UNLEASH THE UNTOLD

Tag: Indu samuthrathin nithilam

காடுகளுக்குள் மறைந்த பொலன்னறுவை ராஜ்ஜியம்

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்ட ராஜராஜ சோழன், அதுவரை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்கு தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவையை முதன்முதலில் தலைநகரமாகத் தேர்வு செய்தான். 1017 இல் ராஜேந்திரச் சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து, இலங்கை முழுவதையும் சோழப் பேரரசின்கீழ் கொண்டுவந்தபோதும், பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி செய்திருக்கிறான். இப்படியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகராக, ‘பொலன்னறுவை ராஜ்ஜியமாக’ கோலோச்சியிருக்கிறது இந்தப் பகுதி.

கலைந்து போன தமிழனின் 150 ஆண்டுகாலக் கனவு

“சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” என்ற பாரதியின் நூற்றாண்டுச் சிந்தனை, தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவாகவே இருக்கிறது. தமிழினக்கால்வாய், சேது சமுத்திரக் கால்வாய் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இத்திட்டத்தின் அவசியம், அவசரம் குறித்து, அறிஞர் அண்ணா முதன் முதலில் நாடாளுமன்றத்தில் பேசினார். 1968 ஏப்ரல் மாதத்திய 25ஆம் நாள் காஞ்சி இதழில், “தனுஷ்கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய் எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது” என்று எழுதினார்.

<strong>வந்தியத்தேவன் வழித்தடத்தில் தொண்டைமானாறு</strong>

முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இளவரசனாகிய மானவர்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்தில்தான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஒடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் ஆனையிறவு

2000இல் ‘ஓயாத அலைகள் 3’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் ஆனையிறவு சண்டையின் போது விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக நீண்டதும், கடினமானதுமான சமர் அது. 35 நாட்களுக்குப் பின் ஏப்ரல் 22 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமானது கோட்டை. ஆனால், இறுதி யுத்தத்தின்போது, 2009 ஜனவரி 10 ஆம் நாள் இலங்கை ராணுவம் மீண்டும் இப்படைத்தளத்தைக் கைப்பற்றியது. ஆனையிறவுக்கான ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாக வெளி உலகுக்குத் தோன்றியது.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் திரிகோணமலை

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி’,  ‘தட்சிண கைலாசம்’ என்றெல்லாம் புகழப்படும்  அதே திருகோணமலை நகரின் மற்றொரு மூலையில், தேசம் பிடிக்கும் பேராசையின் விளைவுகளைப் பறைசாற்றி மௌனமாக நிற்கின்றன… இரண்டாம் உலக யுத்தத்தில் தேசம்விட்டு தேசம்வந்து போரிட்ட பிரிட்டானியப் படைவீரர்களின் 303 கல்லறைகள்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் சிகிரியா

மிகவும் பாதுகாப்பான அந்தக் குன்றில் புதுத் தலைநகரை அமைத்தான் காசியப்பன். அரசனனின் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது, சுற்றி வர ஆழ்ந்த அகழி சூழ்ந்திருக்க குன்றின் மேலே குகைக்குள் கட்டிய கோட்டைக்குள் எந்த எதிரியால் நுழைய முடியும்? கி.பி. 495 வரை காமக்கிழத்தியர் புடைசூழ முகில்கள் தழுவிச் செல்லும் அந்தச் சொர்க்கபுரியில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டான் காசியப்பன்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் எசல பெரஹரா திருவிழா!

எசல பெரஹர அல்லது எசலா பேரணி என்பது இலங்கையின் கண்டி நகரத்தில் நிகழும் ஒரு பௌத்த திருவிழா. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நடைபெறுவதாகக் கூறப்படும் இவ்விழா, மழை வேண்டியும் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்ட நாளை கொண்டாடுவதற்காகவும் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றைக்கு இலங்கையின் தனித்துவமான விழாவாக மாறியுள்ளதால், அச்சமயத்தில் வெளிநாட்டாரின் வருகை அதிகமாக உள்ளது.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் அனுராதபுரத்தின் அதிசயங்கள்!

அனுராதபுரத்திற்குள் அருள்மொழிவர்மனும் ஆழ்வார்க்கடியானும் தானுமாக நுழையும்போது, இப்படித்தானே அதிசயித்துப் போனான் வந்தியத்தேவன்! இலங்கைத்தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்று தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் தம்புளா

கொழும்பில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் மாத்தளை மாவட்டத்தில் இருக்கிறது தம்புளா. 160 மீட்டர் உயரமுள்ள சிறு சிறு குன்றுகள் பரவலாகக் காணப்படுகிறன். அந்தக் குன்றுகளின் மீது தொடர்ச்சியான 5 குகைகள் கொண்ட ஒரு தொகுதியாக இருக்கிறது அந்தக் குடைவரைக் கோயில். உலகின் பெருமதிப்பை அக்குகைகள் பெற்றுள்ளதற்கு, அங்கு பெருந்தொகையாகக் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களுமே காரணமாக இருக்க முடியும். இவ்விடம் முன்பு ஜம்புகோள என அழைக்கப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் மாதோட்டம்!

அன்றொரு நாள், மாதோட்டத்தின் பொற்காலத்தில் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமின்றி தென்னிந்திய கடல் வணிகர்கள் தங்கள் சரக்குகளை சீனாவுக்குக் கொண்டு செல்லும்போதும் இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகத்தான் மாதோட்டம் விளங்கியது. மிகச் சிறந்த வர்த்தக நகரமாக உருவெடுத்தது. ஈழத்து உணவு வகைகள், முத்து பவளம், நவரத்தினங்கள், யானை, யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, கறுவாய், ஏலம் போன்ற பொருள்கள் மாதோட்ட துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட்டத்தில் வந்து குவிந்தன. செல்வம் பெருகியது, மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறார் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இண்டிக்கோ பிளஸ்தேஸ் தனது நூலில்.