UNLEASH THE UNTOLD

Top Featured

பெண்ணுடல் மீதான வன்முறை: இந்தியாவின் இருண்ட பக்கங்களின் கசக்கும் உண்மை

பாலியல் வன்முறை, அதிகார வன்முறை, பாலினஅடிப்படையில் சீண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்துதல் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றங்கள். பெண்கள் நவநாகரிகமாக இருத்தலும் குற்றமாகப் பார்க்கிறது இந்தச் சமூகம். பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் வரையறுத்துள்ள கோடுகளை உடைத்தெறியும் பெண்கள் மீது இந்தச் சமூகத்திற்கு வெறுப்பு ஏற்படுகிறது.

கரண்டியை எங்களிடம் கொடுங்கள்!

ஆண்களுக்குச் சமைக்க வராது என்றெல்லாம் இல்லை. சில ஆண்கள் வீட்டில் மனைவி சின்னச் சின்ன வேலைகள் சொன்னால் தப்புத்தப்பாகச் செய்து வைப்பார்கள். அப்படிக் காட்டிக் கொண்டு தப்பும் தவறுமாகச் செய்தால் மறுபடி சமைக்க அல்லது வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார்கள் என்ற நினைப்பில் அவ்வாறு நடிக்கிறார்கள்.

எடை குறைப்பு அறுவை சிகிச்சை தேவையா?

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை 2010லிருந்து 2040 வரை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், அதிக எடை கொண்ட 20 முதல் 69 வயதுடைய மக்களில் இந்தப் பிரச்னை இரட்டிப்பாகும். 

பெரிமெனோபாஸ்

சிலருக்கோ ஒரு மாதம் ஏற்படும். சில மாதங்கள் வராது. அல்லது இஷ்டப்படி மாதவிடாய் இருக்கும். அதாவது மாதவிடாய், வாரம் அல்லது மாதம், இல்லாமல் போவது என எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
அதே நேரம் இப்படிதான் நடக்கும் என்பதில்லை. இயற்கை ஒவ்வொரு பெண்ணையும் தனித்தன்மையுடன் படைத்துள்ளது. எனவே, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிலருக்குப் பல வருடங்கள் பெரிமெனோபாஸ் மாற்றங்கள் நடக்கும்.

ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும்... டும்... டும்…

“மக்கள் நினைத்தால், ஆகாய விமானங்களைக் கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள், டாங்கிகளைக் கைகளால் புரட்டிப்போட்டுவார்கள்” என்ற ஃபிடல்காஸ்ட்ரேவின் வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருத்தமானவை என்பதை கண்முன் காண்கிறோம்.

வாழ்வது ஒருமுறை...

எந்தக் கல்வி அமைப்புகளும் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் வாழ்க்கையை எவ்வாறு கையாளுவதென்று சொல்லித் தருவதில்லை. சமூக அமைப்பும் மனச் சோர்வுக்கு ஆளானவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை தற்போது அதிகரித்துள்ளது. படிப்பு தரும் அழுத்தங்கள், மதிப்பெண் கிடைக்காமை, பதின்பருவ எதிர்பால் ஈர்ப்புகள், இணைய விளையாட்டுகளால் நிகழும் விபரீதங்கள், நட்பு முறிவு, மொழிப்பிரச்னை, சாதி வேறுபாடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போன்ற காரணங்களால் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

சாதி தெரியாமல் வளர்வானா என் பிள்ளை?

சாதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது எளிது. பேசினால் உன்னைத் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லலாம், தகுதியை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்புபவர் என்று சொல்லலாம். அதனால் என்ன? இந்த உலகில் எந்தப் பக்கமும் சாராமல் நடுநிலைமையாக இருப்பதும்கூட நாம் செய்யும் அநீதி தான். முடிகிற போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நில். அவர்களுக்குத் தேவைப்படுவதை, உன்னால் ஆனதைச் செய். நீ அவர்களுக்குக் காவலன் அல்ல, அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் முடியும். அதற்கான சூழல் அமைய உன்னால் இயன்ற வரை உதவி செய். இதை உன் சமூகக் கடமையாகக் கொள்!

பெற்றோருக்குப் பொறுப்பில்லையா ?

தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பள்ளிக்கு வந்து குழந்தைகளின் ஆசிரியர்களுடன் உரையாடி, தங்கள் குழந்தைகளின் நல்லது கெட்டது அறிந்து கண்டிக்கவோ பாராட்டவோ செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், மாணவர்களைச் சமூகம் வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதைத் தடுக்க முடியும்.

‘அழகை ஆராதித்துதான் ஆகவேண்டுமா ?’

ஆண் குழந்தையை, எப்படி அழகு பற்றிச் செயற்கையான கற்பிதங்கள் இல்லாமல் சுதந்திரமாக வளர்க்கிறோமோ, அதே போல் பெண் குழந்தையையும் வளர்க்க வேண்டும். தனது அறிவை, ஆரோக்கியத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் தோழர்களே. இங்கு ஆண் உழைத்தால் மட்டும் போதும், பெண்ணோ உழைப்பதோடு ‘அழகாகவும்’ இருக்க வேண்டியுள்ளது. அவளுக்கு இது மிகப்பெரிய சுமை.

பிள்ளைகளுக்கான பரிசு!

நீங்கள் கோடிகள் சம்பாதித்துவிட்டு பெருமிதப் புன்னகையுடன் நிற்கும் போதும் சரி, உலக சாதனை படைத்துவிட்டு மார்தட்டி புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கையிலும் சரி, வெற்றிகளைக் குவித்து, பெரிய சபைகளில் விருதுகளைப் பெற்று கௌரவம் கொள்கையிலும் சரி, பிள்ளை மனங்கள், உங்கள் கண்களில் தேடுவது எல்லாம், உங்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சி.