UNLEASH THE UNTOLD

Tag: Story

ஆயிஷா

“பெரியவங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க ஹிரா. நம்ம அதெல்லாம் கண்டுக்காம வுட்ரணும்” என்று அவள் கணவன் சொல்லும் வார்த்தைகள் உண்மைதான் என்று அவன் சொல்லும் போது தோன்றும். எப்போதாவது வரும் அவரிடம் போய் ஏன் மல்லுக் கட்டிக்கொண்டு நிற்பானேன் என்று நினைத்து அவள் விலகிச் சென்றாலும் அவர் வேண்டுமென்றே சண்டை இழுப்பார்.

அபிநயா

“எம்மாடி… ரண்டு வருஷம் கண்ணு மூடி துறக்கதுக்குள்ள போயிரும். போனுலயே எங்க இருந்தாலும் நேருல பாத்து பேசிக்கலாமாமே. அதுல அடிக்கடி பாத்துகிட்டா போச்சி. நீ கலங்காம மவராசியா போயிட்டு வாடி என் ராஜாத்தி . உங்க தாத்தனும் இப்படித்தான் சிலோனுக்குப் போய் தொழில் பாத்தாவல்ல. அந்த வாரிசு இறங்காம இருக்குமா?” என்று தேற்றியவர், அவள் சென்றதும் வருத்தப்படுவார் என்று தெரியும். அவள் சென்னைக்கு படிக்கச் சென்ற போதே ஒரு வாரமாகச்  சரியாகச் சாப்பிடாமல் வருந்தினார் என்று அம்மா சொல்லியிருந்தார் .

செருப்பு

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’

இப்படிக்கு... இலக்கிய நாசினி

ஒரு வகையில் அம்மாவின் ஆர்வம்தான் அவரை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வைத்தது. அங்கிருந்துதான் அம்மாவின் வாசிப்புப் பழக்கமும் ஆரம்பமாயிற்று. ஒரு வகையில் என்னுடையதும்.

8. கந்தலுக்கு நடுவில் காகிதப் பூக்கள்

”எனக்கு பன் வேண்டாம் போ, நீ அப்பா வந்தா சோறு செஞ்சி தரேனு தானே சொன்ன? எனக்குச் சோறு வேணும் பசிக்குது” என்று அழுதபடியே கால்களை உதைத்ததில் குழந்தையின் டீ டம்ளர் சாய்ந்து டீ கீழே சிந்தியது.

இலக்கணம் மாறுதே... 10

“எல்லார் பிறப்புக்கும் ஆதாரமாக இருக்கிற ஒரு விஷயத்தை, எப்படிக் கேவலமாகப் பேசுவதற்கு மனசு வருதுனு தெரியல. ஆணுக்கும் பெண்ணுக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒன்றை, தன் வாழ்வுக்கும் அடுத்த தலைமுறைக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை, ஏன் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய ஒன்றை ஏன் இவ்வளவு கேவலமாகப் பேச வேண்டும்? இழிவாக இளக்காரமாக நினைக்க வேண்டும்? காரணம் என்னவாக இருக்க முடியும் நித்யா?”

இலக்கணம் மாறுதே... 9

“வீட்டில இருந்த அருண், அவனோட காலேஜ் டேஸ் கேர்ள் பிரெண்டோட பேச ஆரம்பிச்சான். ரெண்டு பேரும் அனுப்பியிருந்த மெசேஜை வாசிச்ச எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அருண் கிட்ட சண்டை போட்டு அழுது புரண்டேன். வீட்ட எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்குத் தாங்க முடியாத வலியா இருந்திச்சி. அந்தப் பொண்ணு கிட்ட பேசவே கூடாதுனு சத்தியம் வாங்குனேன்.

இலக்கணம் மாறுதே... 8

“நான் அருணைக் காதலித்தேன். அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அருணைக் காதலித்தாய் சரி, ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்?” என மீண்டும் கேட்டாள் நித்யா.

“காதலிச்சா கல்யாணம்தான் பண்ணுவாங்க. வேறு என்ன பண்ணுவாங்க?” என்று பதில் சொன்னாள் ஷாலினி.

“இல்லை ஷாலினி… நன்றாக யோசித்து பதில் சொல். காதலிச்சா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா என்ன? கல்யாணம் எதுக்காகப் பண்ணின?”

“சமூகத்துல ஒரு அங்கீகாரத்தோட வாழத்தான்…”

இலக்கணம் மாறுதே... -7

சாவியுடன் திரும்பிய ரமேஷ் உள்ளுக்குள், ‘இவுளுங்கள பாக்கவா, இவ்வளவு மினுக்கிட்டு போனா. பார்லர் போயிட்டு வந்துட்டா… ஹேர் ரிமூவல் க்ரீம் வேற… ச்சை… சல்லி காசுக்குப் பிரயோஜனமில்லாமல் நேரத்த வீணாக்கியிருக்கிறேன், இவ எல்லாம் ஒரு ஆளுனு…’ எனக் கோபத்தில் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான்.

இலக்கணம் மாறுதே... 6

எதிரே தெரிந்த கண்ணாடியில் அவளைப் பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. தர்மசங்கடமாக இருந்தது. வாரப்படாத தலைமுடி. சாயம் போன ஒரு நைட்டி. அதுவும் பின்னால் கிழிந்து தொங்கியது. பார்க்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவளுக்கே அவளைப் பார்க்க பிடிக்கவில்லை. கையில் குழந்தையையும் தலை சாயக்கூட இடமற்று நிற்கும் தன்னையும் பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது.