UNLEASH THE UNTOLD

தீபிகா தீனதயாளன் மேகலா

அடையாளத்தில் பெருமை இருக்கிறதா, இல்லையா?

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

'தலித் சினிமா' எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?

ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.

<strong>தமிழ்நாட்டில் பண்பாட்டுப் படையெடுப்பு யாரால் நடந்தது?</strong>

பிராமணர்கள் சமுதாயத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் பண்பாடுதான் மேன்மையானது என்று பொதுப்புத்தியில் கருத்தப்படுகிறது. இந்தப் பொதுப்புத்தி சிந்தனை, பெரும்பான்மை பூர்வகுடிகளைத் தங்கள் சொந்தப் பண்பாட்டுக் கூறுகளை விடுத்து, கல்யாண சடங்குகள் முதல் கருமாதி சடங்குகள் வரை பிராமணர்களின் பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கிக்கொள்ளச் செய்தது. இந்த எதிர்மறையான பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் மீது ஆதிக்கம் செலுத்தவும் முழு முதல் காரணம், அதிகாரம்.

பண்பாட்டுப் படையெடுப்பு நேர்மறை விளைவுகள் தருமா?

ஓர் இனச்சேர்க்கை என்பது உயிர்வாழ சூழ்நிலையின் தேவைக்காகச் செய்யப்படும் அத்தியாவசியமான ஒன்று என்ற புரிதல் அந்தச் சமூகதில் இருந்தது. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகப் பால் புதுமையினரின் உணர்வுகளையும் அந்தச் சமூகம் புரிந்துகொண்டு அவர்களைச் சமமாக மதித்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஆண்கள் வேட்டைக்குச் சென்ற போது குளிரில் தனிமையில் இருக்கும் பெண்களும் தங்கள் உடல் தேவைகளை, தங்கள் பெண் தோழிகளோடு கூடி தனித்துக்கொள்வர். எனவே, பால் புதுமையினர் குறித்த புரிதல் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாகத்தான் இனுயிட் மக்கள் பேசும் மொழியான இனுக்டிடுடில் கேவையும் லெஸ்பியனையும் குறிக்கும் வகையில் two hard things and too soft things rubbing each other என்று பொருள்படும் இரு வேறு சொற்கள் இன்றுவரை புழக்கத்தில் உள்ளன.

சமத்துவம் எப்படிச் சாத்தியம்?

கிடைத்த அனைத்துச் செல்வங்களையும் சமமாகப் பகிந்து வாழும் சமூகம் பொதுவுடைமை சமூகமாக இருக்கும். எனவே, பெரும்பான்மையான கனடிய பழங்குடி மக்கள் பொதுவுடைமை சமூகமாக இருந்ததால் அவர்கள் சமூகங்களில் சமத்துவம் இருந்தது; குறிப்பாகப் பாலின சமத்துவம். இன்றைய நிலையில், நம் சமூகத்தில் எண்ணற்ற வகைகளில் வேறுபாடுகளும் மேல் கீழ் என்ற படிநிலைகளும் உள்ள சிக்கலான சமூகமாக இருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் போன்ற அடையாளங்களை வைத்து எண்ணற்ற அடக்குமுறைகளும் நடக்கின்றன. சமத்துவமான சமூகம் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த கேள்வி. இந்தக் கேள்வியைச் சில நண்பர்களிடம் எழுப்பிய போது தனிச்சொத்துடைமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பதிலாகக் கிடைத்தது.

சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?

இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

இனவாதமும் சாதியமும்

காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.

இந்தியாவில் பெண்களின் நிலை என்ன?

ஒவ்வோர் இந்திய வீட்டிலும் மனுஸ்மிருதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாய்மொழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சமூக உரையாடல்கள் வழியாகவும் இன்றும் மனுஸ்மிருதி புழக்கத்தில்தான் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் சனாதன தர்மத்தில் உள்ள ‘வர்ணாஷ்ரம தர்ம’ சாதி அமைப்பால் ஒடுக்கப்படுகிறார்கள்.

ஆரியம் vs திராவிடம்: இது இனப் போரா அல்லது கலாச்சாரப் போரா?

தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.

இனச்சார்பு தான் இனப்படுகொலைக்கான தொடக்கப் புள்ளி

இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை.