UNLEASH THE UNTOLD

Tag: family

இதுதான் நீ வேலைக்குப் போற லட்சணமா?

ஜஸ்டினுக்குப் பதற்றமாக இருந்தது. இது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் பணியாற்றி வந்தவனுக்குப் புதிய வேலையும் பதவி உயர்வும் கிடைத்திருந்தது. ஆனால், ஒரு சிக்கல். இருபாலரும் படிக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புக்குக் கணிதம்…

சமையலறை எனும் சாபம்

இப்படி நேரம் காலம் பார்க்காமல் வருடத்தின் அத்தனை நாட்களும் ஓயாது உழைக்கிறாளே, உங்கள் வீட்டு மகராசி, அவளுக்கு ஒரு நாளாவது நீங்கள் லீவு கொடுத்ததுண்டா தோழர்களே? என்றாவது ஒரு நாள், நீங்கள் சாப்பிடும்போது, “சேர்ந்து சாப்பிடலாம் வா” என்று உங்கள் இணையரையோ தாயையோ என்றாவது அழைத்ததுண்டா? “தினமும் நீதானே பரிமாறுகிறாய், இன்று நீ உட்காரு. நான் உனக்கு தோசை சுடச்சுட சுட்டுத் தருகிறேன்” என்று கூறியதுண்டா?

விடுமுறையின் போதுதான், சுடச்சுட பஜ்ஜி போண்டா சுட்டுக் கொடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

ஹாய், சாப்பிட்டாச்சா?

“நீங்க இருங்க மாமா, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு வருணே எல்லாம் செய்தான். ஆனாலும் சமையலறையில் ஓர் ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்தபடி மாமனார் உத்தரவுகளைப் பிறப்பிக்க, வருண்தான் ஓடியாடி எல்லாம் செய்தான். சின்ன மருமகளுக்கு மீனை இப்படிச் செய்தால் பிடிக்காது. பெரிய மருமகள் சிக்கன் தவிர எதுவும் சாப்பிட மாட்டார் என்கிற நிபந்தனைகளுக்கேற்ப ஆளுக்கு ஒன்றாகப் பார்த்துப் பார்த்துச் செய்தான் வருண்.

அறியாத மனசு... புரியாத வயசு...

காயத்திரி அத்தைக்குப் பக்கத்து வீடு. காயத்திரியும் செல்வனும் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவர்கள். செல்வனுக்குக் காதல் அரும்பி தன் காதலை முதலில் சொல்லியிருக்கிறான். ஒரு சில வருடங்கள் கழித்து காயத்திரி சம்மதம் சொல்ல, தற்போது வீட்டிலும் சொல்லியிருக்கிறான் செல்வன்.

பண்டிகைகள்... திருவிழாக்கள்... பெண்கள்...

பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் என்பது விடுமுறை நாட்கள் என்றாலும் ஒய்வுக்கான நாள்கள் அல்ல. சாதாரண நாட்களைவிட பன்மடங்கு உழைப்பைக் கோரி நிற்கும் நாட்கள். வீடும் அடுப்படியும் மட்டுமே பெண்களின் உலகமாக இருந்த காலம் இப்போது இல்லை. பல வீடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதால் அவர்களின் வீட்டு வேலைகள் குறைந்துவிட்டதா என்றால் இல்லை. என்ன வேலைக்குச் சென்றாலும், சடங்குகள், மத நம்பிக்கைகளில் விருப்பம் இல்லாவிட்டாலும், வீட்டில் விஷேசங்கள், பண்டிகைகளைக் கொண்டாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் பல பெண்கள் இருக்கின்றனர்.

மாற்றம் வரும் நாள் என்றோ?

புத்தரை உலகமே கொண்டாடுகிறது. புத்தருக்குப் பதிலாக அவருடைய மனைவி யசோதரை தன் குடும்பத்தைவிட்டு துறவு சென்றிருந்தால், இந்த உலகம் இன்று புத்தருக்கு கொடுத்த அதே அங்கீகாரத்தை யசோதரைக்கும் வழங்கியிருக்கும்மா? ஏனென்றால் யசோதரை பெண்ணாகப் பிறந்திருப்பதால், அவர் மீது தேவையற்ற கலங்கத்தையெல்லாம் இவ்வுலகம் பழி சுமத்தியிருக்கும். இதுதான் இன்றும் பெண்களின் நிலைமை.

வெண்பாவுக்கு ஒரு நியாயம், வேந்தனுக்கு ஒரு நியாயமா?

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

தி கிரேட் இண்டியன் ஃபேமிலிகள்

இந்தக் குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே மட்டுமல்ல வயதானவர்கள், குழந்தைகள் இடையே, வீட்டில் உள்ள மற்ற பெண்கள் புதிதாக வந்த பெண் மீது காட்டுவது என்று நிறைய உறவுகளிடம் ஏற்படலாம். பிரிந்து வாழும் தம்பதியர் இடையே, விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் இடையேகூட ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அது குடும்ப வன்முறையில் சேர்ந்தது.

'அரேன்ஜ்டு மேரேஜ்' பரிதாபங்கள்... 2 

ஆறுமுகம் மாமாதான் ஆரம்பித்தார். “நான் பையனோட தாய் மாமா. இவரு பையனோட அப்பா, மேலாளர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவங்க பையனோட அம்மா. இல்லத்தரசி. பொண்ணு பொறியியல் முதல் வருசம் படிக்குது. பையன் மூத்தவன், பொண்ணு இரண்டாவது. இவங்க என் இரண்டாவது தங்கை. இவன் அவங்க மகன். பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்…” இப்படி எல்லா உறவுகளையும் கணீரென்ற உரத்த குரலில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஆறுமுகம் மாமா.

ஓர் ஆணுக்கு இவ்வளவு ரோஷம் இருக்கலாமா?

என் புருசனைத் தானே நான் உரிமையுடன் அடிக்க முடியும். ’லேசாகத்தான் தட்டினேன். கோபித்துக் கொண்டு வந்து விட்டான்’ என்று வருத்தப்பட்டார்.

நீயே சொல் அருண். ஓர் ஆணுக்கு இவ்ளோ ரோஷம் இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்? நீயும்தான் ஒரு குடும்பத்தில் வாழப் போயிருக்கிறாய். எவ்வளவோ கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழவில்லையா? உனக்கு நேரமிருக்கும் போது தம்பியை அழைத்துப் புத்திமதி சொல்.