வெண்பாவும் வேந்தனும்
”ஏய், மரியாதையா பேசுடா. பல்லைத் தட்டிடுவேன். உன் தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம் போ.” பாதி சாப்பிட்ட முறுகல் தோசைத் தட்டை வீசி எறிந்தாள்.
”ஏய், மரியாதையா பேசுடா. பல்லைத் தட்டிடுவேன். உன் தோசையும் வேணாம் ஒண்ணும் வேணாம் போ.” பாதி சாப்பிட்ட முறுகல் தோசைத் தட்டை வீசி எறிந்தாள்.
“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.
உங்கள் மாமாவுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள்தான் பக்குவமாக இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். திருமணமாகி விட்ட காரணத்தினாலேயே மனைவி மீது முழு ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்காதீர்கள். அவர் முதலில் தந்தைக்கு மகள். பின்புதான் உங்கள் மனைவி.
பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் தனியே சிரித்துப் பேசுவதைத் தவிருங்கள். அவர்கள் முன்பு மனைவியைத் தொட்டுப் பேசுவதோ கொஞ்சுவதோ குடும்ப ஆண்களுக்கு அழகில்லை.
“இதிலென்ன டவுட். நான்தான் வெச்சிருக்கேன்.அக்கவுண்ட் பாஸ்வேர்ட் டீடெய்ல்ஸ் எல்லாமும் என் கிட்டதான். அவனுக்குப் பணத்தை எல்லாம் மேனேஜ் பண்ணத் தெரியாது. சமத்தா வேலைக்குப் போயிட்டு வருவான், வீட்டைப் பார்த்துப்பான். அதுக்கே அவனுக்குக் கூறு பத்தாதுப்பா. அதனால மணி மேனேஜ்மெண்ட் எல்லாம் நான்தான்.”
“ம்ம் ஆமாம், வீட்டுக்கு வரப்போறவன் கிட்ட கை நீட்டிக் காசு வாங்குறது அசிங்கம்னு போட்டுருக்குற பாண்ட் ஷர்ட்டோட வந்தால் போதும்னு சொன்னோம். அவன் என்னடான்னா என்னையும் என்னைப் பெத்தவங்களையுமே பிரிக்கப் பாக்குறான்!”
“அவனுக்கு அல்சர் இருந்ததே தெரியாது. எதையுமே சொல்ல மாட்டான். ஒரு தலைவலி காய்ச்சல்னு படுத்ததில்லை. எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பான். சமையலுக்கு, தோட்ட வேலைக்கு எல்லாத்துக்கும் ஆள் இருந்தாலும் அவனே இழுத்துப் போட்டு எல்லா வேலையும் செய்வான். குறிப்பா என்னை அப்படிப் பார்த்துப்பான். அவன் இல்லாம எப்படி இருக்கப் போறேன்னே தெரியல…”
நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான் வருண். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா. ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா! வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாகச் சொல்லி இருந்தாள். கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய உணவு நேரத்தில் பேசுவதாகச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக்கொண்டே இருந்தான் வருண்.
நீங்கள் ‘வழிதவறி’ நடந்தாலும் உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்தான் உங்களுக்கு ‘நல்ல வாழ்வு’ கிடைத்திருக்கிறது. உங்கள் தலையில் நீங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளாதீர்கள். ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இதனை ஒரு கெட்ட கனவாக எண்ணி மறந்து விடுங்கள். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் கற்புடன் நடந்துகொள்ளுங்கள்.
நிலா வீட்டுக்குள் நுழைந்ததும் வருணின் தம்பியும் ஒன்று விட்ட மச்சினர்களும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளறைக்கு ஓடிவிட்டார்கள். மீசை லேசாக அரும்பத் தொடங்கி இருந்த பையன் ஒருவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் நிலா.
“நிலா, என்ன சொல்ற? உனக்கு அது தப்புன்னு தோணலியா?” வருணின் குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.
“என்ன தப்பு? அது அவங்க ப்ரைவசி. அதுல நீ மூக்கை நுழைக்கிறதுதான் தப்பு. பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க. உங்கம்மா பார்க்க மாட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கியா?” என்று நக்கலாகக் கேட்டாள் நிலா.