UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

மருதநாட்டு இளவரசி

இளவரசியைத் தன் நாட்டிற்குக் கொண்டு செல்கிறான் ருத்ரன். முதலில் காண்டீபன் மறுத்தாலும், பின் சென்று காப்பாறுகிறார். இருவரும் காளிங்கனின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகிறார்கள். அப்போது அங்கு வந்த துர்ஜெயன், அறையைப் பூட்டிவிட்டுச் செல்கிறான். சன்னல் கம்பியை வளைத்து இருவரும் தப்பி விடுகிறார்கள். துர்ஜெயன் குழு துரத்திச் செல்கிறது. இளவரசி, காளி கோயிலுக்குள் சென்றுவிடுகிறார். ஆண்கள் உள்ளே போக முடியாது என்ற கட்டுப்பாடு இருப்பதால், இவர்களால் உள்ளே நுழைவு முடியவில்லை. ஆனால், அருகில் ஒரு சுரங்க வழி இருப்பதைத் தற்செயலாகப் பார்க்கிறார்கள். அதன் வழியே உள்ளே செல்கிறார்கள். நாயகனுக்கு மட்டும் அந்த தற்செயல் வழி தெரியாமலா போய்விடும். அவரும் உள்ளே போகிறார்.

பொன்முடி

‘தேசமெங்கும் நல் வளம் பொங்கும் தொழிலாலே சேவை செய்தே வாழ்ந்திடும் தொழிலாளர்கள் நாமே’ என முத்து குளித்தல் செய்யும் மீனவர் வாழ்வைக் காட்டுவதுடன் திரைப்படம் தொடங்குகிறது. நாயகன், நாயகி இருவரின் குடும்பமும் முத்து வணிகர்கள் என்பதால், முத்து பிறக்கும் இடத்தில் இருந்து கதையும் பிறப்பது நன்றாகவே இருந்தது.

அபூர்வ சகோதரர்கள்

ஒரு சூழ்நிலையில் விஜயன், காஞ்சனா என்கிற பெண்ணைச் சந்திக்க நேருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்த பின், வளர்த்தவர்களே அவர்களை ஒருவருக்கு இன்னொருவர் அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். இரட்டையர்கள் தங்கள் குடும்பத்தை அழித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறார்கள்.

வேலைக்காரி

‘குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு, வளைந்து வளைந்து நடப்பது போலல்லவா வளைந்து வளைந்து பேசுகிறாய் என்கிற கேள்விக்கு மனதில் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்’ என்கிற பதில் போன்ற பல வரிகள் அண்ணாவின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டுகள்.

நல்லதம்பி 1949

ராணி ஒரு தகரத்தை வீசும்போது, நல்லதம்பி, “இது ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், இதுவே ரயிலாகி இருக்கும்; ஒரு மோட்டார் ஆகி இருக்கும்; ஒன்றும் இல்லை என்றால் கூட ஒரு விளையாட்டு சாமான் ஆகியிருக்கும்” என்கிறார். ஜப்பான் குறித்த இந்த மதிப்பேடு அப்போதே இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதாவது இரண்டாம் உலகப்போரில் சிக்கி சிரமப்பட்ட ஒரு நாடு, ஒரு சில ஆண்டுகளுக்குள் இந்தக் கருத்தைப் பிற நாடுகளில் விதைத்து இருக்கிறது என்றால், அதன் கட்டமைப்பு அவ்வளவு வலுவாக இருந்திருக்கிறது எனதான் எண்ணத் தோன்றுகிறது.

சந்திரலேகா

இறுதியில் ஆறு நிமிடங்கள் இடம் பெறும், முரசு நடனம் என்பதுதான் பிரம்மாண்டத்தின் உச்சம். இசை, நடன அமைப்பு, அரங்க அமைப்பு என எத்தனை தடவைப் பார்த்தாலும், புதிதாகவே பார்ப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. 400 நடனக் கலைஞர்களுள் ஒருவராக நடித்த (அறிமுகமான) எஸ்.என்.லட்சுமி அம்மா தன் இறுதிக்காலம் வரை ( 2012), 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர், இவர் மிகக் கூடுதலான காலம் நடிப்புத் துறையில் இருந்தவர் என்கிற பட்டியலில் உறுதியாக இடம் பெறுபவர்.

ஞானசவுந்தரி (1948)

ஞானசவுந்தரியையும் குழந்தையையும் கொல்லச் சொன்னது அந்தப் புதிய ஓலை. பிலவேந்திரனின் தந்தை அவ்வாறு செய்யாமல், ஞானசவுந்தரியைக் காட்டுக்கு அனுப்பி விடுகிறார். ஞானசவுந்தரி காட்டில் அன்னை மரியாள் உதவியால் இழந்த கைகளைப் பெறுகிறார்.

லஷ்மி விஜயம்

மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. என் விருப்பத்தைச் சொல்லிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டு, பெண் உள்ளே போகிறார். பெண்ணின் அப்பா, “பெண்தான் மாப்பிள்ளை கழுத்தில் தாலி கட்டுவாள்; வீட்டு வேலைகள் அனைத்தையும் மாப்பிள்ளைதான் செய்ய வேண்டும்” என்கிறார்.

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி

கல்வி என்னைக் கர்வியாக்கியது, மடமையால் மதி இழந்தேன். என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என சிந்தாமணி, வருங்கால கணவர் காலில் விழுகிறார். காலில் விழுவது என்பது, பாவேந்தரின் கொள்கைக்கு மாறுபாடானதாகத் தெரிந்தது.

ராஜகுமாரி

தமிழ் நாட்டிற்குள் வரும் மந்திரவாதி, பேய் பிடித்தவர் என வரும் பெண்ணுக்கு, “எருமை சாணியைக் கரைத்து ஊற்றிக் குடுமியில் (முடியில்) ஒரு சாண் வெட்டி இரண்டு நாட்கள் பட்டினி போட வேண்டும்” என மருத்துவம் செய்கிறார்.