UNLEASH THE UNTOLD

Bottom Featured

கொடுமைகளுக்கு முடிவு எப்போது வரும்?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

ரத்னாவும் அப்பாவும்

ஒருவாறு அப்பாவும் மகளும் சமரசமாகி, அப்பா அடுப்படியை ஆக்ரமிக்க, அப்பாவின் சமயற்கலையை அருகில் அமர்ந்து ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரத்னா. மனதில் அம்மாவின் நினைவு வந்து போனது. அம்மா உடல்நலம் சரியில்லாத தன் பெற்றோரைப் பார்க்க வெளியூர் சென்றிருந்தார்.

புத்தகம் என்ன செய்யும்?

பெண்ணியம் பேசுவதற்குச் சுய சிந்தனை அவசியம். நம் உரிமைக்கான குரலுக்கு நம் அறிவே துணை. பெண்கள் உரிமைக்கு கேள்விகளைக் கேட்பதும் அதற்கான தேடல்களின் முழு வெற்றி கிடைக்கும் வரை போராடுவதும் அவசியம். அதற்குப் புத்தகங்கள் நமக்கு உதவி செய்யும். பல விஷயங்களைப் படித்து, தெளியும்போதுதான் தெளிவான முடிவை எடுக்க முடியும்.

பெண் எனும் போன்சாய்

ஆற்றின் வெள்ளம்போல்

வாழ்க்கைக் கடக்கும்

கையளவு நீர் மட்டுமே கிடைக்கும்

அதை அமிர்தமாக்குவதும்

அழுக்காக்குவதுமே வாழ்க்கை!

நமது காலத்தின் பின்னும்

ஆறு அதனோட்ட்டம் தொடரும்!

பெண்களும் நகைச்சுவையும்

இங்கே சினிமா துறையில் மனோரமா, கோவை சரளா என்று குறிப்பிட்டுச் சொல்ல இரண்டே இரண்டு பெண்கள்தாம் நகைச்சுவை நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது இவர்கள் தியரிக்குக் காரணமாக இருக்கலாம்.

அப்படிப் பார்த்தாலும் அது பெண்களின் தவறில்லை. ஆணாதிக்கம் நிறைந்த நம் சினிமா நாயகர்களைச் சார்ந்தே இயங்குகின்றன. அவர்களைச் சார்ந்தே நகைச்சுவைக் காட்சிகளும் எழுதப்படுகின்றன

வெற்றி கொள்ள முழு வாழ்க்கையே இருக்கிறது!

‘கற்பதும் மறப்பதும் அவசியம்’ என்ற கட்டுரையில் நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அவை எப்போது நம் வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்து விடவும் புதிதாகக் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு என்றென்றும் வாழ்வை கொண்டாடலாம் என்று சொன்ன விதம் எளிமையாகவும் புதுமையாகவும் ஏற்றுக்கொள்வதாகவும் உள்ளது.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

குழந்தைகளை அதைச் செய், இதைச் செய் என்றால் பிடிக்காது. அவர்களது ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், அவர்களது கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று கூறுகிறார். இன்று பல குழந்தைகள் யூடியூப் வீடியோக்கள் பார்த்தே பொழுதைக் கழிக்கின்றனர். குழந்தைகளுக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து அவர்களது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வைக் கொண்டாடலாம் என்று பெற்றோர் மனதில் விதைக்கிறார்.

'துப்பட்டா போடுங்கள் டோலி' என்று சொல்பவரா நீங்கள்?

‘துப்பட்டா போடுங்கள் டோலி’ ரகப் பதிவுகளையும், மீம்களையும், கிண்டல் செய்தும், சிரித்தும் கடந்துவிடுகிறோம். துப்பட்டாவுக்கு பின் இருக்கும் தன் உடல் மீது பெண்ணுக்கு இருக்கும் கோபமும், குற்றவுணர்வும் எத்தனை பேருக்கு தெரியும் தோழர்களே ?