UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

முதல் மூன்று மாத கர்ப்ப காலம்

8வது வாரம்

கண் இமைகள் திறந்து மூடும். விரல்கள் வளரத் தொடங்கும்.

வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் வாரம் இது. ஒரு பீன்ஸ் பருப்பின் அளவிற்குக் கரு வளர்ந்து இருக்கும் இவ்வாரத்தில்.

உடை... அதைக் கொஞ்சம் உடை...

எட்டு முழம், ஒன்பது முழம் கொண்ட புடவைகளை அணிந்து கொண்டு, எந்நேரமும் அவற்றைச் சரி செய்து கொண்டு, அந்த உடை விலகி இருக்கிறதா இல்லையா என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக்கொண்டு இருப்பதால் பெண்களின் நேரம் வீணாகக் கழிகிறது என்பது பெரியாரின் எண்ணம். ஆண்களின் உடை அவர்களுக்குச் செளகரியமாகவும், உடுத்த எளிமையாகவும் அமைந்திருப்பதால் அவர்களால் உடை பற்றிய சிந்தனையின்றி இதர வேலைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது என்பது அவரது வாதம். அதனால் பெண்களும் ஆண்கள் போல எளிமையான உடை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். உண்மைதான், அணிவதற்கும், கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற எளிய உடைகள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

கேடில் விழுச்செல்வம் கல்வி

மரி-சோஃபி ஜெர்மைன் என்கிற பிரெஞ்சு கணிதவியலாளருக்குக் குழந்தைப்பருவத்திலிருந்தே கணிதத்தில் அதிகமான ஆர்வம் இருந்தது. வீட்டிலிருந்தபடியே நூல்களைப் படித்து தனது கணித அறிவுக்கு சோஃபி தீனி போட்டுக்கொண்டார். 1794இல் அவர் வசித்த ஊரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது. பெண் என்பதால் அந்தக் கல்லூரியில் சேர சோஃபிக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், “யாராவது விரும்பினால் பாடக்குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. பாடக்குறிப்புகளைப் படித்து தங்களுடைய கருத்துகளையும் புரிதல்களையும் பேராசிரியர்களுக்கு அனுப்பவும் அனுமதி இருந்தது.

தி கிரேட் இண்டியன் ஃபேமிலிகள்

இந்தக் குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே மட்டுமல்ல வயதானவர்கள், குழந்தைகள் இடையே, வீட்டில் உள்ள மற்ற பெண்கள் புதிதாக வந்த பெண் மீது காட்டுவது என்று நிறைய உறவுகளிடம் ஏற்படலாம். பிரிந்து வாழும் தம்பதியர் இடையே, விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் இடையேகூட ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அது குடும்ப வன்முறையில் சேர்ந்தது.

காகிதப் பை முதல் டயாபர் வரை

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார்.

ஓர் அறிவியலாளரை வரையுங்கள் பார்க்கலாம்!

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

பெண்ணடிமைத்தனத்தைத் தூக்கிப் பிடிக்கும் விளம்பரங்கள்

செஃப் தாமு வந்து சோப் பவுடர் விற்கிறார். அதைப் பெண்களிடம்தான் விற்கிறார். ஒரு மாறுதலுக்கு ஆண்களிடம் துவைத்துப் பார்க்கச் சொல்லி விற்றிருக்கலாமே! சமையல் பொருட்கள், சமையலறைச் சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றிற்குப் பெண்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள், தொழில்நுட்பக் கருவிகள், டிஎம்டி கம்பிகள், சிமெண்ட் போன்ற விளம்பரங்களில் ஆண்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏன் பெண்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லையா என்ன?

வியட்நாம் வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஓர் இரவு

1993இல் Lonely Planet என்கிற பயணிகள் வழிகாட்டி நூல் இந்தத் தெருவை உலக சுற்றுலாவாசிகளுக்கு அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியது. அதுவே சைகோன் சுற்றுலா வரலாற்றின் மைல்கல்லாக மாறியது. சுற்றுலாவாசிகளை மட்டுமல்லாது வியாபாரம் செய்ய வருபவர்களையும் ஹோ சி மின் கவர்ந்திழுக்க, 2009இல் இந்த இடம் மிக நெருக்கமான தெருவாக மாறியது. அதைத் தொடர்ந்த 20 வருடங்களில் இந்தத் தெரு பன்முகக் கலாச்சாரமிக்கத் தெருவாக, முடிவில்லாத பார்ட்டிகளாலும் சத்தங்களாலும் நிரம்பியது. ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக இந்த வாக்கிங் ஸ்ட்ரீட் மாறியது. பரபரப்பான நாளிலிருந்து மக்கள் இளைப்பாறுவதற்காக இதுபோன்ற இடத்தை அரசே வழங்குகிறது.

அந்த உறவுக்குப் பெயரென்ன?

தம்பதியர் தங்களுக்குள் ஒரு மௌனம் கலந்த பனிப்போர் ஆரம்பிக்கும்போதே உஷாராகிவிட வேண்டும். ஒருவருக்கு இன்னொருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். வெளியே எங்கேயோ யாரிடமோ மனம்விட்டுப் பேசுவதைத் தனது இணையரிடம் பேசினால் பிரச்னைகள் எழாது. பேசிச் சிக்கல்களைத் தீர்த்த காலம் போய், பேசினாலே சிக்கல்கள் வரும் காலத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. எல்லாருமே சாய்வதற்கு ஒரு தோளைத் தேடுகிறார்கள். அந்தத் தோள் ஆறுதல் மட்டுமே தரும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

திராவிடமும் தமிழும்

தமிழ் தேசியம் என்பதென்ன? தமிழின் பெருமைகளை ஊக்கப்படுத்துவதோடு, தமிழனின் அறம்சார் வாழ்வியல் முறைகளை மேம்படுத்துவதல்லவா தமிழ்த்தேசியம்?