UNLEASH THE UNTOLD

Tag: Kids

நம் குழந்தைகளைச் சரியாக வளர்க்கிறோமா?  

பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை - இங்கு தாய்மை விற்கப்படும்

எங்களது (அ) நாங்கள் பரிந்துரைக்கும் பிரசவ மையங்களில் சேர்ந்தால் வலிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் நடத்தும் கர்ப்பகால வகுப்புகளில் கலந்து கொண்டால் வயிற்றிலேயே குழந்தையை ஐன்ஸ்டைன் ஆக்கிவிடலாம் என்றெல்லாம் அளந்துவிட்டு, அதன் மூலம் தொழிலைப் பெருக்கிப் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.

டே கேர் நாள்கள்...

மரியாதை என்பது மனதிலும் ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதிலும்தான் இருக்கிறது; அவரவர் அவர் பெயர்களுக்குப் பின்னாடி ‘அக்கா, அண்ணா’ என்று அழைப்பதில் இல்லை; அப்படி உங்களை யாராவது கூப்பிட வேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் விருப்பம்; அதேபோல அப்படிக் கூப்பிட விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை.

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?

ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிற்க வைத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். எத்தனையோ தடவை சொல்லி இருப்பேன், எத்தனையோ குழந்தைகள் ஆதரவின்றி பெற்றோராக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களைத் தத்து எடுத்துக்கொள் என்று. ஆனால், மனிதர்களின் மனம் தத்து எடுத்துக் கொள்ளும் கருத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை.குழந்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே பெண் என்பவள் பூரணப்படுகிறாள், குழந்தை பெற்றால் மட்டுமே அவள் தாய்மை என்னும் உணர்வு அடைவதாகக் கற்பனைகளைப் புகுத்திவிட்டது பெண்ணின் மனதில்.

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

குற்றவுணர்வு கொள்ளும் அம்மாக்களின் கவனத்திற்கு...

குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

வீட்டில் என்ன விசேஷம்?

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

தொட்டால் குற்றமா?

ஒரு குழந்தைக்கு நல்ல தொடுதல் (Good touch) கெட்ட தொடுதல் (Bad touch) சொல்லிக் கொடுக்க வேண்டும் எனப் பேசுகிறோம், குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அவர்களின் உடலைக் குறித்த புரிதலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறோம், அப்படியிருக்க அவர்களின் உடலைத் தொடுவதற்கு அவர்களின் அனுமதி வேண்டும் எனப் பேசுவதும் மிக முக்கியமானது என உணருவது மிகவும் அவசியம்.

நான் எப்படி வந்தேன் அம்மா?

உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்...

என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.