UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

காகிதப் பை முதல் டயாபர் வரை

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார்.

ஓர் அறிவியலாளரை வரையுங்கள் பார்க்கலாம்!

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

பெண்ணடிமைத்தனத்தைத் தூக்கிப் பிடிக்கும் விளம்பரங்கள்

செஃப் தாமு வந்து சோப் பவுடர் விற்கிறார். அதைப் பெண்களிடம்தான் விற்கிறார். ஒரு மாறுதலுக்கு ஆண்களிடம் துவைத்துப் பார்க்கச் சொல்லி விற்றிருக்கலாமே! சமையல் பொருட்கள், சமையலறைச் சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றிற்குப் பெண்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள், தொழில்நுட்பக் கருவிகள், டிஎம்டி கம்பிகள், சிமெண்ட் போன்ற விளம்பரங்களில் ஆண்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏன் பெண்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லையா என்ன?

வியட்நாம் வாக்கிங் ஸ்ட்ரீட்டில் ஓர் இரவு

1993இல் Lonely Planet என்கிற பயணிகள் வழிகாட்டி நூல் இந்தத் தெருவை உலக சுற்றுலாவாசிகளுக்கு அடையாளம் காட்டி அறிமுகப்படுத்தியது. அதுவே சைகோன் சுற்றுலா வரலாற்றின் மைல்கல்லாக மாறியது. சுற்றுலாவாசிகளை மட்டுமல்லாது வியாபாரம் செய்ய வருபவர்களையும் ஹோ சி மின் கவர்ந்திழுக்க, 2009இல் இந்த இடம் மிக நெருக்கமான தெருவாக மாறியது. அதைத் தொடர்ந்த 20 வருடங்களில் இந்தத் தெரு பன்முகக் கலாச்சாரமிக்கத் தெருவாக, முடிவில்லாத பார்ட்டிகளாலும் சத்தங்களாலும் நிரம்பியது. ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் ஹாட் ஸ்பாட்டாக இந்த வாக்கிங் ஸ்ட்ரீட் மாறியது. பரபரப்பான நாளிலிருந்து மக்கள் இளைப்பாறுவதற்காக இதுபோன்ற இடத்தை அரசே வழங்குகிறது.

அந்த உறவுக்குப் பெயரென்ன?

தம்பதியர் தங்களுக்குள் ஒரு மௌனம் கலந்த பனிப்போர் ஆரம்பிக்கும்போதே உஷாராகிவிட வேண்டும். ஒருவருக்கு இன்னொருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். வெளியே எங்கேயோ யாரிடமோ மனம்விட்டுப் பேசுவதைத் தனது இணையரிடம் பேசினால் பிரச்னைகள் எழாது. பேசிச் சிக்கல்களைத் தீர்த்த காலம் போய், பேசினாலே சிக்கல்கள் வரும் காலத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. எல்லாருமே சாய்வதற்கு ஒரு தோளைத் தேடுகிறார்கள். அந்தத் தோள் ஆறுதல் மட்டுமே தரும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

திராவிடமும் தமிழும்

தமிழ் தேசியம் என்பதென்ன? தமிழின் பெருமைகளை ஊக்கப்படுத்துவதோடு, தமிழனின் அறம்சார் வாழ்வியல் முறைகளை மேம்படுத்துவதல்லவா தமிழ்த்தேசியம்?

உடையில் பாலின சமத்துவம்

“அவ்ளோ கஷ்டமா அப்போ படிக்கறது. இப்போல்லாம் அவ்ளோ சிரமம் இல்ல. அப்போ நாங்க ஜாலியா படிக்கறோம். அம்மா அப்போ தாவணி கட்டிருக்கீங்க, பொட்டு பாரு பெருசா நேர் பொட்டு வைச்சி அழகா இருக்கீங்கம்மா. இப்போ டீச்சரா வேலை செஞ்சாலும் ஸ்கூல்க்கு சுடிதார் போட்டுக்கிட்டுப் போறீங்க. அப்போ கொஞ்சம் பார்க்க கம்பீரமாவும் இருக்கீங்க. லவ் யூ ம்மா” எனக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான் விவேக்.

சனாதனம் உண்மையிலேயே தர்மமா?

1964இல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறியாளர் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ள அர்த்தம் சரியா? ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு இந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா? இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்? அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளை முன் வைக்கிறார். இந்தக் கேள்விகள் எல்லாமே அர்த்தபூர்வமாகவும், தர்க்கபூர்வமாகவும் அமைந்திருக்கின்றன. சனாதனத்தைப் பின்பற்றும் எவர் வேண்டுமானாலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கலாம்.

நேபாம் சிறுமியை மறக்க முடியுமா?

ஒரு வல்லரசு ஏகாதிபத்தியத்தை வெற்றிகொள்வதற்காக வியட்நாம் கொடுத்திருக்கும், கொடுத்துக்கொண்டிருக்கும் விலை மிக மிக அதிகம். பேராசைக்கான போர்களில் எப்போதும் அப்பாவி ஆடுகளே பலியாகின்றன.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.