UNLEASH THE UNTOLD

Tag: Indu samuthrathin nithilam

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் 'நாகத்தீவு'

இலங்கையின் புகழ்பெற்ற சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ்பெற்ற நாகத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறைய 23 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. நாகர் இன மக்கள் அந்தத் தீவில் அதிக அளவில் வாழ்ந்ததாலும் நாக வழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்ததாலும் நாகத்தீவு என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நாகர் எனப்படுபவர் சரித்திர காலத்திற்கு முற்பட்ட பெரும்பாலும் திராவிடர்கள் என்போராக, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரில் ஒரு கிளையினர் என வரலாற்றாளர் பொன். அருணாச்சலம் கூறியுள்ளார்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் பூதத்தீவு

கோடிக்கரையிலிருந்து இலங்கை செல்ல வந்தியத்தேவனை அழைத்துச் செல்லும் பூங்குழலி முதலில் இறங்கும் இடமாகச் சொல்லப்படுகிறது பூதத்தீவு. இந்த இடத்தில்தான் வந்தியத்தேவனை கரையிலேயே நிறுத்திவிட்டு, பூங்குழலி மட்டும் பூதத்தீவிற்குள் சென்று ஊமை ராணியைச் சந்தித்து அருள்மொழிவர்மன் இருப்பிடம் கேட்டறிந்து, அதன்பிறகு வந்தியத்தேவனை நாகத்தீவில் இறக்கிவிடுகிறாள். பூதத்தீவு இலங்கையில் புத்தர் முதல் முதலாகக் கால்பதித்த இடமாக நம்பப்படுகிறது. இலங்கையில் மன்னர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையைத் தீர்க்க வந்த புத்தர் இங்குள்ள அரச மரத்தடியில் போதனை செய்ததாகவும், அதனால் முதலில் போதர் தீவு என்று அழைக்கப்பட்டு பின்னர் பூதத்தீவாக மருவியிருக்கிறது என்கிறார்கள்.

தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் சாதியம்

இந்தச் சாதிய இறுக்கமே ஈழத்தமிழர்களை, முஸ்லிம்கள் – மலையகத் தமிழர் – ஈழத்தமிழர் எனப் பிரித்தது. பின்னர் யாழ் – வன்னி – மட்டக்களப்பு என்றும் பிரித்தது. தற்பொழுது இங்குள்ள எந்தக் கட்சிகளுக்கும் சாதி குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை. சமூக அறத்திற்காகப் போராட எந்த அமைப்புகளும் இல்லை. இனக்கலவரங்களைத் தூண்டிவிட்ட சக்திகள், தமிழர்கள், சிங்களவர்களைவிடத் தாழ்ந்த சாதி என்ற கருத்தையே விதைத்தன.

கல்வியா… செல்வமா… உயிரா...?

இலங்கையின் தேசிய மொழிகளான தமிழும் சிங்களமும் நிர்வாகம், கல்வி, நீதி போன்ற துறைகளிலும் ஆங்கிலம் வணிகத் துறையிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித்திட்டங்கள் தற்போதுவரை பின்பற்றப்படுவதால், பிரிட்டிஷ் ஆங்கிலம் இலங்கைத் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் ஆங்கில உச்சரிப்பு மலையாளிகள் போலவே இருக்கிறது.

ருசிக்கும் தேயிலையின் கசக்கும் உண்மைகள்

மலைப்பகுதியை அடைந்தும் துயரம் தீரவில்லை. அட்டைக்கடி, கொசுக்கடி, தேள்கடி எனத் தொடர்ந்தது. காட்டு விலங்குகள் உயிரைப் பறித்தன. காலராவும் மலேரியாவும் அம்மையும் தாக்கின. வந்த தொழிலாளர்களில் பாதிப்பேர் மடிய, மீதிப் பேரே தேறினர். அதனால் மீண்டும் மீண்டும் தேவைக்கு அதிகமாகவே ஆட்களைச் சேகரித்தனர். பிழைப்பிற்காகக் கடல்கடந்து வந்த தமிழர்கள் பாறைகள் சூழ்ந்த அந்தக் கடினமான பகுதியைக் கனமான கருவிகள் கொண்டு உடைத்தனர். உயிரைப் பறிக்கும் அசுர உழைப்பினால் அந்த மலைப்பகுதியை விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றினர். தங்களை அழைத்துவந்த ஆங்கில முதலாளிகளுக்கு விசுவாசமாக 150 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர்.

அடர்வனத்திற்குள் ஒரு சோகக் கதை

300 வகையான ராமாயணங்களில் வெவ்வேறு கதைகள் உண்டு என்று கூறப்படுவது ஒருபுறமிருக்க, தமிழ் மன்னன் ராவணன் வரலாற்றுத் திரிபுகளால் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்பட்டு, அரக்கனாக்கப்பட்டு விட்டான் என்ற பெருங்குறையொன்றுடன் இருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.

சமத்துவ மலை!

இலங்கையின் இரண்டாவது பெரிய, அழகு மிகுந்த சோலைகள் சூழ்ந்த அந்த மலை ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில், நிர்வாக ரீதியாக நுவரெலியா மாவட்டத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது. நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் உலகின் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

துலங்காத மர்மங்கள்...

புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இலங்கையை ஆள்வார்கள்’ என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. அதனால் மகாவம்ச கால சந்திரபானுவும் சரித்திரக் கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஐந்து வெவ்வேறு இடங்களில் அந்தப் பல் பாதுகாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஒவ்வோர் அரசரும் ஒவ்வொரு பேழையில் வைத்துப் பாதுகாக்க, இப்போது பல் ஏழு பேழைகளுக்குள் பத்திரமாக பொதியப்பட்டுள்ளது. “மூன்று அங்குல அளவில் இருக்கும் அந்தப்பல், செம்பருத்தி பூக்களின் நடுவிலிருக்கும் காம்பு போல, வேருடன் காணப்படும்” என்று அந்தப் பிக்கு சொல்ல, “மூன்று அங்குல நீளத்தில் பல்லா?” என்று தலை சுற்றியது.

1983 ஜூலை 25 : கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை

“ஜூலை கலவரத்தை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால் இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது” என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்குச் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். 39 ஆண்டுகளைக் கடந்தும், இரு இனங்களுக்குமிடையே எந்த நல்லிணக்கமும் ஏற்படாமலே போய்விட்டது.

கறை படிந்த கறுப்பு ஜூலை

இலங்கை வரலாற்றின் பக்கங்களில் ரணங்களால் நிரப்பப்பட்ட அந்த ஜூலை, இலங்கை இனி எப்போதும், முன்னெப்போதைப்போலவும் இருக்க வழியில்லை என்பதை உணர்த்திச் சென்றது. வலிகள் மிகுந்த அந்த மாதத்தைப் பிரபல பத்திரிக்கையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்தார். ஜூலை 23 இல் இருந்து 27ஆம் திகதி வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் சந்திகளிலும் வீடுகளிலும் மட்டுமல்ல, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையொன்றிலும் நிகழ்த்தப்பட்டது அறிந்து உலகே உறைந்து போனது.