UNLEASH THE UNTOLD

மர்மயோகி (1951)

எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

பெண்கள் ஏன் அரசியல் பழக வேண்டும்?

பெண்கள் எத்தகைய உயர்பதவி வகித்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பது இன்னொரு கசப்பான உண்மை. ஆணின் உடைமையாகப் பெண் கருதப்படும் வரையில் இந்தப் பிரச்னை ஓயாது. பெண்களுக்குப் பாலியல்ரீதியான பிரச்னைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அதைக் காரணம் காட்டி தடைகள் போடுதல் தவறு. நான் சந்தித்த நிறைய பெண்கள் அரசியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இதில் படிக்காதவர்களைவிடப் படித்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

கொடுமைகளுக்கு முடிவு எப்போது வரும்?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

உணர்வு சூழ் உலகம் - புதிய தொடர்

மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”

இப்படிக்கு... இலக்கிய நாசினி

ப்ளாகுகள், ஃபோரம்கள், ஸைட்கள், அமேசான் கிண்டில், பிரதிலிபி, வாட்பேட், பிஞ்ச் என்று ஏராளமான எழுத்து மற்றும் வாசிப்புக்கான ஆப்களில் அதிக அளவில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள். அவர்களின் எண்ணிக்கையை எல்லாம் மொத்தமாகக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கை மண் அளவைக் கொடுத்து அதில் எவ்வளவு மண்துகள்கள் இருக்கிறது என்று கணக்கிடச் சொல்வது போல.

வளைவுகளின் ராணி!

360 டிகிரி வரை கோணங்கள் இருக்கும்போது எதற்கு அந்த நேர்கோணலான 90 டிகிரியையே பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். நானும் என் கட்டடங்களும் ஒரு போதும் நீங்கள் கட்டமைத்த பெட்டிக்குள் அடங்க மாட்டோம்” என்று அவர் மேடையில் பேசியபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது.

பள்ளிகளில் பாலியல் கல்வி ஏன் தேவைப்படுகிறது?      

முதலில் பாலியல் கல்வி என்றால் என்னவென்று பெரியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். வெறும் ஆண்-பெண் புணர்ச்சி குறித்துச் சொல்லித் தரப்படுவதல்ல பாலியல் கல்வி. இதனால் வளர் இளம் பருவத்தினர் தவறான பாதைக்குச் சென்றுவிடுவார்கள் என்றோ, பாலியல் உறவுக்குத் தூண்டப்படுவார்கள் என்றோ தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பாலினத் தன்மை, பாலின உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, இனப்பெருக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுய இன்பம், உரிய வயதுக்கு முன்னரே கருவுறுதல், இனப்பெருக்கத்தோடு தொடர்புடைய சமூக மற்றும் பொருளாதாரப் பொறுப்பு, பாலின சமத்துவம், பால்புதுமையினர் எதிர்கொள்ளும் சவால்கள், மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், கருத்தடையின் தேவை, அவற்றை உபயோகிக்கும் முறை, எய்ட்ஸ் முதலானவை குறித்துத் தொடர்ச்சியாக, வகுப்புக்கு ஏற்றவாறு அறிவியல்பூர்வமாகப் பாலியல் கல்விக்கான பாடத்திட்டத்தை அமைத்து விளக்குதல் நிச்சயம் நன்மையே பயக்கும். 

மாதவிடாய் உதிர ஓவியத்தில் விழிப்புணர்வு

மாதவிடாய் காலங்களில் வரும் ரத்தத்தை  ஏதாவது கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைப்பேன். வீட்டில்  இருக்கும் பெயிண்ட் பிரஷ் கொண்டு போஸ்ட் கார்டில் அல்லது கடினமான தாளில் ஓவியம் வரைவேன். வரைந்த ஓவியங்களை வெயிலில் காயவைத்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு வைப்பேன். இது கிருமிகளிடமிருந்து பாதுகாக்கச் செய்ய வேண்டுமென்று  மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். நான்  விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்துப் புரிதல் குறைவாக இருந்தது. ஆண்களையும் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களில் உள்ளடக்கும் நோக்கத்தில் சமூக வலைதளம் மூலமாகவும் நேரடியாகவும் அவர்களுக்கு  மாதவிடாய் உதிர ஓவியங்கள் வேண்டுமா  என்று கேட்டு  வரைந்து தருவேன். பெரும்பாலானோர் வாங்கினார்கள். ஒரு சிலர் மட்டுமே பயந்து ஓடினர்.

ஏழை படும் பாடு

அம்பலவாணனிடம் பணம் பறிக்கும் நோக்கில் நாகியின் தம்பியின் கூட்டம், அவரைக் கட்டி வைக்கிறது. அஞ்சலை, காவல் துறைக்குத் தகவல் கொடுக்க, வருபவர், நமது ஜாவர்தான். இப்போது அம்பலவாணன் யார் என்பது அவருக்குத் தெரிகிறது. இதை அறிந்த அம்பலவாணன், லட்சுமியுடன் ஊரைவிட்டுப் போக நினைக்கிறார். அப்போது, உமாகாந்தன், தான் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும், தனக்கு என்ன நேர்ந்தாலும் பின்வாங்கப் போவதில்லை என்றும் லட்சுமிக்கு எழுதி அனுப்பிய கடிதம், அம்பலவாணன் கையில் கிடைக்க, அவர் போராட்டக் களத்திற்குச் செல்கிறார். அங்கு, போராட்டக்காரர்களிடம், ஜாவர் சிக்கி இருப்பதைப் பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் ஜாவரை அவர்கள் கொலை செய்ய துப்பாக்கியை எடுக்கும் போது, அம்பலவாணர் சென்று காப்பாற்றிச் செல்கிறார்.

சேலை கட்டினால்தான் பாரம்பரியமா?

சேலையைக் கட்டினால் நம் கவனம் முழுவதும் சேலையில்தான் இருக்க வேண்டும். சேலை விலகாமல், சரிசெய்துகொண்டே இருக்க வேண்டும். உடை என்பது ஒருவருக்கு வசதியாக இருக்கிறதா என்பதைப் பொறுத்துதான், அது பிடித்த உடையாக இருக்க முடியும்.