UNLEASH THE UNTOLD

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.

மாபெரும் தாஜ் கனவு

அதிசயம் என்பது தானாகவே உருவானது என்று எனக்கு நானே நிறைய கற்பனை செய்துவைத்திருந்தேன். நான் வளர வளர அதிசயங்கள் குறித்து சிறிது புரிதல் வந்தது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர் அடிக்கடி என்னை அழைத்து உலக அதிசயங்கள் என்ன என்று சொல்லச் சொல்வார். நானும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச் சென்று சொல்வேன். இப்படியாக தாஜ்மஹால் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர் ஊன்றத் தொடங்கியது.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-2

என் இனிய இளம் கார்ல், ஒன்றுமட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும். இங்கு இந்த வீட்டில் உன்னுடைய இந்த இனிய இதயம் உன்னையே சார்ந்து உன் மீது நம்பிக்கையுடனும், துயரப்பட்டும் முற்றிலும் உன் எதிர்காலத்தை நோக்கியே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பே, அன்புச்சுவையான இதயமே, நான் மறுபடியும் எப்படியாவது உன்னை சந்திக்க விழைகிறேன்.
துரதிர்ஷ்டவசமாக நான் இன்னும் அந்த நாளை குறித்துக்கொள்ளவும் இல்லை, குறிக்கவும் முடியவில்லை.

சவுந்தரி

இளவயது மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டுப் போவதா துறவறம்? அதற்கு என்ன பெரிதாக தைரியம் வேண்டி இருக்கிறது?

எங்களுக்கும் பாக்கெட் வேணும் டீச்சர்

பெண்களின் உடைகள்ல பாக்கெட் இல்லாததால பொருள்கள், பணம் போன்றவற்றை கையிலோ, தனிப்பையிலோ கொண்டுபோக வேண்டியிருக்கு. அதனால அது மேலயே கவனம் செலுத்த வேண்டியிருக்கு.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

என்ன வசதி இருந்தாலும் வேலைக்குப் போறதை மட்டும் விட்டுடாத. அதுதான் பெண்பிள்ளைங்களுக்கு அஸ்திவாரம் மாதிரி. எந்த சூழ்நிலையிலும் அது காப்பாற்றும்.

"பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள்" - ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண் இயக்குனர் க்ளோயி ஷாவ்

கேமரா, லாப்டாப் உள்பட அத்தனையும் சூறையாடப்பட்டிருந்தன. “ஒரு விதத்தில் அந்த சம்பவம் பணம், பொருள் மேலான நாட்டத்தை முற்றிலும் ஒதுக்க வழிசெய்தது” என்கிறார் க்ளோயி.

திமிறி எழு

மோதல் தொடர்பான பாலியல் வன்முறை என்பது புராண காலத்தின் அட்டூழியம் என்றும், இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில் யுத்த பேராயுதங்களில் ஒன்றாக பாலியல் இனிப் பயன்படுத்தப்படாது என்றும் கற்பிக்கப்படும் சமகாலப் போக்கும் கவனிக்கத்தக்கது. ரகசியத்தையும் களங்கத்தையும் முழுமையாக மூடி மறைப்பதற்கான ஒரு போர்வையைத் தயார் செய்யும் ஒரு உத்தி மட்டுமே இது. இது கூட்டு மனசாட்சியின் கறையைப் பிரதிபலிக்கின்றது.