UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

நகரத்தைத் தகர்க்கலாம்; கருத்துகளைத் தகர்க்க முடியாது!

முதல் உலகப்போரில் ராணுவ வீரர்கள் எப்படிப் பதுங்கு குழியில் இருந்து வாசித்தனர் என்பதை அஹ்மத் தெல்ஃபியிடம் கூறுவது அத்தனை உணர்ச்சிப்பூர்வமானது. கேப்டன்களாகப் பணிபுரியும் தங்கள் கணவருக்கு மனைவிகள் எவ்வாறு புத்தகத்தை அனுப்பினர் என்பதும், அதனைப் பதுங்குக்குழியில் இருந்து வாசித்த முறையும், பிரபலமான ஃபிராங்களின் சொசைட்டி 350 நூலகங்களைப் பாசறையில் தொடங்கியது யுத்தமுனையில் வீரர்கள் மனப்பிறழ்ச்சி அடையாமல் காத்தது என்றால் மிகையல்ல. அந்த வாசிப்புதான் தப்பியதற்கும் நிலை தடுமாறாதிருக்கவும் உயிர் வாழ்வதற்கும் தேவையாயிருந்தது.

நீண்ட காலம் உயிர் வாழும் பெருக்குமரம் எனும் அதிசயம்!

நெடுந்தீவிலுள்ள மற்றொரு பெருக்குமரம் ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக்கூடிய அளவுக்கு மரத்திற்குள் குகை போல, தாராள இடவசதியுடன், மிகுந்த குளிர்ச்சியுடன் காணப்படுமாம். போர்த்துகீசியம், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் பெருக்குமரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

மாணவர்கள் வன்முறை யார் பொறுப்பு?

40 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ள நமது மாநிலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவாக வந்துள்ள இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளே சரியல்ல என்ற கருத்தைப் பரவலாக்குவதும், 2 வீடியோக்களில் பெண் குழந்தைகளின் செயல்களை வைத்து பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தை விமர்சிப்பதும் எந்த விதத்தில் சரி?

தமிழணங்கு: பண்பாட்டுக் கைப்பற்றலின் ஓர் உதாரணம்

பண்பாட்டுக் கைபற்றலை, அதற்கு நேர்மாறான பண்பாட்டுப் பாராட்டுதல் என்னும் பரஸ்பர பகிர்வு கொண்டு நாம் எதிர்கொள்ளலாம். பண்பாட்டுப் பாராட்டு என்பது நம் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் கலை மற்றும் பண்பாட்டை, உண்மையிலேயே மதித்துப் பாராட்டுவதாகும். இது ஒரு பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலானது. இந்தப் பரஸ்பர புரிதலுக்கு, மற்ற பண்பாட்டின் வரலாற்றைக் கொஞ்சமேனும் அறிய வேண்டியது அவசியமாகிறது. இது ஒருவரின் சொந்த அல்லது மற்றவர்களின் வரலாற்றை அறிந்துகொள்வது என்று மட்டும் அர்த்தமல்ல. இது நமது அனைவரின் வரலாற்றையும் சேர்த்துக் குறிக்கிறது.

ஓசோன் பிரச்னையில் மூழ்கிக் கிடந்தோம்

“நம் வீடு தீப்பற்றி ஏரியும் போது என்ன செய்வோம்? அதையே இப்போது செய்ய வேண்டும். ஏனென்றால் , நம் தாய்மண்ணான பூவுலகு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது”.      

ஈழமும் இலங்கையும் பொருளால் ஒன்றே…

ஈழக்காசு, ஈழக் கழஞ்சு, ஈழச்சேரி, ஈழத்துணவு, ஈழ மண்டலம் என்று பல்வேறு சொற்றொடர்கள் தமிழர்களின் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பயன்பட்டுத்தான் வந்துள்ளன. ஈழ கேசரி, ஈழ நாடு போன்ற பத்திரிகைகள் தோன்றிய காலத்தில்கூட, ஈழம் என்பது முழுத் தீவையுமே குறித்தன. அரசியலில் இன வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தபோது தான், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்க, ‘தமிழீழம்’ என்ற சொல் அறிமுகமானது.

செல்லக்குட்டி ஜோ!

பெண்களுக்கு இன்னும் என்னதான் சமத்துவம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, ‘ஒரு நாட்டின் பிரதமராக வருவதற்கு இந்திராகாந்திக்குப் பிறகு ஒரு திறமையான பெண் கூடவா இல்லை’ என்ற ஒற்றைக் கேள்வி போதாதா? இப்படியாக அந்தத் திரைப்படம் பேச வேண்டியதை அழகாக, அதே நேரத்தில் சமூகத்தில் அழுத்தமாகப் பேசிச் சென்றது.

இளமை திரும்புதே...

தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது.

பெண்மொழி என்று ஒன்றுண்டா?

மொழி என்பது ஒன்றுதான். அதில் பெண்மொழி என்று ஒன்று தனியாக இல்லை என்று வாதிடுபவர்கள் இருக்கலாம். பெண்களுக்கான அரசியலை, பெண்களுக்கான வலியை, அவர்கள் உணர்வுகளோடு தொடர்புடைய பிரச்னைகளை, குறிப்பாக உடலரசியலைப் பெண்களே பேசும்போது அல்லது எழுதும்போது அதில் தெறிக்கின்ற உண்மையையும் ஆழத்தையும் பலராலும் அறிந்துகொள்ள இயலும்.