UNLEASH THE UNTOLD

Tag: bharathi thilakar

அம்மா என்பவர் தியாகி?

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான திருமணங்கள் இருக்கும். ஆனால், மகனுக்குச் சமைத்துக் கொடுக்க ஆள் வேண்டும், அவன் வெளியில் சாப்பிட்டுச் சிரமப்படுகிறான் எனத் திருமணம் செய்து வைப்பது, எல்லாம் ஒருத்தி வந்தால் சரி ஆகிடுவான் எனத் தீய பழக்கங்கள் கொண்ட மகனுக்குத் திருமணம் செய்து வைப்பது போன்றவை எல்லாம் நம் ஊரில்தான் நடக்கும். தீயப் பழக்கங்களை மறைத்து திருமணம் செய்து வைத்து, எத்தனை பெண்களின் வாழ்வைப் பெற்றோர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நம்மைச் சுற்றிப் பார்த்தாலேயே தெரியும்.

மர்மயோகி (1951)

எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

ஏழை படும் பாடு

அம்பலவாணனிடம் பணம் பறிக்கும் நோக்கில் நாகியின் தம்பியின் கூட்டம், அவரைக் கட்டி வைக்கிறது. அஞ்சலை, காவல் துறைக்குத் தகவல் கொடுக்க, வருபவர், நமது ஜாவர்தான். இப்போது அம்பலவாணன் யார் என்பது அவருக்குத் தெரிகிறது. இதை அறிந்த அம்பலவாணன், லட்சுமியுடன் ஊரைவிட்டுப் போக நினைக்கிறார். அப்போது, உமாகாந்தன், தான் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் லட்சுமிக்கு எழுதி அனுப்பிய கடிதம், அம்பலவாணன் கையில் கிடைக்க, அவர் போராட்டக் களத்திற்குச் செல்கிறார். அங்கு, போராட்டக்காரர்களிடம், ஜாவர் சிக்கி இருப்பதைப் பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் ஜாவரை அவர்கள் கொலை செய்ய துப்பாக்கியை எடுக்கும் போது, அம்பலவாணர் சென்று காப்பாற்றிச் செல்கிறார்.

நகர்தல் என்றும் நன்று

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீரே என்னவர் என வாழ்ந்தவர்கள்தாம் இவர்கள் எல்லாரும். இவ்வளவு ஏன் காதலித்துத் திருமணம் செய்து, நல்லபடி வாழ்ந்து மணமுறிவு ஏற்பட்டு வாழ்பவர்கள் இல்லையா? வேறு திருமணமும் அவர்கள் செய்துகொள்வது இல்லையா? வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, இணையர் இறந்து வேறு திருமணம் செய்து நிறைவாக வாழ்பவர்களை நீங்கள் பார்த்ததில்லையா? இவர்களால் எல்லாம், கடந்த காலத்தை மறந்து வாழ முடியும்போது, உங்களால் ஏன் முடியாது?

திகம்பர சாமியார்

‘மைசூர்ல மழை வருது, காவேரியில் தண்ணி வருது. அதுக்கு வரி. வித்தா வரி; வாங்கினா வரி; காபி குடிச்சா வரி; வெத்தலையைப் போட்டா போயிலைக்கு வரி; சுருட்ட குடிச்சா நெருப்பெட்டிக்கு வரி;. கொஞ்ச நேரம் தமாஷா பொழுதைப் போக்கிட்டு வரலாமுன்னா அதுக்கும் தமாஷா வரி’ என வரி குறித்து விமரிசனம் வருகிறது.  

இதய கீதம்

நாட்டின் அமைச்சராக இருப்பவர் M G சக்கரபாணி. அவர், சகோதரர்கள் இருவரையும் முதலில் பிரிக்க வேண்டும்; பின் நாட்டைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைக்கிறார். இதனால், போர்க்களத்தில் இருந்து வரும் பிரதாபன் மற்றும் தாரா இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என ஆலோசனை சொல்கிறார். குடும்பத்தில்  அனைவரும் ஏற்கின்றனர். தாரா ஒன்றும் சொல்ல முடியாமல் அழுகிறார். இவர்தான் உன் அண்ணி என சொல்லும்போது, ஜீவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

மனோன்மணி

மனோன்மணிக்குப் பொருத்தமானவன் புருஷோத்தமனே என்பதை முனிவரும் சீவகனிடம் தெரிவித்தார். குடிலன், தன் மகன் பலதேவனுக்கே மனோன்மணியை மணம் முடித்தால் பாண்டிய நாடே தன் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என நினைத்தான்.

புருஷோத்தமனின் மனநிலையை அறிந்து கொள்ள, நடராசனை அனுப்ப குரு நினைத்தார். குடிலன், தன் மகன் பலதேவனைத் தூது அனுப்பலாம் எனச் சொன்னார். மன்னரும் அவ்வாறே பலதேவனை அனுப்பினார். பலதேவனின் சூழ்ச்சி சொற்களால், பாண்டிய மன்னன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு புருஷோத்தமன் எண்ணம் வந்து விட்டது.

என் மனைவி

மனைவி செல்லம் வெளியில் சென்று வரும்போது நல்லபடி அலங்காரம் செய்து கொண்டு செல்வதில் இவருக்குச் சந்தேகம். செல்லம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போன நேரத்தில் அவரது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் தோழி சுவாதி வருகிறார். சுவாதியின் முதலாளி அம்மா, ஒரு மாதம் உடுத்திய சேலையை மறுமாதம் இவரிடம் கொடுத்துவிடுகிறார். பதினைந்து ரூபாய் விலையில் மூக்குத்தி வாங்கிக் கொடுத்து இருக்கிறார். இப்பெண்ணும் விலை மலிவான நகைகள் வாங்கிப் போட்டு சினிமா நடிகை போல வந்திருக்கிறார். கோயிலில் இருந்து வந்து பார்த்த செல்லத்திற்கு, இவற்றை எல்லாம் கணவர்தான் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம். சுவாதியின் முதலாளி மதுரம் செல்லத்திற்கு ஏற்கெனவே தெரிந்தவர் என்பதால், சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவருக்குக் கடிதம் எழுதுகிறார்.

மந்திரி குமாரி

திருடும் பார்த்திபன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்கிற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன் பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். காமம் அங்கே கலையாகிறது. அதுபோல கொள்ளை அடிப்பதும் ஒரு கலைதான்!” என்கிறான்.

மருதநாட்டு இளவரசி

இளவரசியைத் தன் நாட்டிற்குக் கொண்டு செல்கிறான் ருத்ரன். முதலில் காண்டீபன் மறுத்தாலும், பின் சென்று காப்பாறுகிறார். இருவரும் காளிங்கனின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகிறார்கள். அப்போது அங்கு வந்த துர்ஜெயன், அறையைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். சன்னல் கம்பியை வளைத்து இருவரும் தப்பி விடுகிறார்கள். துர்ஜெயன் குழு துரத்திச் செல்கிறது. இளவரசி, காளி கோயிலுக்குள் சென்றுவிடுகிறார். ஆண்கள் உள்ளே போக முடியாது என்ற கட்டுப்பாடு இருப்பதால், இவர்களால் உள்ளே நுழைவு முடியவில்லை. ஆனால், அருகில் ஒரு சுரங்க வழி இருப்பதைத் தற்செயலாகப் பார்க்கிறார்கள். அதன் வழியே உள்ளே செல்கிறார்கள். நாயகனுக்கு மட்டும் அந்த தற்செயல் வழி தெரியாமலா போய்விடும். அவரும் உள்ளே போகிறார்.