UNLEASH THE UNTOLD

திருமலைச் செல்வி

பாலினம் குறித்தும் குழந்தைகளிடம் பேசுவோம்!

குழந்தைகள் நிலா, காற்றாலை மின்சாரம், ராக்கெட் பற்றியோ கேட்கும்போது, நீங்கள், ‘ஆஹா, என் குழந்தை எவ்வளவு அறிவா பேசுது’ என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் பெற்றோரே அதே மாதிரி குழந்தைகள் பாலினம் பற்றிக் கேள்வி கேட்கும்போதும் சற்றும் தயங்காமல் பதில் சொல்ல வேண்டும்.

நான் எப்படி வந்தேன் அம்மா?

உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.

ஐ லவ் யூ சொல்லலாமா?

“அம்மா, கல்யாணம் பண்ணப் போறவங்கதான் அப்படிச் சொல்லுவாங்க. நம்ம அப்படிச் சொல்லக் கூடாது” என்றார்கள். “அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நமக்கு யாரைப் பிடிச்சிருந்தாலும் அல்லது ஏதாவது ஒரு உணவு பொருளைப் பிடித்திருந்தால்கூட ‘ஐ லவ் திஸ’ என்று சொல்லலாம். எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும் அதனாலதான் நான் சொன்னேன். உங்க மேல எனக்கு அவ்வளவு அன்பு” என்றேன். என் குழந்தைகள் நான்கு வயதிலும் ஆறு வயதிலும் புரிந்து கொண்ட அதீத கற்பனையின் பிம்பத்தை நான் என்னுடைய உயர்நிலை வகுப்பில் தெரிந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்...

ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.

வாழ்வியலுக்கான அறத்தைக் கற்றுக்கொடுங்கள்!

பள்ளியில் ஆசிரியர் குழந்தைகளோடு உரையாடும்போதோ பாடம் கற்பிக்கும் போதோ இடையிடையே அன்றாட செய்திகளைப் பற்றிய உரையாடல்களோ அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற ஆளுமைகளையோ அறிமுகப்படுத்துங்கள்.

சக மனிதனை மதிக்கக் கற்றுக் கொடுப்போம்!

உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இடையே மனக்கசப்பு, முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதைக் குழந்தைகளிடம் கூறி, “நீங்க அவங்ககூடப் பேசக் கூடாது. நமக்கும் அவங்களுக்கும் சண்டை” என்று உறவினர்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.

உருவக்கேலி

குண்டாக இருக்கும் குழந்தைகளிடம் சொல்லுங்கள், யாரும் கிண்டல் செய்து சிரித்தால் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னுடைய உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறது என்று சொல்லுமாறு அறிவுறுத்துங்கள்.

பாராட்டும் கண்டிப்பும்

செழியனுக்கு காரில் பயணம் செய்வதென்றால் பிடிக்கும். நான் அவனிடம் இதைப் பற்றிப் பேசும்போது, “நாங்க உனக்கு கார் வாங்கித் தருகிறோம் என்று கூற மாட்டோம். நீ படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும்” என்றுதான் கூறுவோம். அந்த வார்த்தை என்னவோ அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சாமி கும்பிடும்போது, “நான் படிச்சுப் பெரியவனாகி கார் வாங்கணும், எல்லாரையும் கார்ல கூட்டிட்டுப் போய் சாப்பிட அவைக்கணும்” என்று வேண்டுவான்.

இது சரியா?

இனிவரும் காலங்களில் என்று கூறுவதைவிட சம காலத்திலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எந்தக் குழந்தைகளாக இருந்தாலும், ஏன் பெண் குழந்தைகளை வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பது என் கருத்து.

குழந்தைகளிடம் பேசுவோம்!

“செழியன், நம்ம எல்லாரும் கப்பல்ல போய்க்கிட்டு இருக்கோம். அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, நீ எல்லாரும் கடல்ல விழுந்துட்டோம். நீ மட்டும்தான் கப்பல்ல இருக்க. நீ யாரையாவது ஒருத்தரைதான் காப்பாத்த முடியும். நீ யாரைக் காப்பத்துவ?” என்று கேட்டேன்