UNLEASH THE UNTOLD

மாலினி

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.