UNLEASH THE UNTOLD

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

தேவரடியார்கள் யார்-3

குலோத்துங்கச் சோழனின் மனைவி ஏழிசை வல்லபி தேவரடியாராக இருந்தவள். ஆய்குல இளவரசி முருகன்சேந்தியை, பாண்டிய நாட்டின் சிற்றரசன் ஒருவன் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு நிலதானம் செய்துள்ளான். முருகன்சேந்தி பார்த்திபசேகரபுரம் கோயிலின் தேவரடியாராக இருந்தவள். அவளை மணம் செய்து கொண்ட சிற்றரசன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் மணம் செய்து கொண்டது பரவை நாச்சியார் என்ற திருவாரூர் பதியிலார் மரபில் வந்த தேவரடியாரை. கோழிக்கோட்டின் அரசனான குலசேகர ஆழ்வார் தன் மகள் நீலாதேவியை ஸ்ரீரங்கத்து இறைவனுக்குச் சேவை செய்வதற்காக நேர்ந்துவிட்டிருக்கிறார்.

எங்களுக்கு உணவில் சமத்துவம் வேண்டும்

“எல்லா குடும்பத்துலயும் எப்பவும் உணவு சம பங்கீட்டை வகுப்புல பண்ற உணவுத்திருவிழா மாதிரி தினம் தினம் கொண்டாடணும். ஆண், பெண் இருவர்கிட்டயும் பேசி புரிய வைப்போம். இருவரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்”, என நம்பிக்கையூட்டினான் உதயா.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பும் கடமையும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கற மாதிரி சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி இன்னும் வேறு திட்டங்களை அறிவிச்சா நல்லா இருக்கும். பெண் குழந்தைகள் மீதான உணவு பாகுபாடு நீங்கி சமத்துவம் துளிர்க்கட்டும் சமூகத்தில்”, என்று முடித்தது டுமாங்கி.

மக்காவுத் தீவுகளில் 20 மணி நேரம்

அதுவரை உயர்ந்த கட்டடங்களுக்கிடையில் சென்று கொண்டிருந்த பேருந்து, இப்போது கடலின் மேல் இருந்த பாலத்தின் மீது செல்லத் தொடங்கியது. அழகென்றால் அழகு; அவ்வளவு அழகு!

விட்டு விலகுவதைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் உங்கள் இணையுடன் நன்றாகவே வாழ்ந்தாலும், பிரியும் யாரையும் கண்டு பரிதாபம் கொள்வதை விடுங்கள். எந்த உறவும் வாழ்நாளின் இறுதிவரை நீடிக்கும் என்ற கற்பனையை விடுங்கள். முட்டாள்தனமான தேவதைக் கதைகளை நம்பாதீர்கள்.

சுயம் (எனக்கே எனக்காக)

ஆண்கள் எல்லாருமே அப்படியா என்றால், எல்லாவிஷயங்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
அளவுக்கு மீறின அடிமை வாழ்வு கசந்து போகும் போது, வெளியேற நினைக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண்கள் கட்டுப்படுத்த நினைப்பது பிள்ளை எனும் அங்குசத்தைக் கொண்டு மட்டும்தான். பிள்ளைகளுக்காகவே தன் சுயத்தைத்தொலைத்து வாழும் பெண்கள் இங்கே எத்தனையோ. கோயில் யானைகள் போல, தன் பலம் அறியாமல் கட்டுண்டு கிடக்கும் பெண்களை கணக்கில் அடக்க முடியுமா?

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-3

அந்த அயோக்கியன் என்ன பண்ணினான் தெரியுமா?அவன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கோண்டு எனது ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் விட்டான். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அதற்காக அவனை திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை கண்டுகொண்டதாகவோ, என் பேதலிப்பை உணர்ந்தவனாகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச்சொல்லவேண்டுமானால் நல்ல பொருள்களெல்லாம் போனது மாதிரி இந்த ஆறு பென்னியும் போய்விட்டது. அது ஒரு ஏமாற்றமே!

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

10 வருடங்கள் முன் எங்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் எல்லாம் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்த போது வந்தவர்கள் வெறும் 5 பேர்தான், உள்ளூரிலேயே இருந்தாலும் குடும்பம், வீடு என்று சொல்லி வராமல் விட்டார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் அந்த சந்திப்பை கட்டாயம் வைத்தோம். இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்தான் அத்தனை மாணவிகளும் சேர்ந்த சந்திப்பு சாத்தியப்பட்டது. அனைவரையும் ஒரே நாள், ஒரே சமயத்தில் வர வைப்பதற்கு எங்களுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது.. இவையெல்லாம் பெண்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வளையங்கள். இதனால்தான் அவர்கள் மன உளைச்சலுக்கும் அதிகம் ஆளாகிறார்கள்.

கனடா எனும் கனவு தேசம்-3

எவ்வளவு வாடகை கொடுத்தாலும் வீட்டிலும் பாத்ரூமிலும் தண்ணீரைத் தரையில் ஊற்ற முடியாது, கூடாது. குளிருக்காக முழுவதும் அட்டையிலேயே 50-60 தளங்களில் வீடுகளைக் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது ஒரு வீட்டின் உட்புறம் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்தும், அட்டையில் தான் செய்திருப்பார்கள். அதனால் தரையில் தண்ணீர் ஊற்றினால், இந்திய மதிப்பில் 30 ஆயிரத்திற்கு பில்லை நீட்டுவார்கள்.

திமிறி எழு

ஒரு பாலியல் குற்றச்சாட்டை ஆராய்ந்து அது “ஆதாரமற்றது அல்லது பொய்” என்று முதலாளித்துவ அரச முகவர்களால் இலகுவாகக் கூறிவிட முடியும். ஆனால் ”ஆதாரமற்றது ” என்பது ”பொய்” என்ற அர்த்தமல்ல என்பதையும், இது பாலின நிலைப்பாடுகளால் பாதிக்கப்படக்கூடிய ஒரு முடிவு என்பதையும் நிரூபணம் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.