UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

<strong>டி.என்.ஏ ஆராய்ச்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்</strong>

இந்தப் படிகவியல் ஆராய்ச்சியில் டி.என்.ஏ படிகங்களை ஆராயத் தொடங்கினார். அவரது ஆராய்ச்சியில் 1952ஆம் ஆண்டில் Photo 51 என்று அழைக்கப்படும் ஒரு புகழ்பெற்ற படிகவியல் படம் எடுக்கப்பட்டது. இந்த ஒரு புகைப்படத்தை எடுக்கவே 100 மணி நேரம் ஆனதாம், புகைப்படத்திலிருந்து கிடைத்த தரவுகளைக் கணக்கிடவே ஓர் ஆண்டு ஆகியிருக்கிறது! இந்த ஆராய்ச்சியில் எடுக்கப்பட்ட 51வது புகைப்படம் என்பதால் அப்பெயர் வந்தது என்பதும் கூடுதல் தகவல். இந்த 51வது புகைப்படம்தான் டி.என்.ஏ வடிவத்திற்கான முழுமுதல் ஆதாரமாக மாறியது.

<strong>துரித ஆடைகளும் சுற்றுச்சூழலும்</strong>

ஓர் ஆடை உற்பத்தியில் தேவைப்படும் நீரின் அளவை எடுத்துக்கொள்வோம். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் செயல்முறையின்போது செலவழியும் நீரை மறைநீர் (Virtual water) என்பார்கள். ஒரு சாதா வெள்ளை நிறப் பருத்தி டீஷர்ட்டை உற்பத்தி செய்ய 2494 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது! ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்க 8000 முதல் 20,000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது! இவை சாயமேற்றாத உடைகளுக்கான கணக்குகள் மட்டுமே, அதே டீஷர்ட்டில் வண்ணம் வேண்டுமென்றால் கூடுதல் நீரைச் செலவழிக்க வேண்டும்.

கர்ப்ப கால நீரிழிவு நோய்

கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு உடல்கோளாறுகளை உண்டாக்குகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அந்த நபருக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். கருவுற்ற தாய்மார்கள் 20% கர்ப்பகால நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். கரு உருவாவதற்கு முன்பு சர்க்கரை அளவு சரியாக இருந்து, கருவுற்ற பிறகு சர்க்கரை அளவு அதிகரித்தலே கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோயை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே கர்ப்பகாலத்தில் குறைந்தது மூன்று முறையாவது ரத்தத்தில் சர்க்கரை உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது மிகமிக அவசியம்.

<strong>அமெரிக்காவின் முதல் பெண் நிலவியலாளர்</strong>

ஆய்வுப் படிப்பில் சேர்ந்த பிறகும் ஃப்ளாரன்ஸுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. ஆண் மாணவர்கள் பலர் இருக்கும் அறையில் ஒன்றாக அமர்ந்து வகுப்புகளைக் கவனித்தால் ஃப்ளாரன்ஸின் இருப்பு அவர்களைத் திசைதிருப்பும் என்பதால், ஃப்ளாரன்ஸை வகுப்பறையின் கடைசியில் உட்கார வைத்தார்கள். அவருக்கும் பிற மாணவர்களுக்கும் இடையில் ஒரு திரையும் போடப்பட்டது. இது மாணவர்களிடமிருந்து மட்டுமன்றி, ஆசிரியர்களின் பார்வையிலிருந்தும் ஃப்ளாரன்ஸை மறைத்தது. நேரடியாக ஆசிரியர்களைப் பார்க்காமலேயே ஃப்ளாரன்ஸ் பாடம் கற்றார்.

காலநிலை மாற்றமும் பெண்களும்

ஓர் இடத்தின் காலநிலையில் தொடர் மாற்றங்கள் ஏற்படும்போது, அங்கு இருப்பவர்கள் பாதுகாப்புக்காகவோ பிழைப்பு தேடியோ வேறு இடத்துக்குச் செல்வார்கள். இது காலநிலை புலம்பெயர்வு (Climate Migration) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இடம்பெயர்பவர்களில் 70% பெண்களே என்கிறது ஓர் ஆய்வு. இவ்வாறு இடம்பெயரும் பெண்கள் புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இன்னொருபுறம், விவசாயமோ இயற்கை சார்ந்த தொழிலோ காலநிலை மாற்றம் காரணமாகப் பொய்த்துப்போய்விட்டால், ஆண்கள் மட்டுமே பிழைப்புக்காக வேறு ஊர்களுக்குச் செல்வதும் நடக்கிறது.

பாதி கடித்த ருசி மிகுந்த பீச் பழம்

பழங்கால சீனாவின் பேரரசராக இருந்தவரின் காதலன் மிஜி ஸியா, ஒருநாள் அரசருடன் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்த போது, கனிந்து சாறு கொட்டும் ஒரு பீச் பழத்தைப் பாதி கடித்து சுவைத்து அதன் ருசியில் மயங்கியவன், மீதியை அரசருக்கு அளித்தான். அவர் அதை வாங்கிச் சுவைத்துக் கொண்டே தன் மீது அவன் கொண்டிருக்கும் அலாதியான காதலை ரசித்து உருகினார்.

மாதவிடாய்ப் பொருட்களின் சூழலியல் அம்சங்கள்

அந்தக் காலத்தில் குப்பி அல்லது டேம்பான் போன்ற பொருட்களால் பெண்களின் கன்னித்தன்மை போய்விடும் என்ற பயமும் இருந்தது. இன்னொருபுறம், இந்த மாதவிடாய்க் குப்பிகளை ஒரு முறை வாங்கிவிட்டால், அவற்றைப் பத்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், குப்பிகளை விற்பனை செய்த பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஆகவே தொடர் லாபம் தராத மாதவிடாய்க் குப்பிகளை உற்பத்தி செய்ய நிறுவனங்களும் முன்வரவில்லை. மாதவிடாய் சார்ந்த முதலாளித்துவம் (Period Capitalism) என்ற இந்த அம்சமும் நாப்கின்களின் புகழுக்கு ஒரு முக்கியக் காரணம்.

<strong>மகளிர் தினம் – மகளிரின் விருப்பம்</strong>

ஒவ்வொரு பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பெண் சாதனையாளரிடம், “தனிப்பட்ட வாழ்வையும் சாதனையையும் எப்படிச் சமன் செய்தீர்கள்?” என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது பெண் சாதனையாளர்களிடம் கேட்கப்பட்டு, ஆண்களிடம் கேட்கப்படாததே இலைமறை காயாக ஓர் அழுத்தத்தைப் பெண் மீது திணிக்கிறது. என்ன சாதனை புரிந்தாலும் குடும்பச் சுமைகளை நீ சுமந்தே தீர வேண்டும் என்பதாக அந்தக் குரல் ஒலிக்கிறது. இத்தகைய மறைமுக அழுத்தங்கள் பெண் ஆண்மைய சமூகத்தில் வெற்றி பெற விரும்பினால் இரட்டை உழைப்பைத் தர வேண்டும் என்று கோருகிறது.

<strong>தமிழ்நாட்டில் பண்பாட்டுப் படையெடுப்பு யாரால் நடந்தது?</strong>

பிராமணர்கள் சமுதாயத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் பண்பாடுதான் மேன்மையானது என்று பொதுப்புத்தியில் கருத்தப்படுகிறது. இந்தப் பொதுப்புத்தி சிந்தனை, பெரும்பான்மை பூர்வகுடிகளைத் தங்கள் சொந்தப் பண்பாட்டுக் கூறுகளை விடுத்து, கல்யாண சடங்குகள் முதல் கருமாதி சடங்குகள் வரை பிராமணர்களின் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக்கொள்ளச் செய்தது. இந்த எதிர்மறையான பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்தவும் முழு முதல் காரணம், அதிகாரம்.

"நம் வீடு பற்றி எரிகிறது..."

உலக அளவில் இளைஞர்களிடையே காலநிலை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் க்ரெட்டாவின் பங்கு முக்கியமானது. அவரது செயல்பாடுகளால் உந்தப்பட்டு 150 நாடுகளில் உள்ள பதின்பருவத்தினர் காலநிலை செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். க்ரெட்டாவைப் பார்த்து ஊக்கம் பெற்று இவ்வாறு இளைஞர்கள் களத்தில் இறங்குவது ‘Greta Effect’ என்று அழைக்கப்படுகிறது. சமகால சூழல் வரலாற்றில் க்ரெட்டா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு மிகவும் முக்கியமானது, அவசியமானதும்கூட.