இனச்சார்பு தான் இனப்படுகொலைக்கான தொடக்கப் புள்ளி
இனம், மொழி, மதம், சாதி, பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுடன் பாகுபாடின்றி பழகுவது தான் மிக ஆரோக்கியமான சமூகமயமாக்கல். ஆனால், உண்மையில் இந்தியாவில் ஆரோக்கியமான முறையில் சமூகமயமாக்கல் நிகழ்வதில்லை.