குமுறைகளும் சூழலியலும் இணையும் இடம்தாம் குயர் சூழலியல். இதே குயர் சூழலியலை அடிப்படையாக வைத்து சமகாலத்தின் சூழல்சார்ந்த பிரச்னைகளை அணுகுவது அவசியம். சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் பால்புதுமையினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.

நெய்தல் பெண்களின் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது.

அழிக்கப்படும் கால்தடங்கள்

எது உண்ணத் தகுந்த தாவரம் என்று கண்டுபிடிப்பது, விதைகளை வேதிப்பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பது, குறைவான செலவில் சிறு தோட்டங்கள் அமைப்பது, வளங்குன்றா முறையில் காடுகளிலிருந்து உணவு சேகரிப்பது, மூலிகைச் செடிகளை அடையாளம் கண்டு சரியான முறையில் பயன்படுத்துவது. வளங்குன்றா கால்நடை பராமரிப்பு, தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே வரப்போகும் பருவநிலையைக் கணிப்பது என்று இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அட, இவ்வளவு ஏன்? கோவிட் காலத்தில் வழக்கமான உணவுப் பொருட்கள் கிடைக்காதபோது, ஒடிசாவின் பழங்குடிப் பெண்கள் தங்களது குடியிருப்புக்கு அருகில் இருந்த காடுகளில் இருந்து மட்டும் 111 வகையான உண்ணத்தகுந்த பொருட்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்! பழங்கள், கீரைகள், கிழங்குகள், காளான்கள் என்று எல்லாமே இதில் அடங்கும்.

நச்சு உலோகங்களின் அச்சுறுத்தல்

ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நச்சு உலோகத்தின் அளவு, அவரது பால், வயது, பிற நோய்கள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில வேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிக நச்சு உலோகங்களை எதிர்கொள்வார்கள். ஆனால், அதிலும் பால்சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது ஒரே அளவிலான நச்சு உலோகம் உடலுக்குள் சென்றாலும் ஆணுக்கு ஏற்படும் பாதிப்பை விடவும் பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்களின் உடல் இயங்கியல் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட பெண்கள்!

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க புதிய பயிர்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. நமது மூதாதையர்கள் காட்டுச் செடிகளிலிருந்து பயிர்களாக மாற்றிய உணவுகளைத்தாம் நாம் இன்னமும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நமது தற்கால உணவு ஒருவகையில் பண்டைய விவசாயிகளால் வடிவமைக்கப்பட்டது” என்கிறார் மானுடவியலாளர் யுவால் நோவா ஹராரி. இவர் குறிப்பிடும் பண்டைய விவசாயிகள் பெண்கள்தாம் என்பதைப் பல ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பெண்களின் வேலையா?

‘Feminisation of care’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார் எழுத்தாளர் சரண்யா பட்டாச்சார்யா. அதாவது, அக்கறைக்குப் பெண் தன்மையைக் கொடுப்பது. இதன்மூலம் பெண்கள் மீதான உணர்வு மற்றும் உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “அக்கறை என்பது ஒரு சிக்கலான அரசியலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் செயல்பாடு” என்கிறார் ஆராய்ச்சியாளர் அரின் மார்டின். ஆகவே இந்த அரசியலைப் பேசுவது முக்கியம். பெண்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்காமலேயே தனிநபர் சூழல் செயல்பாடுகளில் மட்டும் அவர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதை நடத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக, “பெண்ணுக்கு இயற்கையிலேயே சூழல் மீது அக்கறை உண்டு” என்பது போன்ற சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. சூழல்சார்ந்த தனிநபர் செயல்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பையும் சூழல்சார்ந்த கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பையும் இது பாதிக்கிறது. இந்த நிலை ஆபத்தானது.

இயற்கை என்பது அன்னையா, தந்தையா?

முதலாவதாக, ஒரு தாய் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தனது பிரச்னைகளைத் தானே சரிசெய்துகொள்வதைப் போல, இயற்கையும் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது. சூழல் சீர்குலையும்போது அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டு வரும் தன்மை இயற்கையில் உண்டு என்பது உண்மைதான், ஆனால் மனிதனால் ஏற்படும் அழிவின் விகிதத்துக்கு இயற்கையின் தன்மீட்சியால் எந்த வகையிலும் ஈடு கொடுக்க முடியாது. தவிர, குற்ற உணர்வின்றி, விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி மனிதர்கள் தொடர்ந்து இயற்கையை அழிப்பதையும் இந்தக் கோணம் அனுமதிக்கிறது.

<strong>எக்காலும் ஏய்ப்பில் தொழில்</strong>

இன்னொருபுறம் இந்த ஆடை தொழிற்கூடங்களில் வேலை செய்வது யார் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தியாவின் ஆடை பணியாளர்களில் 60% பேர் பெண்கள்தாம். உலக அளவிலேயே 80% ஆடை பணியாளர்கள் பெண்கள்தாம், அதிலும் பெரும்பாலான மேலை நாட்டு ஆடை நிறுவனங்களின் உற்பத்தி, வளரும் நாடுகளைச் சேர்ந்த தொழிற்கூடங்களில்தாம் நடக்கின்றன. ஆகவே, உலகளாவிய ஆடை உற்பத்தியில் வளரும் நாடுகளின் பெண்கள்தாம் பெரும்பாலான தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.