அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது. எட்டி அதனை அணைத்தவள், அருகே…
அத்தியாயம் 12 “இப்பதான் காதுகுத்துப் பண்ணினோம். திரும்பவும் பிறந்தநாள் வேற பண்ணணுமா மாமா” ரேகா மகளைத் தட்டி தூங்கவைத்தபடி மெல்லிய குரலில் கணவனிடம் பேசினாள். செலவு கணக்கை எழுதி கொண்டிருந்தவன் அவளை நிமிர்ந்து பாராமலே,…
பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…
நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…
அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது. இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று…
கதவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது. “ம்மா …” லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி…
“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…
“பெரியவங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க ஹிரா. நம்ம அதெல்லாம் கண்டுக்காம வுட்ரணும்” என்று அவள் கணவன் சொல்லும் வார்த்தைகள் உண்மைதான் என்று அவன் சொல்லும் போது தோன்றும். எப்போதாவது வரும் அவரிடம் போய் ஏன் மல்லுக் கட்டிக்கொண்டு நிற்பானேன் என்று நினைத்து அவள் விலகிச் சென்றாலும் அவர் வேண்டுமென்றே சண்டை இழுப்பார்.
“எம்மாடி… ரண்டு வருஷம் கண்ணு மூடி துறக்கதுக்குள்ள போயிரும். போனுலயே எங்க இருந்தாலும் நேருல பாத்து பேசிக்கலாமாமே. அதுல அடிக்கடி பாத்துகிட்டா போச்சி. நீ கலங்காம மவராசியா போயிட்டு வாடி என் ராஜாத்தி . உங்க தாத்தனும் இப்படித்தான் சிலோனுக்குப் போய் தொழில் பாத்தாவல்ல. அந்த வாரிசு இறங்காம இருக்குமா?” என்று தேற்றியவர், அவள் சென்றதும் வருத்தப்படுவார் என்று தெரியும். அவள் சென்னைக்கு படிக்கச் சென்ற போதே ஒரு வாரமாகச் சரியாகச் சாப்பிடாமல் வருந்தினார் என்று அம்மா சொல்லியிருந்தார் .