UNLEASH THE UNTOLD

பேயும் பெண்ணும்

பேய் என்னும் கட்டுக்கதையை அழித்தொழிப்பது எப்படி?

மனநல மருத்துவர்கள் ‘பெண்ணொடுக்கம்’ என்ற பாரம்பரிய மரபிலிருந்து வெளியேறி, ‘பாலின சமத்துவம்’ என்ற அறிவியல் பாதையில் பகுத்தறிந்து பயணித்து மக்களின் உளவியல் நலத்தைப் பேண வழிவகை செய்ய வேண்டும்.

பெண்கள் பேய்களைப் பிடித்துக்கொண்ட கதை

அமைதி, மென்மை, கற்பு என்றெல்லாம் அடக்கியாளப்பட்ட பெண்கள் பேய் பிடித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவுடன் அவற்றிலிருந்து விடுதலையடைகின்றனர். அதுவரையிலும் வெளிப்படுத்த முடியாமல் அடக்கி வைத்திருந்த கோபங்களையும் கொண்டாட்டங்களையும் ஆற்றலையும் பேயினூடனாக வெளிப்படுத்துகின்றனர் என்பதே உண்மை.

பெண்கள் பேய்களான கதை

இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.