UNLEASH THE UNTOLD

Tag: india

இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சிருக்கு...

இந்திய ஆண்களின் விருப்பத்திற்குத் தானே இன்றும் வீடுகளில் சமையல் செய்யப்படுகிறது. எத்தனை வீடுகளில் பெண்கள் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்திருக்கிறார்கள்? எத்தனை வீடுகளில் பெண்கள் முதலில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்? அப்படிப் பெண்கள் முதலில் சாப்பிடுவது பெருங்குற்றம் என்றுதானே அவளது மரபணுக்களில் போதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மனைவி அல்லது தாய் பரிமாறினால் மட்டுமே சாப்பிடும் ஆண்கள் குலத் திலகங்கள் வழக்கொழிந்து போய்விடவில்லை. அவனுக்குப் பிடித்ததை எல்லாம் அவன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, தனக்குப் பின்னால் சாப்பிடுபவளுக்கு இருக்கிறதா, இல்லையா என்று கூடப் பார்க்காமல் வயிற்றைத் தடவிக் கொண்டு, ஏப்பம் விடும் ஆண்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் உரிமை இருக்கும் போது சமைக்கும் உரிமையும் அவனுக்கு உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.

சாதி - பெண் - சூழல்

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

பெண்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.

கட்டாயம் மிதித்துப் பழக வேண்டும்!

“நல்லா கேளும்மா. இவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள்ல சவாரி செய்யறாங்க. இவளுக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே அதான் வீட்லயே இருக்கா! பயந்தாங்கொள்ளி. இவளோட நாலு வயசு சின்னப் பையன் நானே எவ்ளோ சுலபமா ரெண்டு கைய விட்டுக்கிட்டு ஓட்டுறேன். இவ என்னடான்னா சைக்கிளையே தொடமாட்டிங்கிறா” என்று தன் அக்கா வாணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

நான் எப்படி வந்தேன் அம்மா?

உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

மலக்குழி மரணங்கள்...

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நெய்தல் பெண்களின் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது.

ஆணாதிக்க வேர் பிடித்த பெண் சமூகம்

பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.