UNLEASH THE UNTOLD

Tag: health

உங்களுக்கு ஒரு கடிதம்…

இளமையில் சம்பாதித்து சேர்த்த பணத்தை, முதுமையில் மருத்துவச் செலவிற்குப் பயன்படுத்துவதற்காகவா இத்தனை ஓட்டம்? ஓடும் ஓட்டத்தை நிறுத்தி, சற்று உங்களை நீங்களே சுயபரிசீலனை செய்து பாருங்கள். “உண்மையிலேயே நீங்கள் ஆரோக்கியமுடன் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள்தான் உலகிலேயே மிகப் பெரிய மில்லியனர்”    

வீட்டில் என்ன விசேஷம்?

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

முப்பது வயதுக்குள்ளே குழந்தையா?

சரி, ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா? ஆண்களின் விந்தணுக்கள் கருமுட்டைகளைப் போல் அல்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஓர் ஆணின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல ஒரு விந்தணுவின் சுழற்சி முடிவதற்கு இரண்டரை மாதங்கள் வரை ஆகும். இதனால்தான் கருமுட்டைகளில் ஏற்படும் பிரச்னைகளைவிட விந்தணுக்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குணப்படுத்துவது சுலபம். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இவை அனைத்தும் பெரும்பான்மையான விந்தணு பிரச்னைகளைக் குணப்படுத்த போதுமானவை.

நீண்ட ஆயுளுக்கு இடைவெளி அவசியம்

உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. அத்தகைய உலக அதிசயக் கட்டிடம் உருவானத்திற்கான அடித்தளம் என்ன? காதலா? அது காதலின் சின்னமாக நான் ஒருபோதும் கருதமாட்டேன். அது 38 வயதே நிரம்பிய ஒரு பெண்ணின் கல்லறை. வாழவேண்டிய மும்தாஜ், 38 வயதில் அவர் மரித்ததற்கான காரணம் அதிகப் பிள்ளைபேறும் பிரசவங்களுக்கு இடையே இடைவெளி இல்லாததும்தான். ஆ,ம் 38 வயதே நிரம்பிய மும்தாஜ் தனது 14வது குழந்தை பெற்றபோது கர்ப்பப்பை சுருங்கும் தன்மையை இழந்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு மறைந்தார்.

குர்தியும் பட்டியாலா பேண்ட்டும்

“சம்சாரி வீட்டில் வாக்கப்பட்டு மாடு, கண்ணு, காடு, கரைன்னு போறவளுக்குச் சீலதாண்டி அழகு. ஏழு வயசுல பேரன் இருக்காங்கறத மறந்துட்டு நைட்டி போடுறேன்னு கேக்குறயே? உனக்கு எம்புட்டு தைரியம்? அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க எல்லாம் பார்த்துச் சிரிக்கமாட்டாங்க? கோமாளி மாதிரி நைட்டிய மாட்டிகிட்டுத் திரியணும்னு கிறுக்குத்தனமா ஆசைப்படாதே’’ என நைட்டி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

நாற்பதுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்கிறது...

குழந்தைகள் படிப்பு அல்லது வேலை, திருமணம் காரணமாகப் பிரிந்து தூரமாகச் சென்றுவிட, அதுவரை குழந்தைகள் உலகம் என்று இருந்த சிலர் Empty nest Syndrome இல் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் மெனோபாஸ் சிக்கலுடன் இதுவும் சேர்ந்து எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்குள் எழும் மனப்போராட்டங்களைத் தெளிவாகப் பிரித்து உணர முடியாமல் மனச்சுழலுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

நாற்பதுக்குப் பின்...

கணவர், குழந்தைகள்தான் வாழ்க்கை தனக்கென ஒரு வாழ்க்கை இல்லை என்பதான மாய வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தன் இளமைப் பருவம் முழுவதையும் குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும்தான் பெரும்பாலோனர் செலவிடுகின்றனர். குடும்பம் தாண்டி வேறு ஒன்றைச் சிந்திக்க முடியாத நிலை தானாக வாய்க்கப்பெற்றுவிடும். ஏனென்றால் நம் குடும்ப அமைப்பு பெண்களை அப்படியாகத்தான் வார்த்து எடுக்கிறது.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் – 3

சில நேரம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென படபடப்பு ஏற்பட்டு, ஏஸியிலும் வியர்வை பெருகும். இரவு ஆழ்ந்த தூக்கமிருக்காது. அதே போல திடீரென குளிரில் உடல் நடுங்கும். சில நிமிடங்கள் நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது பெரும்பாலும் இதயம் சம்மந்தப்பட்டதில்லை ஹாட் ப்ளஷ் என்றார் மருத்துவர். ஹார்மோன்களின் தாறுமாறான ஏற்ற இறக்கத்தின் விளைவு. சிலருக்கு மார்பில் பாரத்தைச் சுமப்பது போன்ற வலியிருக்கும். அந்த வலி நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போலத் தோன்றும். இது பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் - 2

ஆறு மாதம் முடிந்த நிலையிலும் உதிரப்போக்கில் பெரிதாக மாற்றம் இல்லாமல் போக, அவரிடம் கேட்டதற்குச் சிலருக்கு இது வருடக்கணக்கில் எடுக்க வேண்டி இருக்கும். மருந்துடன் நீங்கள் யோகா, தியானம் மேற்கொண்டால் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். அந்த மருத்துவத்தில் எனக்கு ஒரு பலனும் கிட்டவில்லை. 2016 இல் சித்தாவை நிறுத்திவிட்டேன்.

பெண்களைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ்

மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.