நூலகத்திற்குள் ஓர் ஆந்தை
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எல்லா ஆண்டும் கன்னிமரா நூலகத்தின் தொல் பகுதி திறக்கப்படும். ஒருவாரம் மட்டும் திறந்திருக்கும். இந்த ஆண்டு 23 -26ஆம் தேதி நூலகத்தின் பழைய பகுதி திறக்கப்பட்டு இருந்தது. 24.04.2025…
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எல்லா ஆண்டும் கன்னிமரா நூலகத்தின் தொல் பகுதி திறக்கப்படும். ஒருவாரம் மட்டும் திறந்திருக்கும். இந்த ஆண்டு 23 -26ஆம் தேதி நூலகத்தின் பழைய பகுதி திறக்கப்பட்டு இருந்தது. 24.04.2025…
பொதுவாகக் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னுடைய செயலுக்குப் பொறுப்பு ஏற்கும் தன்மையுடனும் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சிறிய வயதில் இருக்கும் போது பெற்றோர் ஏன் கண்டிக்கிறார்கள் என்று நினைப்பார்கள். அது சிறிது வளர வளரப் புரியும். நல்ல பெற்றோருக்குத் தெரியும் ‘எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும் எப்போது கண்டிக்க வேண்டும்’ என்று.
அடுத்த நாளும் பனியில் மலையேற்றம் செய்தோம். கால்களை எப்படிப் பனியில் வைக்க வேண்டும் என்று இந்த கேம்பில் இருந்து புறப்படும் பொழுதே கூறிவிட்டார்கள். நடக்கும்போது, ஒன்று முன் பாதத்தை உறுதியாக அழுத்தி வைக்க வேண்டும் அல்லது குதிகாலை அழுத்தி வைத்து நடக்க வேண்டும். பனி, பார்ப்பதைப் போல் இனிமையாக இருக்காது. சிறிது சறுக்கினாலும் விழுந்து விடுவோம். விழுவதில் ஒன்றும் இல்லை. திரும்பியும் எழுவதில்தான் இருக்கிறது. வழிகாட்டி ‘கரம்’ திடீரென்று எங்கிருந்து வருகிறார் என்பதே தெரியாமல் மின்னல் போல வந்து உதவி செய்வார்.
மரியாதை என்பது மனதிலும் ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதிலும்தான் இருக்கிறது; அவரவர் அவர் பெயர்களுக்குப் பின்னாடி ‘அக்கா, அண்ணா’ என்று அழைப்பதில் இல்லை; அப்படி உங்களை யாராவது கூப்பிட வேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் விருப்பம்; அதேபோல அப்படிக் கூப்பிட விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை.
சேலையைக் கட்டினால் நம் கவனம் முழுவதும் சேலையில்தான் இருக்க வேண்டும். சேலை விலகாமல், சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். உடை என்பது ஒருவருக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்துதான், அது பிடித்த உடையாக இருக்க முடியும்.
ஆண்கள் நீளமாக முடி வைத்திருந்தால் மேம் என்றா கூப்பிடுகிறார்கள்? கூப்பிடுவதுகூட பரவாயில்லை. கிராப் கட் செய்து இருந்தால் அது ஆண்தான் என்று எப்படி முத்திரை குத்த முடியும்?
இந்தப் படம் எனக்குப் பிடிக்க காரணம் என்னவென்றால், ROCCA எப்பொழுதும், எது நடந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பாள்; அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுப்பாள்.
PSBB விசயம் பற்றி தோன்றியது. பெரியவர்கள், ‘அவ குழந்தைதானே, அவளுக்கு என்ன தெரியும்?’ அப்படிங்கிறாங்க. ஆனால், எவ்வளவு பெரிய விசயத்தை குழந்தைகள் மேல செய்றாங்க…
பஜாஜ் எம்80 பைக்கை ஓட்டிக்கொட்டு இருக்கும்போது பிருந்தாவுக்கு முன்னாடி போய்க்கொண்டு இருந்த பஸ் திடீரென நின்றது. பிருந்தா தோழரால் பிரேக் அடிக்க முடியவில்லை. வண்டி இன்னும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால், அவர் கியரைப் பிடித்துக் கொண்டு இருந்ததால், அவரால் பிரேக் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சில ஆட்டோக்காரர்கள் ‘கால்ல பிரேக்கைப் பிடி’ என்று கத்த, தோழர் பிரேக்கைப் போட, ஆட்டோக்காரர்கள் பைக்கைப் பிடிக்க – சரியாக இருந்தது.
Before Trekking நான் வீடு மட்டும்தான் வரைவேன்; பிருந்தாவுடைய ஒரு புத்தகத்தில் கூட அது அட்டைப்படமாக வந்தது. After Trekking, கடல், வானம், நிலா என நிறைய நீர்வண்ண ஓவியங்கள் வரைந்தேன்.