UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

மனோன்மணி

மனோன்மணிக்குப் பொருத்தமானவன் புருஷோத்தமனே என்பதை முனிவரும் சீவகனிடம் தெரிவித்தார். குடிலன், தன் மகன் பலதேவனுக்கே மனோன்மணியை மணம் முடித்தால் பாண்டிய நாடே தன் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என நினைத்தான்.

புருஷோத்தமனின் மனநிலையை அறிந்து கொள்ள, நடராசனை அனுப்ப குரு நினைத்தார். குடிலன், தன் மகன் பலதேவனைத் தூது அனுப்பலாம் எனச் சொன்னார். மன்னரும் அவ்வாறே பலதேவனை அனுப்பினார். பலதேவனின் சூழ்ச்சி சொற்களால், பாண்டிய மன்னன் மீது போர் தொடுக்கும் அளவிற்கு புருஷோத்தமன் எண்ணம் வந்து விட்டது.

என் மனைவி

மனைவி செல்லம் வெளியில் சென்று வரும்போது நல்லபடி அலங்காரம் செய்து கொண்டு செல்வதில் இவருக்குச் சந்தேகம். செல்லம் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடப் போன நேரத்தில் அவரது வீட்டு வேலைக்காரப் பெண்ணின் தோழி சுவாதி வருகிறார். சுவாதியின் முதலாளி அம்மா, ஒரு மாதம் உடுத்திய சேலையை மறுமாதம் இவரிடம் கொடுத்துவிடுகிறார். பதினைந்து ரூபாய் விலையில் மூக்குத்தி வாங்கிக் கொடுத்து இருக்கிறார். இப்பெண்ணும் விலை மலிவான நகைகள் வாங்கிப் போட்டு சினிமா நடிகை போல வந்திருக்கிறார். கோயிலில் இருந்து வந்து பார்த்த செல்லத்திற்கு, இவற்றை எல்லாம் கணவர்தான் வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்று சந்தேகம். சுவாதியின் முதலாளி மதுரம் செல்லத்திற்கு ஏற்கெனவே தெரிந்தவர் என்பதால், சந்தேகத்தை நிவர்த்தி செய்ய அவருக்குக் கடிதம் எழுதுகிறார்.

சபாபதி - 1941

மோட்டார் பஸ்களுக்கு பெட்ரோல் கிடைக்காததால் மக்களுக்குச் சிரமம் இருப்பதாகவும், கரி போட்டு ஓட்டும் வாகனத்தை ஓட்டச் சொல்லி, அரசு பரிந்துரைப்பதாகவும் செய்தித் தாளில் (தினமணி) வாசிக்கிறார். முதல் பக்கம் நமக்குக் காட்டும் பகுதி, தமிழில்தான் இருக்கிறது. ஆனால், அதே முதல் பக்கத்தில் மடித்து அவர் வாசிக்கும் கீழ்ப்பகுதியை சபாபதி ஆங்கிலத்தில் வாசிக்கிறார். நகைச்சுவைக்காக அவ்வாறு காட்டினார்களா அல்லது உண்மையில் செய்தித் தாள்கள் இரு மொழிகளில் வந்தனவா என்று தெரியவில்லை. இரண்டாம் உலகப்போர் குறித்த தகவல்கள் ஆங்காங்கே உள்ளன.

மந்திரி குமாரி

திருடும் பார்த்திபன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்கிற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன் பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். காமம் அங்கே கலையாகிறது. அதுபோல கொள்ளை அடிப்பதும் ஒரு கலைதான்!” என்கிறான்.

மருதநாட்டு இளவரசி

இளவரசியைத் தன் நாட்டிற்குக் கொண்டு செல்கிறான் ருத்ரன். முதலில் காண்டீபன் மறுத்தாலும், பின் சென்று காப்பாறுகிறார். இருவரும் காளிங்கனின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகிறார்கள். அப்போது அங்கு வந்த துர்ஜெயன், அறையைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். சன்னல் கம்பியை வளைத்து இருவரும் தப்பி விடுகிறார்கள். துர்ஜெயன் குழு துரத்திச் செல்கிறது. இளவரசி, காளி கோயிலுக்குள் சென்றுவிடுகிறார். ஆண்கள் உள்ளே போக முடியாது என்ற கட்டுப்பாடு இருப்பதால், இவர்களால் உள்ளே நுழைவு முடியவில்லை. ஆனால், அருகில் ஒரு சுரங்க வழி இருப்பதைத் தற்செயலாகப் பார்க்கிறார்கள். அதன் வழியே உள்ளே செல்கிறார்கள். நாயகனுக்கு மட்டும் அந்த தற்செயல் வழி தெரியாமலா போய்விடும். அவரும் உள்ளே போகிறார்.

பொன்முடி

‘தேசமெங்கும் நல் வளம் பொங்கும் தொழிலாலே சேவை செய்தே வாழ்ந்திடும் தொழிலாளர்கள் நாமே’ என முத்து குளித்தல் செய்யும் மீனவர் வாழ்வைக் காட்டுவதுடன் திரைப்படம் தொடங்குகிறது. நாயகன், நாயகி இருவரின் குடும்பமும் முத்து வணிகர்கள் என்பதால், முத்து பிறக்கும் இடத்தில் இருந்து கதையும் பிறப்பது நன்றாகவே இருந்தது.

அபூர்வ சகோதரர்கள்

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

வேலைக்காரி

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

நல்லதம்பி 1949

ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரலேகா

இறுதியில் ஆறு நிமிடங்கள் இடம் பெறும், முரசு நடனம் என்பதுதான் பிரம்மாண்டத்தின் உச்சம். இசை, நடன அமைப்பு, அரங்க அமைப்பு என எத்தனை தடவைப் பார்த்தாலும், புதிதாகவே பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. 400 நடனக் கலைஞர்களுள் ஒருவராக நடித்த (அறிமுகமான) எஸ்.என்.லட்சுமி அம்மா தன் இறுதிக்காலம் வரை ( 2012), 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர், இவர் மிகக் கூடுதலான காலம் நடிப்புத் துறையில் இருந்தவர் என்கிற பட்டியலில் உறுதியாக இடம் பெறுபவர்.