UNLEASH THE UNTOLD

Tag: tamilnadu

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

4. இணையத்தில் சுழலும் குடும்ப நாவல் உலகம்

அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

     விவாதமாகும் விவாகங்கள்...

அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை ஏற்றுக் கொள்வோம். ஜாதகக் கட்டங்களை ஆராய்ந்து, பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்து, நாள், நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி நோக்கி, காசி யாத்திரை எல்லாம் போய் செய்யும் திருமணங்கள் மனப் பொருத்தம் இல்லாமல் பிரிந்து போயிருக்கின்றன. நல்ல நேரம் கூடப் பார்க்காமல் செய்து கொண்ட திருமணங்கள் மனப் பொருத்தம் அம்சமாக அமைந்து மகிழ்ச்சியாகத் தொடர்கின்றன. கூடுமானவரை விவாகங்களை விவாதமாக்காமல் இருப்பதும், அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதும் மன நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.

அறியாத மனசு... புரியாத வயசு...

காயத்திரி அத்தைக்குப் பக்கத்து வீடு. காயத்திரியும் செல்வனும் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவர்கள். செல்வனுக்குக் காதல் அரும்பி தன் காதலை முதலில் சொல்லியிருக்கிறான். ஒரு சில வருடங்கள் கழித்து காயத்திரி சம்மதம் சொல்ல, தற்போது வீட்டிலும் சொல்லியிருக்கிறான் செல்வன்.

உடை... அதைக் கொஞ்சம் உடை...

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

கட்டணமில்லா பேருந்து என் பார்வையில்...

பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன் என்று அம்பேத்கர் பேசினார். பெண்கள் சமூக, பொருளாதாரரீதியான மாற்றங்களுக்கு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குப் பொதுச்சமூகத்தின் சம்மதத்தைப் பெறா அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் பொதுச் சமூகத்தின் ஒப்புதலைப் பெறாத எந்தவொரு திட்டமும் முழுமையடையாது. சட்டரீதியான அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரம் மிகவும் வலிமையானது.

சனாதனம் உண்மையிலேயே தர்மமா?

1964இல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா? ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா? இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளை முன் வைக்கிறார். இந்தக் கேள்விகள் எல்லாமே அர்த்தபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் அமைந்திருக்கின்றன. சனாதனத்தைப் பின்பற்றும் எவர் வேண்டுமானாலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம்.

இப்போ யாருங்க சாதி பார்க்கிறாங்க?

மதம், சாதி, குடி, இனம், மொழி பேதங்களை மறந்தும், பேசச் தயங்கியும், பேசப் பயந்தும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குச் சாதி, மத, இன, குடி, மொழி பேதங்களைப் பேசும் தைரியத்தை ஊட்டி எழுப்புகின்றனர் இவர்கள். “நீ என்ன சாதி?” என்று கேட்க வெட்கப்பட்டவன், நான் இன்ன சாதி என்று அறிவிக்க சாதிக்கயிறு கட்டிக்கொள்ளும் துணிச்சலை உண்டாக்கியிருக்கிறது இவர்கள் செய்யும் அரசியல்.

மகளிர் உரிமைத் தொகை...

ஒரு மகன் லட்சத்தில் சம்பாதிப்பதால் மட்டுமே அவனுடைய தாய்க்கு அதில் உரிமை இருக்கிறது என்று பொருள் இல்லை. ஓர் அவசர செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்க என்றாலும்கூட ‘எனக்கு இது வேண்டும் வாங்கிக் கொடு’ என்று வாய்விட்டுக் கேட்கும் நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம்

பெண்கள் வேலைக்குப் போவது குறிப்பாக ஆசிய நாடுகளில்தாம் குறைவாக இருக்கிறது. குடும்பம், கலாச்சாரம், மதம், சமய நம்பிக்கைகள் காரணமாக இருக்கிறது. சொல்லப்போனால் பெண்களேகூட என் குழந்தையை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் எனக்கென்ன சிரமம், என் கடமை, பெருமை என்றெல்லாம் பேசுவதுண்டு. 16 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா வேலைக்குப் போய் சம்பாதிப்பவராக இருந்தாலும்கூட கணவரும் மகளும் மதிக்காமல் இருப்பது போல காட்சிகள் இருக்கும். பல குடும்பத்தில் நடக்கும் உண்மை நிகழ்வு இது. பெண்களை சமூக ஊடகங்களிலும் வீடுகளிலும் மட்டம் தட்டிப் பேசுவதை ஆண்கள் நகைச்சுவை என்று நம்புகிறார்கள். இந்த நிலையில் வீட்டு வேலை மட்டுமே செய்யும் ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ்வது என்பது ஆண்கள், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ளது என்று ஒப்புக்கொள்வதைப் போல குறைவான சாத்தியமுள்ள விஷயம்.