UNLEASH THE UNTOLD

உமா மோகன்

சிவகாமி

“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.

மலர்

“அழுவாத..ஏண்டா எங்க போயி வுழுந்த? மரத்துல ஏறுனியா? அம்மாட்ட சொல்லியிருக்கலாம்ல?” கூச்சமும் அழுகையுமாய் மலர் சொன்னதைக் கேட்டதும் ஆவேசமாகிவிட்டாள் ஹேமா.

வேதா

“நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா..நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”,

சின்னபாப்பா

“படிக்கிற புள்ளதான நீ, இவ்வொதான் அறிவில்லாம டமுக்கு அடிக்கிறாவொன்னா ஒனக்காச்சும் தெரிய வேணா? நாளக்கி பள்ளியோடம் போம்போது எல்லா பயலும் சிரிக்கமாட்டானுவ?”

சௌந்தரா

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.

நீலா

” பெரிம்மா அது கடன்தான்…என்னய விக்கல….இதுக்குதான் நா அப்பிடி சொன்னேன்…ஒங்க பணத்த அடுத்த ஆறு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவன்…ஒங்களுக்கு ஏதாச்சும் ஒதவி வேணும்னு கூப்டா வந்து செஞ்சி தாரேன். வேற ஒண்ணும் வேணாம்” ,எனச் சொல்லிவிட்டு தரதரவென இழுக்காத குறையாகத் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். தன்முன்னாலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு உட்படாத ஒன்று இந்த வீட்டில் நடக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள்.