UNLEASH THE UNTOLD

<strong>டி.என்.ஏ ஆராய்ச்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்</strong>

இந்தப் படிகவியல் ஆராய்ச்சியில் டி.என்.ஏ படிகங்களை ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சியில் 1952ஆம் ஆண்டில் Photo 51 என்று அழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற படிகவியல் படம் எடுக்கப்பட்டது. இந்த ஒரு புகைப்படத்தை எடுக்கவே 100 மணி நேரம் ஆனதாம், புகைப்படத்திலிருந்து கிடைத்த தரவுகளைக் கணக்கிடவே ஓர் ஆண்டு ஆகியிருக்கிறது! இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட 51வது புகைப்படம் என்பதால் அப்பெயர் வந்தது என்பதும் கூடுதல் தகவல். இந்த 51வது புகைப்படம்தான் டி.என்.ஏ வடிவத்திற்கான முழுமுதல் ஆதாரமாக மாறியது.

வாழ வழி காட்டும் புத்தகம்

‘நம் கடமை வாழும் வரை வாழ்ந்து தீர்ப்பதே, சாகும்போது புலம்பாமல் விருப்பத்துடன் சேர்த்து தொலைவதே’ என்று இவர் குறிப்பிடும் இந்த வார்த்தைகள் உச்சகட்ட சோகத்தையும் தகர்க்கக் கூடியதாகவே உணர முடிந்தது.

<strong>துரித ஆடைகளும் சுற்றுச்சூழலும்</strong>

ஓர் ஆடை உற்பத்தியில் தேவைப்படும் நீரின் அளவை எடுத்துக்கொள்வோம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்முறையின்போது செலவழியும் நீரை மறைநீர் (Virtual water) என்பார்கள். ஒரு சாதா வெள்ளை நிறப் பருத்தி டீஷர்ட்டை உற்பத்தி செய்ய 2494 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது! ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்க 8000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது! இவை சாயமேற்றாத உடைகளுக்கான கணக்குகள் மட்டுமே, அதே டீஷர்ட்டில் வண்ணம் வேண்டுமென்றால் கூடுதல் நீரைச் செலவழிக்க வேண்டும்.

வாசெக்டமியை ஏன் ஆண்கள் விரும்புவதில்லை?

சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பும் அளவிற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெற்றாலும் இன்றும் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மிக மிகக் குறைவுதான். ஆயிரம் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் அதில் ஒருவர்தான் ஆண். இது ஏதோ இந்தியாவின் பின்தங்கிய மாநிலத்தின் நிலை இல்லை. தமிழகத்தில்தான் என்று ஒரு தரவு சொல்கிறது.

பொம்பளைங்க அப்படித்தான் இருப்போம்!

“நிலா, என்ன சொல்ற? உனக்கு அது தப்புன்னு தோணலியா?” வருணின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

“என்ன தப்பு? அது அவங்க ப்ரைவசி. அதுல நீ மூக்கை நுழைக்கிறதுதான் தப்பு. பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. உங்கம்மா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று நக்கலாகக் கேட்டாள் நிலா.

விபாஸனா

நான் உலகத்தோடு கலந்ததாக, அப்படி எல்லாம் இல்லை; உலகம் தனியாக அப்படியே இருக்கிறது. நானில்லை. நான் என்பதே இல்லை. ‘நான்’ என்று எவ்வெப்போதும் உணர்ந்து கொண்டிருக்கிற எதுவுமே இல்லை. அந்த உணர்வில், பிடித்தம் பிடிக்காமை, பயம் வெறுப்பு நேசம் எந்த உணர்வுத் தீவிரமும் அதில் இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு ஜன்னல் வழி உலகம், ஜன்னலற்றுத் தெரிவது போல. அவ்வளவுதான்.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு உடல்கோளாறுகளை உண்டாக்குகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அந்த நபருக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். கருவுற்ற தாய்மார்கள் 20% கர்ப்பகால நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். கரு உருவாவதற்கு முன்பு சர்க்கரை அளவு சரியாக இருந்து, கருவுற்ற பிறகு சர்க்கரை அளவு அதிகரித்தலே கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோயை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே கர்ப்பகாலத்தில் குறைந்தது மூன்று முறையாவது ரத்தத்தில் சர்க்கரை உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது மிகமிக அவசியம்.

நளினி ஜமீலா

கேரளா ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ அமைப்பில் செயல்பட்டு வந்த இவர், பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுத்து வந்ததுடன் நிறுத்திவிடாமல் ‘ஜுவாலாமுகிகள்’, ‘A Peep into the Silenced’ என்ற இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.

<strong>அமெரிக்காவின் முதல் பெண் நிலவியலாளர்</strong>

ஆய்வுப் படிப்பில் சேர்ந்த பிறகும் ஃப்ளாரன்ஸுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. ஆண் மாணவர்கள் பலர் இருக்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஃப்ளாரன்ஸின் இருப்பு அவர்களைத் திசைதிருப்பும் என்பதால், ஃப்ளாரன்ஸை வகுப்பறையின் கடைசியில் உட்கார வைத்தார்கள். அவருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையில் ஒரு திரையும் போடப்பட்டது. இது மாணவர்களிடமிருந்து மட்டுமன்றி, ஆசிரியர்களின் பார்வையிலிருந்தும் ஃப்ளாரன்ஸை மறைத்தது. நேரடியாக ஆசிரியர்களைப் பார்க்காமலேயே ஃப்ளாரன்ஸ் பாடம் கற்றார்.

பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?

ஆணுறை கருத்தடை சாதனம்தான் என்றாலும் அதில் தோல்விக்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், தற்காலிகமான கருவுறுதலைத் தடுக்க ஆணுக்கான மாத்திரைகளோ ஊசிகளோ ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? ஏன் அது குறித்த ஆராய்ச்சி பரவலாக்கப்படவில்லை? கரு உருவாதலில் ஆண், பெண் இருவருக்கும் சமபங்கு இருக்க, அது குறித்த அனைத்து உடல் உபாதைகளும் பெண்ணுக்கானதாகத் தொடர்ந்து வருவது எதனால்? பெண் உடல்தான் கருத்தடை ஆராய்ச்சிக்கு உகந்ததா?