UNLEASH THE UNTOLD

Tag: india

அடையாளத்தில் பெருமை இருக்கிறதா, இல்லையா?

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

அறியாத மனசு... புரியாத வயசு...

காயத்திரி அத்தைக்குப் பக்கத்து வீடு. காயத்திரியும் செல்வனும் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவர்கள். செல்வனுக்குக் காதல் அரும்பி தன் காதலை முதலில் சொல்லியிருக்கிறான். ஒரு சில வருடங்கள் கழித்து காயத்திரி சம்மதம் சொல்ல, தற்போது வீட்டிலும் சொல்லியிருக்கிறான் செல்வன்.

உடை... அதைக் கொஞ்சம் உடை...

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

பண்டிகைகள்... திருவிழாக்கள்... பெண்கள்...

பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் என்பது விடுமுறை நாட்கள் என்றாலும் ஒய்வுக்கான நாள்கள் அல்ல. சாதாரண நாட்களைவிட பன்மடங்கு உழைப்பைக் கோரி நிற்கும் நாட்கள். வீடும் அடுப்படியும் மட்டுமே பெண்களின் உலகமாக இருந்த காலம் இப்போது இல்லை. பல வீடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதால் அவர்களின் வீட்டு வேலைகள் குறைந்துவிட்டதா என்றால் இல்லை. என்ன வேலைக்குச் சென்றாலும், சடங்குகள், மத நம்பிக்கைகளில் விருப்பம் இல்லாவிட்டாலும், வீட்டில் விஷேசங்கள், பண்டிகைகளைக் கொண்டாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் பல பெண்கள் இருக்கின்றனர்.

உணவுப் பொருள்களின் உருமாற்றம்!

தாவரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் வளங்களை அப்படியே உணவு உற்பத்திக்குத் திசை திருப்பியதுதான் அதிக விளைச்சலுக்கான காரணம். தாவரங்களில் சிலவற்றிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உண்டு. உதாரணமாக நெல் சாகுபடியில் அதிக உயரம் வளராத, ஆனால் அதிக விளைச்சலைத் தருகின்ற ஒரு ரகம் உண்டு என்றால் அந்த ஒரே ஒரு வகை நெல்லை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்வது, அந்த நெல்லின் மரபணுவைப் பரிசோதனை செய்து, அதை எடுத்து பிற நெல் வகைகளில் இணைத்து, பிற நெல் வகைகளையும் இந்த ஒரு குறிப்பிட்ட நெல் வகையைப் போல் மாற்றுவது போன்றவற்றால்தாம் உற்பத்தி அதிகரித்தது. இந்த முறையைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். உணவு முறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்தப் பசுமை புரட்சி தான்.

பெய்யெனப் பெய்யா மழை

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்ணடிமைத்தனத்தைத் தூக்கிப் பிடிக்கும் விளம்பரங்கள்

செஃப் தாமு வந்து சோப் பவுடர் விற்கிறார். அதைப் பெண்களிடம்தான் விற்கிறார். ஒரு மாறுதலுக்கு ஆண்களிடம் துவைத்துப் பார்க்கச் சொல்லி விற்றிருக்கலாமே! சமையல் பொருட்கள், சமையலறைச் சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றிற்குப் பெண்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள், தொழில்நுட்பக் கருவிகள், டிஎம்டி கம்பிகள், சிமெண்ட் போன்ற விளம்பரங்களில் ஆண்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏன் பெண்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லையா என்ன?

நீரிழிவு குறைபாடும் மனிதர்களும்

நீரிழிவு குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் இன்சுலின் என்கிற ஹார்மோன் தேவையைவிடக் குறைவாகச் சுரப்பதுதான். இன்சுலின் என்பது ஒருவகையான புரதம். இது உடலில் இருக்கும் ரத்தத் சர்க்கரையின் (blood glucose) அளவைச் சீராக வைத்திருக்கும். கணையத்தில் (pancreas) சுரக்கக்கூடிய இந்த இன்சுலின், தேவையைவிடக் குறைவாகவோ அல்லது முற்றிலும் சுரக்காமலோ இருக்கும் போதுதான் ரத்தச் சர்க்கரையின் அளவு கூடுகிறது. இதைத்தான் நீரிழிவு என்கிறோம். உலகில் பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கும் இந்த நீரிழிவு குறைபாடானது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதுவும் இதில் இருக்கும் இரண்டு முக்கியமான பிரிவுகளைப் பொறுத்துதான் இதன் விளைவுகளும் சிகிச்சைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

சனாதனத்தின் எதிர்ப்புக் குரல் மாலம்மா

“இதையடுத்து ஊர்கூடி இரு குழந்தைகளையும் பொட்டுகட்டி விடுவதாக  அவர்களின் பெற்றோர் அறிவித்தனர்இதற்குப் பதிலீடாக அக்கிராமத்தின் அரசியல் பஞ்சாயத்துத் தலைவர் இருவருக்கு  தலா  ஒரு  வீடு  தருவதாகவும்  கூறியிருக்கிறார்.  இப்படியாக  அங்கிருக்கும் தலித்  பெண்குழந்தைகள்  தேவதாசிகளாக மாற்றப்படுகிறார்கள்.” 
 
‘தேவதாசி விமோசன அமைப்பு’ என்னும் தங்களது அமைப்புக்கு இந்தச் செய்தி வர, விசாரணையில் இந்த  விஷயங்கள்  எல்லாம்  தெரியவருகிறது.  மேலும் சட்ட ரீதியாக மேற்கொள்ளும் போது தேவதாசி  ஒழிப்புச்  சட்டத்தில்  என்னென்ன  குளறுபடிகள்  இருக்கிறது  என்பதும்  தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட   தேவதாசி  பெண்களிடம்  இது  குறித்துப்   பேசும்போது  ஒருவர் கூடத் தான் விருப்பத்துடன் வந்தேன்  எனத்  தெரிவிக்கவில்லை.  எங்களை  வலுகட்டாயமாகவே தேவதாசிகளாக  ஆக்கினார்கள் என்கிற  உண்மையைப்  பெண்கள்  போட்டுடைக்கிறார்கள்.
 
இதற்குக் காரணம் அவர்களின் குடும்பம் மட்டுமல்ல, அங்கு உள்ள பூசாரி,  கெளடர்கள் போன்ற  செல்வந்தர்கள்  அனைவருமே  குற்றவாளிகள்தாம்  என்பதைச் சட்டத்தில்  சேர்க்க வேண்டும்  என்கிற  தங்களின்  கோரிக்கையை  முன்வைத்துப்  போராடி வருகின்றனர்.
 
”46 ஆறாயிரம் தேவதாசிகள் மற்றும் அவர்களின் குடும்பம் என மொத்தம் 10 லட்சம் பேர்  உள்ளனர். இந்தப் பத்து லட்சத்தில்  உள்ள  குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லும்  போது  தீரா அவமானத்திற்கும்  தாழ்வுமனப்பான்மைக்கும் உள்ளாகிறார்கள்.  இப்படியான  இன்னலுக்கு  ஆளான  தேவதாசிகளிடமும்  அவர்களின்  குழந்தைகளிடம்,  “நீங்கள்  அவமானப்படுவதற்கோ, குற்றவுணர்ச்சிக்குள்ளாகவோ  தேவையில்லை.  உங்கள்  மீது எந்தத் தவறும் இல்லை. உங்களை இந்த  நிலைமைக்குத்  தள்ளிய  சமூகத்தின்  மீதும்,  சனாதனத்தின்  மீது  மட்டுமே  தவறே  தவிர  நீங்கள்  அல்ல” என்று  பேசிவருகிறோம்” என்றார்.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

கருவறைக்குள் நுழைய முடிந்த பெண்களால் ஏன் அரசியலில் நுழைய முடியவில்லை? சட்டமியற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கக் காரணம் என்ன, கட்சிகளில் அதிகாரமிக்க பொறுப்புகளில் பெண்களின் நிலை என்னவாக இருக்கிறது போன்ற கேள்விகள் அரசியலில் பெண்களின் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதையும், அதற்கான காரணங்களை நோக்கியும் நம்மை நகர்த்துகிறது.