UNLEASH THE UNTOLD

Tag: india

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள் (2)

”அவளுக்கென்ன ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கறா. தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்குறா. அப்புறம் குண்டாகாம என்ன செய்யும்?” என அலைபேசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் தனது மகளைப் பார்த்துப் பெண்களின் தாய்மார்கள் புலம்புவதை நீங்கள் பார்த்திருக்கலாம். எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள்தாம் குண்டாக இருப்பதாகவும், ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படாது எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

கருவறையும் அரசியலும்

2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.‌ சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள்

பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஓர் ஒற்றைப் பெற்றோரின் மகள்

பொதுவாகக் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னுடைய செயலுக்குப் பொறுப்பு ஏற்கும் தன்மையுடனும் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சிறிய வயதில் இருக்கும் போது பெற்றோர் ஏன் கண்டிக்கிறார்கள் என்று நினைப்பார்கள். அது சிறிது வளர வளரப் புரியும். நல்ல பெற்றோருக்குத் தெரியும் ‘எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும் எப்போது கண்டிக்க வேண்டும்’ என்று.

   பாராட்டக் கற்றுக் கொள்வோம்...

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.

மாட்டிறைச்சி பொது உணவு இல்லையா?

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

பெண் விஞ்ஞானிகள் எப்படிப்பட்ட உடைகளை அணிவது சரியாக இருக்கும்?

ஒருவர் சிறந்த விஞ்ஞானியா இல்லையா என்பது அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது, உடையைப் பொறுத்தது அல்ல. ஆண் விஞ்ஞானிகள் என்று வரும்போது இந்தத் தெளிவான பார்வை இருக்கும். ஆனால், பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. பெண்களை எல்லா இடத்திலும் பின்தொடரும் உடைப் பிரச்னை ஸ்டெம் துறையிலும் அவரைப் பாதிக்கிறது என்பதே கவலைக்குரிய நிதர்சனம். ஸ்டெம் பெண்களுக்கும் உடைக்குமான தொடர்பில் பல்வேறு இழைகள் உண்டு.

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

அடையாள அரசியல் – சாதகமா, பாதகமா?

அவரவர் பிரச்னைகளை அவரவரே போராடித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று இருந்தால் சமூக மற்றம் நிகழவே நிகழாது. சுரண்டல் இல்லாத சமுதாயத்தைப் படைக்க அனைவரும் அவரவர் அடையாளங்கள் மத்தியில் கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து அனைத்து மக்களும் சமம்தான் என்கிற எண்ணத்தோடும் தோழமை உணர்வோடும் ஒன்று சேர்ந்து போராடுவதே தீர்வாகும். மனிதனாக ஒன்றிணைவோம் வாரீர்.