UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

நீலா

” பெரிம்மா அது கடன்தான்…என்னய விக்கல….இதுக்குதான் நா அப்பிடி சொன்னேன்…ஒங்க பணத்த அடுத்த ஆறு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவன்…ஒங்களுக்கு ஏதாச்சும் ஒதவி வேணும்னு கூப்டா வந்து செஞ்சி தாரேன். வேற ஒண்ணும் வேணாம்” ,எனச் சொல்லிவிட்டு தரதரவென இழுக்காத குறையாகத் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். தன்முன்னாலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு உட்படாத ஒன்று இந்த வீட்டில் நடக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள்.

ஒரு கதை சொல்லட்டா, ஃப்ரெண்ட்ஸ்?

“பொம்பளபுள்ள, ஆம்பளைக்கு சமமா போய் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து படிக்கறா பாரு” என்று மோவாயில் கை வைத்து அதிசயப்பட்ட ஊர்ப் பெருசுகளைக் கண்டுகொள்ளாமல், “ நீ நெறய படிக்கணும்” னு கழுத்தப்பிடிச்சு லைப்ரரிக்குள்ள தள்ளிவிட்ட அம்மாதான் இத்தனைக்கும் காரணம்.

மாபெரும் தாஜ் கனவு

அதிசயம் என்பது தானாகவே உருவானது என்று எனக்கு நானே நிறைய கற்பனை செய்துவைத்திருந்தேன். நான் வளர வளர அதிசயங்கள் குறித்து சிறிது புரிதல் வந்தது. பள்ளி நாட்களில் கூட ஆசிரியர் அடிக்கடி என்னை அழைத்து உலக அதிசயங்கள் என்ன என்று சொல்லச் சொல்வார். நானும் அதற்காகவே காத்திருந்தது போல ஓடிச் சென்று சொல்வேன். இப்படியாக தாஜ்மஹால் என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக வேர் ஊன்றத் தொடங்கியது.

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!

எங்களுக்கும் பாக்கெட் வேணும் டீச்சர்

பெண்களின் உடைகள்ல பாக்கெட் இல்லாததால பொருள்கள், பணம் போன்றவற்றை கையிலோ, தனிப்பையிலோ கொண்டுபோக வேண்டியிருக்கு. அதனால அது மேலயே கவனம் செலுத்த வேண்டியிருக்கு.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

என்ன வசதி இருந்தாலும் வேலைக்குப் போறதை மட்டும் விட்டுடாத. அதுதான் பெண்பிள்ளைங்களுக்கு அஸ்திவாரம் மாதிரி. எந்த சூழ்நிலையிலும் அது காப்பாற்றும்.

பெண் ஓவியம்

“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

திகைப்பு

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.