UNLEASH THE UNTOLD

Tag: women issues

கார்டுக்கு கார்டியன்

“ஜட்டி எல்லாம் பழசாயிடுச்சு நிலா. புதுசு வாங்கணும்.”

“ம்ம்… அப்டியா? சரி உன் சைஸ் எனக்குத் தெரியும், நானே வாங்கிட்டு வரேன்.”

“இல்ல நிலா, நானே பார்த்துப் பிடிச்ச மாதிரி வாங்கிக்கிறேனே… என் ஏடிஎம் கார்டைக் குடேன்” என்று லேசாகப் பொறுமையிழந்தான் வருண்.

“ஓ… அந்தளவுக்கு வந்துட்டியா? உனக்கு விவரம் பத்தாது. கன்னாபின்னான்னு செலவு பண்ணாதேன்னு சொல்லி நீயும் சரின்னு ஒத்துகிட்டப்புறம்தானே கார்டை நான் வாங்கி வெச்சிருக்கேன்.”

“நான் உன் கார்டைக் கேட்கல நிலா. என்னோடதைத்தான் கேட்கறேன்.”

“உன் பணத்தை நான் பதுக்கி வெச்சிருக்கேன்னு சொல்றியா?”

“ஐயோ… அப்டி இல்ல, உன் கிட்ட ஒவ்வொண்ணுக்கும் கேட்டுக்கிட்டு இருந்தா உனக்கும் தொந்தரவா இருக்குல்ல…”

“ஆஹா, என்ன இவ்ளோ சாமர்த்தியமா பேசுற? உங்க அப்பா சொல்லிக் குடுத்தாரா?” நிலாவின் குரல் அபாயகரமாக உயர்ந்தது.

சிபியும் கண்ணனும்

எல்லாருக்கும் டீயையும் புன்சிரிப்பையும் தந்துவிட்டு, ஒரு நிமிடம் ஃபேனின் கீழே அமர்ந்து ஒரு வாய் டீ குடிக்கப் போனான். உள்ளிருந்து மாமனாரின் முனகல் கேட்டவுடன் டீயை அப்படியே வைத்துவிட்டு ஓடினான்.

அவனைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்த இனியா, அவன் புகழைப் பாடத் தொடங்கினாள். இடையில் வந்து சேர்ந்துகொண்ட ஆதியும் கண்ணனின் சமையல் வாசத்தையும் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பாங்கையும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்தாள்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழலாம்!

ஒரு காட்சியில் ஜெயபாரதியின் மாமியார், ஜெயபாரதியின் அப்பாவிடம், “நீங்கள் உங்கள் மனைவியை அடித்ததில்லையா?” என்பார், அதற்கு அவர், “ஆமாம், நான் இதுவரை அடித்தது இல்லை” என்று சொல்லியிருந்தால் என்ன ஆகும்?

பெண்களே, கேள்வி கேளுங்கள்!

முக முக்கியமான விஷயம், நீங்கள் மட்டும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், எதிரில் இருப்பவர் பதில் மட்டும் கூறிக்கொண்டிருக்கிறார், கிட்ட தட்ட நீங்கள் கேட்பதற்கு எல்லாம் தலை ஆட்டுகிறார் என்றால் நம்பிவிடாதீர்கள்.

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு…!

சட்டென்று எல்லா வேதனைகளும் மறந்து முகம் மலர்ந்தான் சிபி.
ஆயிரம் கஷ்டங்கள் திருமண வாழ்க்கையில் இருந்தாலும் மாமனார், மாமியார் கொடுமைகளைத் தினசரி சகித்தாலும் குடிகாரியாக இருந்தாலும் ஆதி ஏகபதிவிரதை; தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பதை ஐஸ்க்ரீமின் சுவையில் உணர்ந்தான் சிபி. பசித்தது, சாப்பிட வேறு இல்லை அல்லவா?

டிராபி வொய்ஃப்

ஒரு பதக்கம் என்பது பார்க்க அழகாக, பெருமையாக மற்றவர்கள் கண்களுக்கு இருக்க வேண்டும். ஆனால், நம் வீட்டு ஷோ கேஷில் கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்க வேண்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கத்திற்கு உயிர் இல்லை. உணர்வில்லை. ஆனால், பெண்களுக்கு உயிரும் உணர்வும் இருக்கிறதே.

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!

ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. அவர் சார்ந்திருக்கும் வர்க்கமும் இனமும் சமுதாயமும் அரசாங்கங்களும் எடுக்கும் முடிவுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் அழுத்தங்கள், பொது வாழ்வியல்முறை ஆகிய அனைத்தும் தனிநபர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே, தனிநபர் தனது சொந்த அனுபவத்தைப் பேசினாலும், அந்தச் சமுதாயத்தின், வரலாற்றின் பிரதிநிதியாகத்தான் பேசுகிறார். பெண்ணுக்கு இது அதிகமாகப் பொருந்தும்.

கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவையில்லை!

‘கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை. குழந்தைப் பேறு பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டிலும் அழுத்தம் கொடுக்கும் செயல். திருமணம் போன்று வாழ்க்கையை மாற்றிப் போடும் செயல். அதனால் கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை’ என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

ஓடி விளையாடுவோமா?

இந்தியர்களில் மூன்றில் ஒருவர்தான் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. படிப்பும் மதிப்பெண்களுமே முக்கியம் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 சதவீதத்திற்கும் குறைவான இடமே வழங்கப்படுகிறது.