UNLEASH THE UNTOLD

கயல்விழி கார்த்திகேயன்

இறைமறுப்பாளராக ஒரு பெண் வாழ முடியுமா?

பெரும்பாலான மதங்கள் பெண்களை இரண்டாம் தர மக்களாகவே பாவிக்கின்றன. கடவுளர்களாகப் பெண்களை வழிபடுவதாகச் சொன்னாலும், அவர்களுடைய கோட்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் பெண்ணே வழிபாட்டுக்குரியவர்; அடங்காத பெண் கொல்லப்பட்டு வேண்டுமானால் சிறு தெய்வமாகலாம் என்பதே நடைமுறை. மதங்கள் பெண்ணை ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு தாரைவார்க்கப்படும் பொருளாகவே பார்க்கின்றன. ரத்தமும் சதையும் உள்ள சக உயிரினமாக மதிப்பதில்லை. ஒன்று புனிதப்படுத்தப்பட்டு தெய்வமாக வேண்டும். இல்லையேல் கேடு கெட்டவளாக மிதிக்கப்பட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட முடியாது.

<strong>மகளிர் தினம் – மகளிரின் விருப்பம்</strong>

ஒவ்வொரு பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பெண் சாதனையாளரிடம், “தனிப்பட்ட வாழ்வையும் சாதனையையும் எப்படிச் சமன் செய்தீர்கள்?” என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது பெண் சாதனையாளர்களிடம் கேட்கப்பட்டு, ஆண்களிடம் கேட்கப்படாததே இலைமறை காயாக ஓர் அழுத்தத்தைப் பெண் மீது திணிக்கிறது. என்ன சாதனை புரிந்தாலும் குடும்பச் சுமைகளை நீ சுமந்தே தீர வேண்டும் என்பதாக அந்தக் குரல் ஒலிக்கிறது. இத்தகைய மறைமுக அழுத்தங்கள் பெண் ஆண்மைய சமூகத்தில் வெற்றி பெற விரும்பினால் இரட்டை உழைப்பைத் தர வேண்டும் என்று கோருகிறது.

காதலும் சுயமும்

சில நேரத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுப்பது ஒருவருக்கு இன்னொருவர் செய்ய வேண்டியதுதான். ஆனால், எப்பொழுதும் ஒருவரே விட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பது உறவின் சரிநிலையைப் பாதிக்கும். நாளடைவில் சுயமரியாதையையும் இழக்கச் செய்யும். ஒரு நாள் என்ன சமைப்பது என்பது தொடங்கி, யார் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் பெண்களே சமரசங்கள் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல...

ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது.

‘லட்சியம்’ கெட்ட வார்த்தையா?

திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?

சாதி தெரியாமல் வளர்வானா என் பிள்ளை?

சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது எளிது. பேசினால் உன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லலாம், தகுதியை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்று சொல்லலாம். அதனால் என்ன? இந்த உலகில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமையாக இருப்பதும்கூட நாம் செய்யும் அநீதி தான். முடிகிற போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நில். அவர்களுக்குத் தேவைப்படுவதை, உன்னால் ஆனதைச் செய். நீ அவர்களுக்குக் காவலன் அல்ல, அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதற்கான சூழல் அமைய உன்னால் இயன்ற வரை உதவி செய். இதை உன் சமூகக் கடமையாகக் கொள்!

பெண்ணுக்கு வேண்டும் பெண்money!

உலகத்தின் மொத்த அசையா சொத்துக்களில் 20%க்கும் குறைவாகவே பெண்களின் பெயரில் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பினாமியாக வாங்கப்படும் சொத்துக்களும் சேர்த்தே இந்த லட்சணம்தான். 

இளம்வயதினரிடம் என்ன கேட்கலாம்?

குழந்தைகளாக இருந்தால், “என்ன பாடம் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் யார்?”, “என்ன விளையாடப் பிடிக்கும்?” என்று பிரச்னை இல்லாமல் எதையோ கேட்கலாம். வளர்ந்தவர்களிடம் என்ன பேசுவது?

மகளிர் தினம் எதற்கு?

உண்மையில் குடும்பங்களும் சமுதாயமும் வேலைக்கு செல்லும் பெண்களை தினமும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. பேலன்ஸ் செய்ய முயல்வதற்காகத் தண்டிக்கின்றன.