UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

இனச்சார்பு தான் இனப்படுகொலைக்கான தொடக்கப் புள்ளி

இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை.

படிக்கும்போதே திருமணம் செய்தால்...?

இது போன்றே சில மாணவியரின் வாழ்க்கையில் சவாலாக ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றையும் லட்சுமி டீச்சர் வழியாக அறிந்துகொண்டு, தன் உலகத்தை விரிவாக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்த பைரவி, தற்போது சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

விதவை, மலடியின் எதிர்ச்சொல் என்ன?

பெண் கருவுறாமையைக் குறிப்பதற்கு மலடி என்ற சொல் உருவானதே தவிர, ஆண் கருவுறாமையைக் குறிக்க ஒரு சொல் தமிழில் இல்லை. சிலர் ஆண் கருவுறாமையைக் குறிக்க ஆண்மையின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தச் சொல் சரியான சொல்லாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், பெண் கருவுறாமையைப் பெண்மையின்மை என்று நாம் கூறாதபோது ஆண் கருவுறாமையை ஆண்மையின்மை என்று கூறுவது பொருந்தவில்லை.

இந்தியக் குடும்பங்களின் சாபக்கேடு...

குடும்ப கௌரவம் மட்டுமே முக்கியமான ஒன்று என்று பேசும் சமுதாயத்தின் பிற்போக்குத்தனம் எப்போது மாறப் போகிறது? அந்தப் பெண்ணின் மன வேதனையையும் வலியையும் உணர முடியாத சமூகம் பேசும் பேச்சுதான் அந்தத் தந்தைக்குப் பெரிதாகப் போயிற்று. அப்படியாவது கௌரவத்தை நிரூபித்து, நிலைநாட்டி என்னதான் சாதிக்கப் போகிறார்கள்? 

இலங்கை அரசியலின் அணையாத வெம்மை

சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் உருவெடுத்தது. தொடர்ச்சியான போராட்டங்கள் 1983 க்குப் பின்னர் உள்நாட்டுப்போராக மாறியது. தமிழர்கள் கேட்ட, தமிழ் தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்ல, அடையாளத்துக்கான போராட்டம் என்பதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகநாடுகள்கூட புரிந்துகொள்ளவில்லை.

பதின்ம வயது பெண்களைப் புரிந்துகொள்வோம்; அவர்களுக்கான வெளியை உருவாக்குவோம்!

“நான் யோசிச்சு பார்த்தேன் மிஸ். இந்தச் சடங்கெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். அதுக்குச் செலவு பண்றத என் படிப்புக்குச் செலவு பண்ணுங்க. நான் படிக்கணும்ங்கிறதுதான் நான் கேட்டதோட நோக்கமே!” என்றாள் குயிலி.

மறுகன்னத்தைக் காட்டத்தான் வேண்டுமா?

எதிர்த்து நிற்க வேண்டும். நம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். எந்த அடிப்படையிலும் தன்னைத் தாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவன் என்று இனம்பிரிப்பதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதைப் போலவே இங்ஙனம் கட்டவிழும் வன்முறையைக் கண்டும் காணாமல் செல்ல இயலாது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை இனியும் காட்ட இயலாது. பிறரை அடிக்க முற்படும் முன் தன் கன்னத்தையும் அடிப்பவன் தயார் செய்துகொள்ளட்டும்.

கல்வித் துறைக்கும் பொறுப்புள்ளது...

பெற்றோருக்குப் பொறுப்பு உளதைப்போல, அரசுக்கும் நல்லதொரு கல்வியைக் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். அதற்காக ஏராளமான தொடர் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது

எடை குறைப்பு அறுவை சிகிச்சை தேவையா?

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை 2010லிருந்து 2040 வரை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், அதிக எடை கொண்ட 20 முதல் 69 வயதுடைய மக்களில் இந்தப் பிரச்னை இரட்டிப்பாகும். 

ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும்... டும்... டும்…

“மக்கள் நினைத்தால், ஆகாய விமானங்களைக் கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள், டாங்கிகளைக் கைகளால் புரட்டிப்போட்டுவார்கள்” என்ற ஃபிடல்காஸ்ட்ரேவின் வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருத்தமானவை என்பதை கண்முன் காண்கிறோம்.