UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பணியிடம் எனும் பெருவெளி

ஸ்டெம் துறைகளில் இருக்கும் ஊதிய இடைவெளி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 2021இல் வெளியான ஸ்டான்ஃபோர்ட் பிசினஸ் அறிக்கையில், தொடக்கநிலையிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். பொதுவாக ஸ்டெம் துறைகளில் பெண்களைவிட ஆண்களுக்கான ஊதியம் 40% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பதவி உயர்விலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. ‘

பெண்கள் ஏன் அரசியல் பழக வேண்டும்?

பெண்கள் எத்தகைய உயர்பதவி வகித்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பது இன்னொரு கசப்பான உண்மை. ஆணின் உடைமையாகப் பெண் கருதப்படும் வரையில் இந்தப் பிரச்னை ஓயாது. பெண்களுக்குப் பாலியல்ரீதியான பிரச்னைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அதைக் காரணம் காட்டி தடைகள் போடுதல் தவறு. நான் சந்தித்த நிறைய பெண்கள் அரசியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இதில் படிக்காதவர்களைவிடப் படித்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

பள்ளிகளில் பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது?      

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

சபிண்ட உறவுகள் பாவமா?

என்னதான் பழக்க வழக்கம் என்று சொன்னாலும் பண்டைய இந்தியாவில் குடும்பச் சொத்துகள் வெளியே செல்லக் கூடாது என்பதற்காகவே இத்தகைய திருமணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் இத்தகைய உறவுவழித் திருமணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. நெருங்கிய உறவுகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அங்கு திருமண உறவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

யூன் ஃபாஸ்ஸயின்  அமைதிக்கான தேடல்

அந்த வெளிச்சம், இசை, நீர், உடைகள் – இவை எல்லாவற்றையும் விவரிக்க ஒரு வார்த்தையே என் மனதில் உதித்தது- ‘புனித யாத்திரை.’ வாழும் எழுத்தாளர் இத்தகைய மரியாதையுடன் நடத்தப்படுவதை வெகு அரிதாகவே காண இயலும்.

மூன்றாம் மும்மாதம்

ஆரோக்கியமான குழந்தை எனில் 3 கிலோவிற்கு மேல் இருக்கும் தற்போது 50 செமீ நீளம் இருக்கும். 40வது வாரத்தில் இயல்பாகப் பிரசவவலி ஏற்படும். வெளியே வரவும், வெளியே வந்தால் தனித்து சுவாசிக்கவும் தனித்துக் கழிவுகளை அகற்றவும் குழந்தையால் முடியும். அதனால் 100% தகுதி அடைந்து குழந்தை பிறக்கிறது இவ்வாரத்தில்.

பங்குனி முயக்கம்…

காதல் என்பது தன்னலம் கருதாது. தன் இணைக்காகவே உருகும். என்றாலும் காதல் என்கிற ஒன்றுதான் இன்றும் உலகத்தை இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. பண்டைய தமிழருக்கு வீரமும், காதலும் இரு கண்களாக இருந்தன. மாசி மாத சித்திரை நட்சத்திரம் தொடக்கத்தில் இருந்து பங்குனி மாத சித்திரை நட்சத்திரம் வரையிலான இருபத்தெட்டு நாட்கள் அந்தக் காதல் பெருவிழாவை அரசர் முதல் சாமானியர் வரை எல்லாருமே கொண்டாடி மகிழ்ந்தனர். இலக்கியங்களில் இந்திர விழா காவிரி பூம்பட்டினத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். சிம்மனூர் செப்பேட்டில் மதுரையிலும் இந்திர விழா கொண்டாடியதாக ஒரு குறிப்பு இருந்திருக்கிறது. அன்று இந்த விழா பின் பனிக் காலமான மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இன்றும் நாம் பின்பனிக் காலமான பிப்ரவரியில்தான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறோம். 

ஆப்பன்ஹைமரின் நிழலில்...

கேனரி பெண்களைத் தெரியுமா? கேனரி என்பது மைக்ரோனீசியத் தீவுகளைச் சேர்ந்த ஒரு மஞ்சள் நிறப்பறவை. முதலாம் உலகப் போர் காலத்தில் பல பிரிட்டிஷ் பெண்கள் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தத் தொழிற்சாலைகளில் சிலவற்றில் டி.என்.டி உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து டி.என்.டியை எதிர்கொண்டதால் இந்தப் பெண்களின் தோலே ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறிவிட்டதாம்! இது கேனரி பறவையின் நிறத்தை நினைவுபடுத்தியதால் இந்தப் பெண்களை கேனரி பெண்கள் என்று அழைத்தார்கள். தோல் நிறமாற்றம் மட்டுமல்லாமல் தலைவலி, குமட்டல் போன்ற பிற பிரச்னைகளும் இந்தப் பெண்களுக்கு ஏற்பட்டன. காலப்போக்கில் தொழிற்சாலை நிர்வாகங்கள் பெண்களுக்கு முகக்கவசங்கள் வழங்கத் தொடங்கியதும் இந்தப் பிரச்னை குறைந்தது.

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியமா?

திரையரங்கிற்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்று இன்னொருவர் வாதாடுகிறார். திரையரங்கத்தில் கலாச்சாரம் கிடையாதா? அப்போது மட்டும் நாம் இந்தியாவைவிட்டு வெளியில் போய்விடுவோமா? அமெரிக்கப் பெண்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள் என்று அறிவிக்கிறார் ஒருவர். அவர்கள் இங்கே வரும்போது சேலை அணிகிறார்கள் என்று பெருமை வேறு. நான் கேட்கிறேன். ஐயா… அவர்களுக்குச் சேலை ஒரு புதுமையான ஆடை அதனால் அதை அணிந்து பார்க்க விருப்பப்பட்டு அணிகிறார்கள். வருடம் 365 நாட்களும் சேலையே அணிய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே சுருட்டி உங்கள் முகத்தில்தான் வீசிவிட்டுப் போவார்கள்.

அவள்... அவன்... மேக்கப்...

அலங்காரம் செய்துகொள்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் அழகு மட்டுமே எல்லாம் என்கிற கருத்தை நம்மீது திணித்து வருவது கண்டிக்கத்தக்கது. அக் கருத்து தவிர்க்கப்பட வேண்டியதும்கூட. பெண்கள் ஒப்பனை செய்துகொள்வது குறித்தான நகைச்சுவைகள் (?) காலாவதியான காலத்திலும்கூட பெண்களின் ஒப்பனைப் பேசு பொருளாகத்தான் இருக்கிறது. அழகான ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு வெளியிலோ அலுவலகத்திற்கோ ஏதேனும் நிகழ்வுகளுக்கோ செல்வது அனைவருக்கும் பிடிக்கும்தானே? பின் ஏன் பெண்கள் ஒப்பனை செய்வதையே இந்தச் சமுதாயம் கேலி செய்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது?.