UNLEASH THE UNTOLD

பாகுபாடுகளைக் களைவோம்

உடையில் பாலின சமத்துவம்

“அவ்ளோ கஷ்டமா அப்போ படிக்கறது. இப்போல்லாம் அவ்ளோ சிரமம் இல்ல. அப்போ நாங்க ஜாலியா படிக்கறோம். அம்மா அப்போ தாவணி கட்டிருக்கீங்க, பொட்டு பாரு பெருசா நேர் பொட்டு வைச்சி அழகா இருக்கீங்கம்மா. இப்போ டீச்சரா வேலை செஞ்சாலும் ஸ்கூல்க்கு சுடிதார் போட்டுக்கிட்டுப் போறீங்க. அப்போ கொஞ்சம் பார்க்க கம்பீரமாவும் இருக்கீங்க. லவ் யூ ம்மா” எனக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான் விவேக்.

இனி கியர் வண்டியை எடுக்காதே...

பெரியப்பா வீட்டுக்குப் போனதும் அங்கு அண்ணன்கள், பெரியப்பா எல்லாம் இந்த வண்டியை ஓட்டறியா எனச் சொன்னதும் வார்த்தையில் விவரிக்க இயலாத பெருமிதம் வந்தது. வண்டியைச் சொல்லிக் கொடுத்த ஜெகன் அண்ணன் வாரி அணைத்துக்கொண்டான். “சூப்பர் பாப்பா இப்படித்தான் தைரியமா விடாம ஓட்டணும்.” புதியதாகப் பிறப்பெடுத்த நெபுலாக்களெல்லாம் வாழ்த்துச் சொன்னது போல இருந்தது.

பெண் கியர் வண்டியை ஓட்டலாமா?

அப்பாவின் வண்டியில் சத்தமே எழாதபடி ஸ்டாண்டை எடுத்தாள். மெல்ல வண்டியைச் சற்று வீட்டைவிட்டுத் தொலைவில் தள்ளிக் கொண்டு போனாள். வண்டியில் ஏறி அமர்ந்தாள். முதல் முறை வண்டியை ஓட்டும்போது வயலில் விழுந்தது நினைவுக்கு வராமல் இல்லை. மனதை அதட்டி, ஸ்டார்ட் செய்தாள். முதல் கியர் போட்டு கிளட்ஜைவிட, ஆக்சிலேட்டரைத் திருப்ப வண்டி எளிதாகவும் ஸ்டைலாகவும் பறந்தது.

சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி...

“பொண்ணுங்க ஆண்களைவிட இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருக்குன்னு நீயே சொல்ற இல்லையாப்பா. அதனாலதான் பொண்ணுங்க கட்டாயம் சைக்கிள் கத்துக்கங்கன்னு நான் சொன்னது சரிதானே?”

கட்டாயம் மிதித்துப் பழக வேண்டும்!

“நல்லா கேளும்மா. இவங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சைக்கிள்ல சவாரி செய்யறாங்க. இவளுக்குத்தான் சைக்கிளே ஓட்டத் தெரியாதே அதான் வீட்லயே இருக்கா! பயந்தாங்கொள்ளி. இவளோட நாலு வயசு சின்னப் பையன் நானே எவ்ளோ சுலபமா ரெண்டு கைய விட்டுக்கிட்டு ஓட்டுறேன். இவ என்னடான்னா சைக்கிளையே தொடமாட்டிங்கிறா” என்று தன் அக்கா வாணியைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!” -2

“அதாம்மா பெரிய பொண்ணாயிட்டா அவங்க வீட்ல இப்படித்தான் கீழ உட்காரணுமாம். அங்க சேலத்துல வீட்ல விஷேசத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் பாய் போட்டாங்க. ஆண்களுக்கெல்லாம் சேர் போட்டாங்கன்னு மொறைச்சனே… இங்கயும் அப்படித்தான் பொண்ணுங்களுக்கு ஒரே கெடுபிடி. அதுதான் பெரியவங்களுக்குக் கொடுக்கற மரியாதையாம். அதான் குழி வெட்டி வைங்க உயரம் கொறைஞ்சா மரியாதை இன்னும் அதிகமா தந்தா மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன்.”

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!”

”எங்க பாப்பாவும் தம்பியும் வீட்டுக்கு வரமாட்டிங்கறாங்க? லீவ்னா அக்கா வீட்ல உரிமையா வந்து தங்குனாத்தான எனக்கு சந்தோசமா இருக்கும். எவ்ளோ முறை கூப்பிட்டிருக்கேன், பாப்பான்னா வரவே மாட்டிங்கிறா. சின்னதா இருந்த போதெல்லாம் வந்தா, இப்போ பெரியவளாயிட்டு சுத்தமா வரமாட்டிங்கிறா! எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள் பாரதி.