UNLEASH THE UNTOLD

Month: June 2024

   பாராட்டக் கற்றுக் கொள்வோம்...

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.

இதுதான் காதல் என்பதா!

அவன் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவள் இதழ்களில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. அவன் சற்று ஆசுவாசமடைந்தான்.
கடல் அரிப்பைத் தடுக்க போட்டிருந்த கற்பாறை மேல் அமர்ந்தாள். அருகிலிருந்த பாறை மேல் அவனும் அமர்ந்தான்.  
கடல் அவனைப் போல் ஓய்வின்றி பேசியது, எதையும் பேசாமல் அதை அமைதியாகக்  கேட்டு கொண்டு இருக்கும் கரையாக அவள்.

14. பலதரப்பட்ட குடும்ப நாவல்கள் 

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் இணையத்தில்தான் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார்கள். கள ஆய்வுகள் செய்து எழுதப்படும் அபுனைவுகள் அல்லது இலக்கியத்தரமான நாவல்களுடன் குடும்ப நாவல்களால் போட்டி போட முடியாது. போட்டி போடவும் தேவையில்லை. வெகுஜன வாசிப்பு என்பது இதுதான். இதில் எதார்த்தம் குறைவாகவும் கற்பனை கூடுதலாகவே இருக்கும்.

ஒரு மளிகைக் கடைக்காரர் மனைவியின் சா(சோ)தனைகள்

கடின உழைப்பு, நேர்மை, பொருட்களின் தரம், நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்ப விவரம் தெரிந்திருத்தல், அவர்களோடு இணைந்து பழகுதல் போன்றவை ஒரு வணிக வெற்றியின் தாரக மந்திரம். எல்லாத் தொழில்களும் கொண்டாட்டமும் திண்டாட்டமும் நிறைந்ததே. அது என் அம்மாவிற்கும் பொருந்தும் கடையின் பெயர் கலையரசி (இறந்து போன என் அக்காவின் பெயர்) ஸ்டோர்ஸ். வழக்கில் விக்டர் கடை. அப்பாவைவிடக் கூடுதல் நேரம் உழைத்த அம்மாவின் பெயர்? எங்கள் நினைவுகளில் மட்டுமே!

கொஞ்சம் மெனக்கெடுங்களேன்...

நீங்கள் மெனக்கெட மெனக்கெட நீங்களும் அவர்களுக்கு முக்கியமானவர்கள் ஆவீர்கள். உங்களுக்காக அவர்கள் மெனக்கெடுவார்கள்.

திருச்செந்தூர்க் கோயில் நிர்வாகத்தை நம்பூரிகள் எப்போது கைப்பற்றினர்?

அகிலத்திரட்டு எழுதப்பட்ட, 1840ஆம் ஆண்டுக்கு பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து, அய்யா வைகுண்டர் இறந்த செய்தியும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளும் அகிலத்திரட்டு அம்மானையில் காணக்கிடைக்கின்றன

உஷ்… கேள்வியெல்லாம் கேட்காதே! பாவம் வந்து சேரும்!

உயர்ந்த குலப் பிறப்பு என்பதை எண்ணி இங்கே பெருமை பீற்றிக்கொள்ள எதுவுமே இல்லை. குறிப்பாகப் பெண்கள் தங்கள் சுய சாதிப் பெருமையை மூளை முழுவதும் தூக்கிச் சுமப்பதைப் பார்க்கும்போது அது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

தேசியவாதம் – இடதா, வலதா?

எதிர்பாராதவிதமாக, புலம்பெயர்ந்தவர்களுக்கு வரும் பாதுகாப்பின்மை உணர்வுக்குத் தீர்வே கிடையாது. உதாரணத்திற்கு, புலம் பெயந்த ஒருவரின் அடையாளங்களைப் பார்ப்போம். ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கிறார்; அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் தமிழ்; குடியுரிமை அடையாளம் இந்தியன். அதே நபர் கனடாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற பின் அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் இன்னமும் தமிழ்தான். ஆனால், அவரது குடியுரிமை கனடியன். எனவே, அடையாளம் எதுவாகவும் மாறலாம்; அதன் மூலம் ஒடுக்குமுறைகள் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் ஒடுக்குமுறை நிகழும்பட்சத்தில், சமூகநீதியின் வழியில் தீர்வு காண வேண்டும்.

பாலினம் அறியலாமா?

மரபணு ஆலோசனை மையங்களுக்கென்றே தனி நெறிமுறைகளும் உண்டு. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தாலோ அல்லது சந்தேகத்தின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளும் சிகிச்சைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க‌ வேண்டும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்தக் குழந்தைதான் வேண்டும் என்று பாலினத்தின் அடிப்படையில் எந்தத் தனிப்பட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளக் கூடாது.