இது சரியா?
இனிவரும் காலங்களில் என்று கூறுவதைவிட சம காலத்திலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எந்தக் குழந்தைகளாக இருந்தாலும், ஏன் பெண் குழந்தைகளை வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பது என் கருத்து.
இனிவரும் காலங்களில் என்று கூறுவதைவிட சம காலத்திலேயே ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. எந்தக் குழந்தைகளாக இருந்தாலும், ஏன் பெண் குழந்தைகளை வளர்ப்பதைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் கூடுதல் கவனம் தேவை என்பது என் கருத்து.
அன்று வெங்கட் விடுப்பு எடுத்திருந்தார், அஃப்தர் கொடுத்த கோப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எனக்கொரு சந்தேகம். என்னால் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை. திலீபனிடம் கேட்கையில் இது உன் ப்ராஜெக்ட் இல்லை மதி, வெங்கட்டிடம் சரியாக உனது வேலையைக் கற்றுக்கொள். வரும் திங்கள் முதல் உன் வேலை உனக்கு ஒதுக்கப்பட்டு விடும் என்று கூறி நகர்ந்துவிட்டார்.
எசல பெரஹர அல்லது எசலா பேரணி என்பது இலங்கையின் கண்டி நகரத்தில் நிகழும் ஒரு பௌத்த திருவிழா. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நடைபெறுவதாகக் கூறப்படும் இவ்விழா, மழை வேண்டியும் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்ட நாளை கொண்டாடுவதற்காகவும் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றைக்கு இலங்கையின் தனித்துவமான விழாவாக மாறியுள்ளதால், அச்சமயத்தில் வெளிநாட்டாரின் வருகை அதிகமாக உள்ளது.
லஞ்ச் வேண்டாம் என்று காலையில் என்கிட்ட சொன்னால் என்ன? அவள்தானே இன்னிக்கு லெமன் ரைஸ் கேட்டாள். அவளுக்கு மட்டும் தனியாகச் செய்து கொடுத்தால், இப்படிச் செய்கிறாள். என்ன பண்ணுவது? எல்லாம் நம் தலையெழுத்து என்று புலம்பிக்கொண்டே லஞ்ச் பேக்கை உள்ளே வைத்துவிட்டு, தேநீர் கோப்பையை எடுத்தாள். பால் ஏடுகட்டி ஆறிப் போயிருந்தது. என்ன வாழ்க்கை இது? ஒரு டீகூட நிம்மதியா குடிக்க முடியவில்லை.
மீட்டிங்கில் அமர்ந்திருந்த ஏனைய ப்ரோக்ராமர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தனர். முக்கியமான ப்ராஜெக்டின் டெட்லைன் நெருங்கிவிட்டது. அதற்காகக் கூட்டப்பட்டிருந்த மீட்டிங் அது. அதில்தான் தன்னை முன்னிலைப் படுத்தி கவன ஈர்ப்பு செய்துகொண்டிருந்தான் ஸ்ரீனிவாஸ்.
இன்னும் சொன்னால் உறவில் அழகானதே, ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அடையாளம் காண்பதுதான். யதார்த்தமான ஆரோக்கிய உறவின் முதல் படியே இங்கிருந்துதான் தொடங்குகிறது. அடுத்த கட்டம் எது யதார்த்தமானது, எது இல்லை என்பதை அடையாளம் காண்பது.
கருவுற்ற காலத்தில் கருவானது உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்து போதல் அல்லது அழிக்கப்படுதல் கருக்கலைதல் எனப்படும். உலக சுகாதார அமைப்பானது 500கிராம் எடையோ அல்லது அதற்கு குறைவான எடையோ கொண்ட கருவின் இழப்பை, கருச்சிதைவு அல்லது கருக்கலைதல் என வகைப்படுத்துகிறது.
“செழியன், நம்ம எல்லாரும் கப்பல்ல போய்க்கிட்டு இருக்கோம். அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, நீ எல்லாரும் கடல்ல விழுந்துட்டோம். நீ மட்டும்தான் கப்பல்ல இருக்க. நீ யாரையாவது ஒருத்தரைதான் காப்பாத்த முடியும். நீ யாரைக் காப்பத்துவ?” என்று கேட்டேன்
உலகம் மாறிக்கொண்டுதான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவதே இல்லை என்ற போலிக்குள் தன்னைச் சுருக்கிவிட்டது. கேட்பது ஒருபுறம் இருக்க, தானாகக் கொடுக்க வைக்கும் நீரோட்டத்தில் கலந்துவிட்டது. எத்தனை எத்தனையோ பெண் மீதான அடக்குமுறைகளை யதார்த்தம் என்று ஏற்றுக்கொண்டு கடந்துவிடுகிறது.
மாதவிடாய் செயலிகள் நம் உடல்நிலையையும் மனநிலையையும் நாம் புரிந்துகொள்ளும் முயற்சியில் உதவுகின்றன. எப்போது என்ன நடக்கும் என்பதன் பேட்டர்னைப் புரிந்துகொள்வதன் மூலம் ஓரளவிற்கு மாதவிடாய் கால சிரமங்களை எளிதாக்கலாம்.