UNLEASH THE UNTOLD

Tag: women issues

லஞ்ச் டைம்

“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.

வியூகம்

“உங்க விருப்பம் அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். நான் தீர்மானிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நாங்க அங்கே குடிபோறோம். நீங்க இங்கதான்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இருந்துக்கோங்க, தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை’’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து போக, உறைந்து நின்றான்.

விவாகரத்தும் வியாக்கியானங்களும்

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

அவனது அந்தரங்கம் - அண்ணாமலையின் இல்லறக் குறிப்புகள்

உங்கள் மாமாவுக்குப் பாதுகாப்பற்ற உணர்வு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்கள்தான் பக்குவமாக இதனைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். திருமணமாகி விட்ட காரணத்தினாலேயே மனைவி மீது முழு ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்காதீர்கள். அவர் முதலில் தந்தைக்கு மகள். பின்புதான் உங்கள் மனைவி.

பெரியவர்கள் வீட்டில் இருக்கும் போது மனைவியுடன் தனியே சிரித்துப் பேசுவதைத் தவிருங்கள். அவர்கள் முன்பு மனைவியைத் தொட்டுப் பேசுவதோ கொஞ்சுவதோ குடும்ப ஆண்களுக்கு அழகில்லை.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் – 3

சில நேரம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென படபடப்பு ஏற்பட்டு, ஏஸியிலும் வியர்வை பெருகும். இரவு ஆழ்ந்த தூக்கமிருக்காது. அதே போல திடீரென குளிரில் உடல் நடுங்கும். சில நிமிடங்கள் நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது பெரும்பாலும் இதயம் சம்மந்தப்பட்டதில்லை ஹாட் ப்ளஷ் என்றார் மருத்துவர். ஹார்மோன்களின் தாறுமாறான ஏற்ற இறக்கத்தின் விளைவு. சிலருக்கு மார்பில் பாரத்தைச் சுமப்பது போன்ற வலியிருக்கும். அந்த வலி நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போலத் தோன்றும். இது பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

தனிக்குடித்தனம்

நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான் வருண். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா. ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா! வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாகச் சொல்லி இருந்தாள். கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய உணவு நேரத்தில் பேசுவதாகச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக்கொண்டே இருந்தான் வருண்.

நான் பெண் என்பதால் இரக்கமற்றவள்...

“பெண்கள் எல்லாரும் படித்துப் பொருளாதார நிலையில் முன்னேறிவிட்டதால் ஆண்களை மதிப்பதில்லை. எல்லாரும் குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள்” என்பது பெண்களின் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. புள்ளி விவரங்களின்படி ஒரு சதவீதம் திருமணங்கள் மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைப் பெண்கள் மீது வெட்கமின்றி சுமத்துகிறீர்கள் எனக் கேட்டால், “தேவாவே சொன்னான்” என்பது மாதிரி நானே பாதிக்கப்பட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் என் கண்ணாலேயே பார்த்தேன். நீங்களும் வேண்டுமானால் வந்து பாருங்கள் என்று கோயில் வாசலில் பிச்சை எடுக்க செட்டு சேர்ப்பவர்கள் மாதிரி பதில் சொல்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாமல் போன அறிவியலாளர்

1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.

பெண்களைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ்

மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.

அச்சச்சோ, உடம்பு சரியில்லையா வருண்?

நிலா வீட்டுக்குள் நுழைந்ததும் வருணின் தம்பியும் ஒன்று விட்ட மச்சினர்களும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உள்ளறைக்கு ஓடிவிட்டார்கள். மீசை லேசாக அரும்பத் தொடங்கி இருந்த பையன் ஒருவனைக் கையைப் பிடித்து இழுத்தாள் நிலா.