UNLEASH THE UNTOLD

விருந்தாளியா... ஐயோ!

முன் அறிவிப்பு இல்லாமல் எந்த சொந்தக்காரர்கள் வீட்டுக்காவது போனோம், அவ்வளவு தான். உலகத்தில் இருக்கும் சாபங்கள் அனைத்தும் விருந்தினருக்கே சமர்ப்பணம். அது யார் இந்த காலத்தில் வீட்டில் வந்து தங்கிப் போகும் விருந்தினர், என்று நீங்கள் கேட்கலாம். மாமியாரும், மாமனாரும் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெகு காலம் ஆயிற்று. மாமியார் மாமனாராகட்டும், மருமகளாகட்டும் இவர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி பலவருடங்கள் கடந்துவிட்டது. மாற்றத்துக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள் அந்த வீட்டுக்கு அடுத்த தடவை செல்லும் தகுதியை இழந்தவர்களாகி விடுகின்றனர்.

பெண்ணுக்கு புடவை தான் வசதியா?

“நாங்கள் புடவை கட்டிக் கொண்டுதானே இத்தனை வருடமாக செய்கிறோம், எங்களுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லையே”, என்று மூத்த பெண்கள் சொல்லலாம். நீங்கள் புடவையை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டீர்கள், அதனால் உங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை, தோழியரே ! எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்தாது. அடித்தட்டுப் பெண்கள், புடவையினால் அதிகம் சிரமப்படுகிறார்கள். வயல் வேலை, கட்டிட வேலை செய்யும் பெண்களெல்லாம், புடவை வசதியாக இல்லை என்பதால், மேலே ஆண்களின் ஷர்ட் ஒன்றை அணிந்து கொள்கிறார்கள், முந்தானையை சரி செய்யும் தொல்லையிலிருந்து தப்பிக்க. ஆனால், ‘மொபிலிட்டி’ எனப்படும் சரளமாக விரைந்து நடக்கும், ஓடும் தன்மையை, புடவையும், உள்பாவாடையும் தடை செய்கின்றன.

கேளடா மானிடவா-2

கர்ப்பப்பை காரணமாக அதே வயது ஆணை விடச் சிறிய கிட்னியைக் கொண்டிருந்தாலும், சிறுநீரை அடக்கிக்கொள்ளும் ஆற்றல் பெறாவிட்டாலும், திருமணமாகி குழந்தை – அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு தும்மினாலும் சிறுநீர் கழிந்துவிடும் என்கிற உடலமைப்பைப் பெற்றிருந்தாலும், ஆணை விட அதிகபட்ச நியாயங்கள் இருந்த போதிலும், ஏன் எந்தப் பெண்ணும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை?

அம்மாவின் சேட்டைகள்

பஜாஜ் எம்80 பைக்கை ஓட்டிக்கொட்டு இருக்கும்போது பிருந்தாவுக்கு முன்னாடி போய்க்கொண்டு இருந்த பஸ் திடீரென நின்றது. பிருந்தா தோழரால் பிரேக் அடிக்க முடியவில்லை. வண்டி இன்னும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால், அவர் கியரைப் பிடித்துக் கொண்டு இருந்ததால், அவரால் பிரேக் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சில ஆட்டோக்காரர்கள் ‘கால்ல பிரேக்கைப் பிடி’ என்று கத்த, தோழர் பிரேக்கைப் போட, ஆட்டோக்காரர்கள் பைக்கைப் பிடிக்க – சரியாக இருந்தது.

சௌந்தரா

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.

இயற்கை எனும் சொர்க்கம்

மழை பிடித்தது. நிலா பிடித்தது. “நிலாச்சோறு மாற்றுதல்” என்று ஒரு விளையாட்டு 15 நாட்களுக்கு நடக்கும். வாசலில் முக்காலியில் சாணத்தால் செய்த பிள்ளையார் வைத்து, அன்று மாலை வீட்டில் சமைத்த உணவை எச்சில் படாமல் அவரவர் வீட்டில் இருந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அந்த முக்காலியைச் சுற்றிலும் வைத்துக் கும்மிப் பாடல் பாடி விளையாடுவார்கள். கும்மி முடிந்து நிலவொளியில் நிலவுக்குப் படைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவார்கள். அது முடிந்து தூக்கம் வரும் வரை விளையாட்டுகள் தொடரும். 15ஆவது நாள் மாவிடித்து உலக்கை வைத்து அந்த நிலாச்சோறு மாற்றும் வைபவம் முடியும்.

கடவுள் படைத்த முதல் பெண் ஏவாள் அல்ல, லிலித்!

கடவுள் படைத்த முதல் ஆண், ஆதாம். முதல் பெண்? ஏவாள் அல்ல, லிலித். தரையில் கிடந்த தூசிகளைச் சேகரித்து ஆதாம், லிலித் இருவரையும் உருவாக்கிய கடவுள் அவர்களுக்கு சுவாசத்தை வழங்கி உயிர் வாழச் செய்தார். இருவரையும் ஒன்றாக, ஒரே விதத்தில்தான் கடவுள் படைத்தார் என்றாலும் இருவரும் சிறிது காலம்தான் ஒன்றாக வாழ்ந்தனர். நீ எனக்கு சரிசமானமான உயிர் அல்ல என்றான் ஆதாம். உண்மைதான், நான் உன்னைவிடப் புத்திசாலி என்றார் லிலித். ஆதாமால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

தைரியமா இருங்கம்மா, நான் இருக்கேன்...

இப்போது மகனுக்கு 8 வயது. தன் தந்தையைப் போலோ, கணவனைப் போலோ மகன் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் பூங்குழலி. மகனுக்குப் படிப்புடன் அன்பு, அக்கறை, கஷ்டம், வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தாள்.

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண்- சுசீலா சுந்தரி

04.01.1902 அன்று வெளிவந்த ‘முசுலிம் கிரோனிக்கில்’ எனும் நாளேடு இன்னும் ஒரு படி மேலே போய், “புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம் கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள்-தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது” என்று சுசீலா பற்றி எழுதியது.

மாபெரும் தாஜ் கனவு- 2

மாணவர்கள் சிலரின் சலசலப்பு அருகில் கேட்டது. அனைவரும் கூட்டாக ஒரு சிறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும் அவர்கள் அருகில் சென்று என்ன என்று பார்த்தேன். அது தன் மகன் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்ட ஷாஜகான் இருந்த சிறை. அங்கு இருந்த ஒரு துளை வழியாக சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலை பார்த்தவாறு தன் இறுதி நாட்களை ஷாஜகான் கழித்த வரலாறு என் மனக் கண்ணில் தோன்றியது. கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளை கொண்ட உலக அதிசயம் ஒன்று அதை உருவாக்கியவனை சிறையில் இருந்து ஒரு துளை வழியே காண வைத்த விதியை என்னவென்று சொல்வது. அரசனே ஆனாலும் அவன் விதியை யாரால் மாற்ற இயலும் .